Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகின் அபாயகரமான பயங்கரவாத அமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் அபாயகரமான பயங்கரவாத அமைப்பு

பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய போரை நடத்தப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பயங்கரவாதம் என்றால் என்ன? என்ற கேள்வி மக்களிடம் வலுவாக எழுந்துள்ளது. பின்லேடனை சர்வதேச பயங்கரவாதியாக சித்தரித்து அமெரிக்கா இசுலாமிய நாடுகளை பாடாத பாடு படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் இன்றைக்கு பிரதமர் மன்மோகன் சிங் மகாராஷ்டிராவில் உள்ள விதர்பா மாவட்டத்திற்கு சென்று, அங்குள்ள பாதிக்கப்பட்ட விவாயிகளை சந்தித்து, அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார். விதர்பாவில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது. கடந்த 6 மாதத்தில் மட்டும் 600 விவசாயிகள் தற்கொலைக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலைக்கு உள்ளாகியுள்ளனர்.

இது மகாராஷ்டிராவில் மட்டுமல்ல; ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மகாராஷ்டிரா என இந்தியாவில் முக்கியமான விவசாய மாநிலங்களில் இது பெருவாரியாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக கர்நாடகாவில் மட்டும் கடந்த ஐந்தாண்டுகளில் 5000த்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டனர். இது குறித்த விரிவான அலசலை நேற்றைய தினம் இரவு 10.30 மணிக்கு சி.என்.என்.ஐ.பி.என். தொலைகாட்சியும், என்.டி.வி.யும் வழங்கின.

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக விவசாயிகள் தற்கொலை என்பது தலைப்புச் செய்திகளாக வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. ஒரு சில மீடியாக்கள் இந்த விஷயத்தை மக்கள் மத்தியில் கொண்டு வந்தாலும், இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தை தினந்தோறும் பக்கம், பக்கமாக படத்தை போட்டு ஏதோ இந்தியாவில் எதிர் புரட்சி நடப்பதுபோல் சித்தரித்த பத்திரிகை - மீடியா உலகம், இந்திய விவசாயிகளின் தற்கொலையை கண்டு கொள்வதேயில்லை. இதுதான் இவர்களின் மீடியா தர்மம்.

சரி! இதற்கு என்ன காரணம், உலக வர்த்தக அமைப்பின் கட்டளையை ஏற்று இந்தியா முழுவதும் பணப் பயிர் உற்பத்திக்கு ஊக்குவித்ததே இந்த சோக நிலைக்கு இந்திய விவசாயிகளை தள்ளியுள்ளது. போல்கார்ட்டு என்றுச் சொல்லக்கூடிய பருத்திகளை உற்பத்தி செய்யும் இந்திய விவசாயிகள், தற்போது தங்களது நிலத்தில் வேறு எந்த பயிரையும் விளைவிக்க முடியாத சோகத்தில் மூழ்கியுள்ளனர். அது மட்டுமின்றி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலைகள் கிடைக்கவில்லை. ஏன் அவர்கள் செலவிட்டதில் பாதி தொகை கூட கிடைக்காத சூழ்நிலையில் அவர்களது எதிர்காலம் இருண்டு கிடக்கிறது. இந்த சூழலில் அவர்களுக்கு தற்கொலையை தவிர இந்திய அரசும் - மாநில அரசும் வேறு மாற்று வழியை இதுவரை காட்டவில்லை.

மறுபுறம் இந்தியா உலகின் வல்லரசு நாடாக போகிறதாகவும், ஐ.நா.வில் நிரந்தர இடம் பெறப்போவதாகவும், அது அணு ஆயுதத்தில் வல்லமைப் படைக்கப்போவதாகவும் கூக்குரல் எழுப்பும் ஓநாய்களின் குரலும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஓநாய்களின் சத்தம் அதிகமாக இருப்பதால், தற்கொலை செய்துக் கொள்ளும் இந்திய விவசாயிகளின் இறுதி முனுமுனுப்புகள் யார் காதிலும் விழுவதில்லை.

நாள்தோறும் தற்கொலை கணக்கை - புள்ளி விவரமாக வெளியிட்டு வரும் மகாராஷ்டிரத்தில் உள்ள நாக்பூர் இன்றைக்கு மேல்தட்டு மக்களின் சொர்க்கமாக திகழ்ந்து வருகிறது. ஆம்! அங்குதான் சங்பரிவாரின் தலைமையமும் இருக்கிறது. என்.டி.டி.வி. நிருபர் காபி கபேவில் இருந்து ஒரு மனித பன்றியை பேட்டி கண்டபோது, அது கூறியது இந்த தற்கொலை சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று!

இவர்கள்தான் இந்தியாவை ஒளிமயமாக்கப்போவதாக கூறிக் கொண்டு கொழுப்பெடுத்து திரிந்துக் கொண்டிருக்கிறார்கள். இரவு உல்லாச விடுதிகளும், கேளிக்கை மையங்களும் இன்னும் பல உல்லாச விஷயங்களிலும் பொழுதை கழித்துக் கொண்டிருக்கும் கொழுப்பெடுத்து தெரியும் மனித பன்றிகள் இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல், சதையை மட்டும் போட்டுக் கொண்டு எதைச் சாதிக்கப்போகிறார்கள்!

உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பயங்கரவாத சம்பவங்களில் நடைபெறும் கொலைகளை விட, மிக அதிகமான பேரை இந்தியாவில் கொன்று வருவது உலக வங்கியின், உலக வர்த்தக அமைப்புன், உலகமயமாக்கலின் கொள்கையே! எனவே உலகின் மிக அபாயகரமான பயங்கரவாத அமைப்பான உலக வர்த்தக அமைப்பை வீழ்த்தாமல் மக்களின் வாழ்க்கைக்கு விடிவு இல்லை.

http://santhipu.blogspot.com

உப்பிடி இருக்கு நிலமை அங்க...

இந்தக்கேவலத்தில இஞ்ச வந்து கூலிக்கு மாரடிக்கிறது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.