Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகின் வருங்காலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் வருங்காலம்

பிறப்பின் இறப்பு

1983 இல், டெர்ரி எர்வினும் அவர்தம் பூச்சியல் குழுவினரும் பனாமா மழைக்காட்டில் ஒற்றை மரத்தின் மீது கொடிய பூச்சிமருந்தை அடித்தார்கள். சில பூச்சிகள் ஊர்ந்து வெளியேறின. சில இறந்து நிலத்தில் விழுந்தன. எர்வின் அணியினர் அந்த மர இனத்துக்குரியதாக மட்டுமே 163 தனித்தனி வண்டினங்கள் வாழக் கண்டனர். அந்த மழைக் காட்டில் 50000 தனித்தனி மர இனங்களில் தாராளமாக 80 இலட்சத்துக்கு மேற்பட்ட புது பூச்சியினங்கள் வாழந்து வரக் கூடுமென அவர் கணக்கிட்டார். பூச்சிகள், சிலந்திகள், வேறுவகைக் கணுக்காலிகள் ஆகியவற்றின் எண்ணிக்கையில் வண்டுகளின் பங்கு 40 சதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மழைக்க் காட்டுத் தழையிலை மேற்பரப்பில் வாழும் பூச்சியி னங்களின் எண்ணிக்கை மட்டும் நிலத்தில் வாழும் பூச்சியினங்களின் எண்ணிக்கையைப் போல் சுமார் இரு மடங்கிருக்கும். குழுக்குழுவாக மட்டுமே மூன்று கோடி வகைப்பட்ட பூச்சியினங்கள் இருக்கக் கூடுமென எர்வின் கணக்கிட்டார். பெரும்பாலும் இந்தக் கணக்கீடு இருக்கக்கூடிய எண்ணிக்கையை வைத்துச் செய்த மதிப்பீடுதான் என்றாலும் புவியில் இருக்கக்கூடிய பூச்சியின வகைகளின் மிக நெருக்கமான மதிப்பீடு ஒரு கோடியிலிருந்து பத்து கோடி வரை இருக்கும் என்ற முடிவுக்கு அறிவியலர்களை இட்டுச் சென்றுள்ளது.

நாம் பற்பல வழிகளிலும் சுற்றுச்சூழலுக்குச் செய்து கொண்டிருக்கும் தீங்கு இந்த உயிரினங்களில் பேரழிவைத் தோற்றுவிக்கிறது. புதை படிவப் பதிவுகளுடன் ஒப்பு நோக்கின், அழிந்து வரும் வீதங்கள் இப்போது ஆயிரம் மடங்கு! மேலும் எதிர்பார்க்கப்படும் அழிவு வீதங்கள் இன்றைய வீதங்களைப் போல் 10 மடங்காகும். நிகழ் வீதங்களில், அடுத்த இருபது நாற்பது ஆண்டுகளில் நாம் 20 விழுக்காட்டு உயிரினங்களை இழந்து விடுவோம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பல உயிரினங்களுக்கு முழுக்க மழைந்து விடும் ஆபத்து இதுவரை வந்து விடவில்லை என்றாலும் அவை மரபியல் வகையில் மோசமாகத் தளர்வடைந்து வருகின்றன. எனவே அவற்றின் இனப்பெருக்கத் திறனும் தகவமைத்துக் கொள்ளும் திறனும் மென்மேலும் பழுதுற்று வருகின்றன. இந்தப் படிமலர்ச்சித் திறஇழப்பு ஷபிறப்பின் இறப்பு| எனப்படுகிறது. உயிரினங்கள் அவை ஒருபோதும் மீண்டும் பிறக்கவே முடியாதபடிப் பாதிக்கப்படுகின்றன.

இயற்கை மற்றும் இயற்கைவளக் காப்புக்கான பன்னாட்டுச் சங்கம் எனப்படும் உலகக் காப்புச் சங்கம் தனது உயிரினங்கள் உய்வு ஆணையம் என்ற அமைப்பின் வாயிலாக நான்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக உயிரினங்கள், துணை உயிரினங்கள், வகையினங்கள் ஆகியவற்றின் காப்பு நிலையை, ஏன், தேர்ந்தெடுத்த சிற்றினங்களின் காப்பு நிலையைக் கூட உலகளவில் மதிப்பீடு செய்து வருகிறது. வௌ;வேறு வகை உயிரினங்களில் பலவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதையும், அழிவை நெருங்கி விட்டதையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

மீன்கள்

ஒரு மட்டத்தில், உயர் வளர்ச்சியடைந்த எந்திரமய மீன்பிடி வழிமுறைகள் உலகெங்கும் கடலுணவு விரும்பிகளுக்கு பெரு விருந்து படைத்து வருகின்றன. ஆனால் இத்தகைய உயர்திற மீன்பிடி வழிமுறைகள் விரைவாகக் கடலிலிருந்து மீன்களை காலி செய்து வருகின்றன. மீன்பிடி ஆழம் தொடர்ந்து மென்மேலும் கீழே சென்று கொண்டிருக்கிறது. இதனால் கடல்பிடி மீன்கள் ஆண்டுக்காண்டு குறைந்து வருகின்றன. சில நேர்வுகளில் குறிப்பிட்ட மீனினத்தின் வீழ்ச்சிக்கு இது வழி செய்துள்ளது.

பான்டா கரடிகள்

பான்டா கரடிகள் காழும் ஷபுதைபடிவுகள்| என அழைக்கப்படுகின்றன. அவை முப்பது லட்சம் ஆண்டுகளாகத் திரிந்து வருவதே காரணம்! இவற்றுடன் சேர்ந்து பிழைத்திருந்த ஸ்டெகோடான் யானை (பெரிய தந்த யானை), சீனக் காண்டாமிருகம் போன்ற பல உயிரினங்கள் ஏற்கெனவே அழிந்து விட்டன. பான்டா கரடிகள் சீனத்தில் மட்டுமே உள்ளன. மிச்சமிருப்பவை வெறும் 1600.

மாக்குரங்குகள்

நமது மூதாதைகளைக் காக்க ஒன்றும் செய்யாது போனால் அடுத்த சில பத்தாண்டுகளில் அவை அழிந்து போவதே முடிவாக இருக்கும். கொரில்லாக் குரங்குகளும், சிம்பன்சி மனிதக் குரங்குகளும், போனோபா குரங்குகளும் வேட்டை, வாழ்விட இழப்பு எபோலா வைரஸ் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. உராங்குட்டான் குரங்குகள் காடழிப்பால் பாதிக்கப் பட்டுள்ளன. உராங்குட்டான் குரங்குகள் காடழிப்பால் பாதிக்கப்பட்டுள்ள. உலக் கானுயிரி நிதியம் என்ற அமைப்பின் முயற்சிகளையும் மீறி 700 கொரில்லாக்கள் மட்டுமே மிஞ்சியுள்ளன. மனிதக் குரங்குகள் 25 நாடுகளில் 4 இல் இப்போது அழிந்து விட்டன.

யானைகள்

ஒரு காலத்தில் ஆப்பிக்கா முழுதும் இடம்பிடித்திருந்த வீறார்ந்த ஆப்பி;ரிக்க யானைகள் இன்று மூன்றில் ஒரு பங்கு பகுதியில்தான் வாழ்கின்றன. அவை சகாராவிலிருந்து ஒழிந்து விட்டன. கள்ளத் தந்த வணிகமும் இயற்கை வாழிட இழப்புமே முதன்மைக் காரணங்கள். இயற்கை வாழிட இழப்பால் ஆசிய யானைகளும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆபத்தில் சிக்கியுள்ள உயிரினங்கள் குறித்து இயற்கை மற்றும் இயற்கை வளங்களின் காப்புக்கான பன்னாட்டுச் சங்கத்தின் சிவப்புப் பட்டியலில் இரண்டுமே உள்ளன.

கடலாமைகள்

பத்து கோடி ஆண்டுகளாகக் கடலில் பயணப்பட்டு வந்துள்ள கடலாமைகள் இப்போது ஆபத்தில் மாட்டிக் கொண்டுள்ளன. ஏழு கடலாமை இனங்களில் ஆறு ஆபத்திலுள்ள அல்லது கவலைக்கிடமான நிலையில் உள்ள பட்டியலில் இருக்கின்றன.

காண்டாமிருகங்கள்

ஒரு காலத்தில் 12 காண்டாமிருக இனங்கள் இருந்தன. ஆனால் இன்று ஐந்து இனங்களே உள்ளன. இவை அனைத்தின் நிலையையும் ஆபத்தில் உள்ளது.

புலிகள்

புலிகள் இன்று அவற்றின் தொடக்க வரலாற்று வட்டாரத்தில் ஐந்து விழுக்காட்டிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. பல காப்புத் திட்டங்களையும் மீறி புலித்தொகையை மீட்பது கடினமாக உள்ளது.

பறவைகள்

பறவைகள் திணைமவில் அமைப்பின் உயிர்நாடிப் பணியை நிறைவேற்றுகின்றன. காட்டாக, வடகிழக்கு பிரேசிலின் அட்லாண்டிக் காட்டில் விலங்குள் விதை பரப்புவதை நம்பி இனப்பெருக்கம் செய்யும் மரங்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு ஆபத்தில் உள்து ஏனென்றால் அவை நம்பியிருக்கும் பழந்தின்னிப் பெரும் பறவைகளின் நிலை வாழ்விட இழப்பாலும் மிகை வேட்டையினாலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

தாவர இனங்கள்

தாவர இனங்கள் அனைத்திலும் 3விழுக்காடு அழிந்து போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தாவர வகைப்பாட்டியலில் அழிந்து போகும் ஆபத்தைப் பெரிதும் எதிர்நொக்கியிருப்பவை வித்து மூடியிலி வகுப்புத் தாவரங்கள்தாம். 23 தாவர இனங்கள் உடனடி அழிவை எதிர்நோக்கியுள்ளன. ஆயிரத்தாண்டுத் திணைமவியல் அமைப்பின் ஆய்வறிக்கை செய்துள்ள மதிப்பீடுகளின்படி, 2080 வாக்கில் 22 சதம் தாவர இனங்கள் கவலைக்கிடமான நிலையை அடைந்திருக்கும்.

நிலக்கரிச் சுரங்கத்தில் இன்னிளந்தேறல்

இருபதாம் நூற்றாண்டில் வெகுகாலம் வரை இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் மீத்தேன், கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட நச்சு வாயுக்களை அறிந்து கொள்வதற்கு ஒரு ஷமுன்னெச்சரிக்கைச் சைகைக் காட்டியாக| இன்னிளந்தேறல் பறவைகளைச் சுரங்கத்துக்குள் கொண்டு சென்றனர். இந்தப் பறவைகள் இவ்வாயுக்களால் விரைவில் பாதிப்புறக் கூடியவை என்பதால் சுரங்கத் தொழிலாளர்களுக்கு முன்பே பிணியுறும். எனவே அவர்கள் தப்பித்துக் கொள்வதற்கோ, காப்பு மூச்சுயிர்ப்hன்களை மாட்டிக் கொள்வதற்கோ அவகாசமிருக்கும்.

பல உயிரினங்கள் அழிந்து வருவது நாம் நம்பியுள்ள பல திணைமவியல் அமைப்புகளின் வீழ்ச்சியைக் காட்டுகிற முன்னேச்சரிக்கைச் சைகைக் காட்டியே என அறிவியலர்கள் உடன்படுகின்றன.

நமக்கு என்ன உரிமை உள்ளது?

இப்படிப்பட்டப் பேரழிவுகள் ஒன்றும் புதிதல்ல, கடந்து காலத்திலிருந்து நடந்து வருபவையே எனச் சொல்பவர்கள் உண்டு. உண்மை என்னவென்றால் இந்தப் பேரழிவுள் எரிமீன் மோதல் போன்ற இயல்பல்லாப் பேரிடர் நிகழ்வுகளால் ஏற்பட்டன. நாம் இப்போது உயிர்களின் முந்நூற்று எண்பது கோடி ஆண்டு வரலாற்றில் மற்றோர் உயிரினத்தால் நிகழ்த்தப் படும் முதல் பேரழிவை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அந்த உயிரினம் ஹோமோசேப்பியன்கள் எனப்படும் நாமே.

காந்தியார் சொன்னாராம் வாழ்வதே கூட ஒரு வன்முறைவடிவந்தான். நாம் உயிர்க்கொலை செய்துதானே உயிர் வாழ வேண்டியுள்ளது. ஆனால் உயிரினங்கள் மீண்டும் பிறக்கவே பிறக்காதபடி அவற்றைக் கொன்றழிக்கும் செயலின் பொள் என்ன?

இந்தக் கோளிலான் உயிர்களின் மீது நாம் செலுத்தும் தாக்கத்தை நமக்கு நாம் எப்படி நியாயப்படுத்திக் கொள்கிறோம்? துருவக் கரடி இன்று நம்மிடம் கேட்பதாகக் கொள்வோம். பயணம், மின்சாரம் என நீங்கள் சுகம் அனுபவிப்பதற்காக என் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட உங்களுக்கு என்ன உரிமை உள்ளது? இதற்கு நம் விடை யாது?

இன்று இவ்வினாக்கள் நமக்கு கேட்பதில்லை. ஏனென்றால் இறந்து கொண்டிருப்பவை ஊமைகளாக மடிகின்றன. நமக்கக் கேட்கும் ஒரே குரல் நமது உளச்சான்றின் குரலாகத்தான் இருக்கும். காலத்தோடு நாம் இதற்குச் செவி மடுக்க அணியமானால் நாம் அவற்றைக் காப்பாற்றி நம்மையும் காப்பாற்றிக் கொள்ளக் கூடும்.

நன்றி: சமூக நீதி தமிழ்தேசம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.