Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உன்னை வாழ்த்தி பாடுகிறேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை வாழ்த்தி பாடுகிறேன்.

-சண்முகம் சிவலிங்கம்

எனக்கு மனம் கொதித்தது. நாங்கள் பியர் குடித்து மகிழ்ந்த வாடி வீடு இப்போது இந்தியன் வசம் ஆகிவிட்டதே என்று.

எதிரே கடல். ஓங்கி எழும் அலைகள் தெரிகின்றன. அலைகளின் இரைச்சல் நிரந்தரமாக எங்கும் நிறைந்திருக்கிறது. கடல் காற்று வீசிச் சூழன்று இதோ இந்த அரசமரத்தில் மோதித் துடிக்கிறது.

அரசமரத்தை ஒட்டியிருக்கிற ‘போச்’ இல் நிற்கிற ஜீப் யாருடையது? அதுதான் அந்த மேஐரின் ஜீப்பா? மேஐர் இப்போது எங்கே இருப்பான்?

‘போச்’ ஐ தொட்டிருக்கும் போட்டிக்கோவை மையமாகக் கொண்டு இரண்டு பக்கமும் ஓடும் அந்த கொரிடோர்’களில் நாம் எத்தனை முறை ஸ்ற்றூலையும் கதிரைகளையும் இழுத்துப் போட்டு கடலையும் காற்றையும் இடையில் உள்ள வெள்ளை மணல் வெளியையும் அனுபவித்திருப்போம்! அந்த மேஐர் கூட இப்போது அந்த கொரிடோரில் ஒரு ஈஸி ஸெயேரில் அமர்ந்திருக்கக் கூடும்.

கொரிடோரின் கிறாதியினூடாக எவரும் இருப்பது தெரியவில்லை. கொரிடோரை அடுத்துள்ள அறைகளில் ஒன்றில் அவன் இருக்கக் கூடும். ஒவ்வொரு பக்கமும் இரண்டு அறைகளா? மூன்று அறைகளா? எட்டிப் பார்த்தால் இவனுகள் எதையாவது நினைக்கக் கூடும். போட்டிக் கோவில் இருந்து உள்ளே போகின்ற நடு இடை வழிகளில் எல்லாம் எவ்வளவு நடமாடிருக்கிறோம்! பெரியதம்பியுடன் பேச்சு மூச்சற்றுப் போன இரவுகள்! இப்போது எல்லாம் இந்தியனுகளின் பிடியில்.

சரிந்து போகின்ற மூன்று மணி வெயிலாயினும் உஸ்ணமாகத்தான் இருக்கிறது. மத்தியானம் சாப்பிட்ட கையோடு வேகா வெயிலில் முருகவேளின் வேண்டுகோளுக்கிணங்கி வந்து சேர்ந்திருக்கும் ஐந்து ஊர்களைச் சேர்ந்த பிரமுகர்கள். இன்னும் எவ்வளவு நேரத்திற்கு இவர்கள் இந்த அரசமரத்தின் கொத்தி குதறப்பட்ட நிழலை அண்டியும், அதில் குந்தியும், குமைந்தும் அலுக்க வேண்டும்? எங்கே அந்த முருகவேள்?

வேட்டி கட்டி சேர்ட்டை வெளியே விட்ட முருகவேள் இரண்டொரு இழைகள் நரைத்துப் போன தாடியை தடவித் தடவி கூட்டங்ககூட்டமாக பிரமுகர்களை சந்தித்து பேசிக்கொண்டிருக்கிறான். நான் பிரமுகர் என்ற அளவில் அல்ல பிள்ளயார் கோயில் தாக்குதலால், தேடப்படும் ஒரு போராளியின் பிதா என்றவகையில். எனினும் அவனைப் பார்க்க எனக்கு எரிச்சலாக இருந்தது. நண்பனேயாயினும் அரசியல் தலைமையில் எனக்கு அப்படி ஒரு அலேர்ஐp. என்னையே அவன் தன் அரசியல் குருவாக சொல்லிக் கொண்டு திரிகிறான். எனினும் அரசியல் தலைமையில் எனக்கு எப்படியோ ஒரு அலேர்ஜி.

‘அரசியல் குரு’ என்ற நினைவில் என் எண்ணங்கள் என்னை எங்கெல்லாமோ கொண்டு செல்கின்றன. அந்த நீண்ட நினைவுகளின் பின்னால் செல்ல எனக்கு முடியாது. சிந்தனையை திசை மாற்றவே விரும்புகிறேன்.

என்னையே சுற்றி வட்டமிடுகிற சிந்தனையை புறங்கையால் தள்ளி எட்டி உதைக்கிறேன். என் சிந்தனையை புறந்தள்ளும் ஒரு பராக்குக்காக வாடி வீட்டு வட்டாரத்தை சுற்றிவரப் பார்க்கிறேன். வாடி வீட்டை சுற்றி முன்னிலை காவலரன்கள் பல. ஒவ்வொரு காவலரணும் என் கன்னி நிலத்தை கற்பழிக்கின்ற ஒரு காமுகனின் குறியாகவே எனக்குத் தெரிகிறது. என் பூமியைக் குத்திக் கிழித்து போட்டப்பட்டிருக்கும் இந்த செங்கல் கூடுகள் என் வாடி வீட்டு வட்டாராத்தை எவ்வளவு அசிங்கப் படுத்துகின்றன! ஒவ்வொன்றும் சீழ் வடியும் பாரிய சிரங்காக என் மனதில். இடையிடையே பீரங்கிகள் வேறு! எதற்கு இந்தப் பீரங்கிகள்? எவருடைய சூத்தாம்பிட்டியை நோக்கி இவை வைக்கப் பட்டிருக்கின்றன? இந்தப் பீரங்கிகளைக் கண்டு எங்கள் பிள்ளைகள் பயந்து விடுவார்கள் என்றா? இந்தப் பீரங்கிகளினால் எங்கள் மக்களை பீதியடையச் செய்து விடலாம் என்றா?

தபாலகம் வரையில் எல்லாம் வெட்ட வெளி. முழுவதும் தரைமட்டமாக்கப்பட்டிருக்கிற

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கந்தப்பு! இதயம் கனக்கிறது!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.