Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவை விமர்சிப்பது தேசத்துரோகம் எனில் தொடர்ந்தும் அதை செய்வேன்: வைகோ

Featured Replies

ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவை விமர்சிப்பது தேசத்துரோகம் எனில் தொடர்ந்தும் அதை செய்வேன்: வைகோ

[புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 10:34 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]

இலங்கையில் இடம்பெற்று வரும் போரை இந்திய அரசுதான் பின்நின்று நடத்துகிறது என்று குற்றம் சுமத்துகிறேன். இப்படிப் பேசுவது, தேசத்துரோகம் என்றால் இந்த தேச துரோகத்தை வைகோ தொடர்ந்து செய்வான் என்று மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னையில் பகத் சிங் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் ம.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் எழுதிய "கனவாகிப்போன கச்சதீவு" நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு நூலை வெளியிட, முதல் பிரதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ஆர்.நல்லகண்ணு பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் வைகோ பேசியதாவது:

மாவீரன் பகத் சிங்கின் வீரத்தை வன்னிக்காட்டில் பார்க்கிறேன். பகத் சிங்கை தம்பி பிரபாகரனின் வடிவத்தில் பார்க்கிறேன். விடுதலைப் புலிகள் தமிழினத்தை மீட்க போர்க்களத்தில் நிற்கிறார்கள். அவர்களின் ஆயுத போராட்டம் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்.

சிறிலங்கா இராணுவத்திற்கு இந்திய அரசு இராணுவ உதவிகளை செய்து வருகிறது. அந்த இராணுவங்களைக் கொண்டு சிறிலங்கா அரசு அங்குள்ள தமிழர்களை கொன்று குவித்து வருகிறது. இதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.

இலங்கையில் இடம்பெற்று வரும் போரை இந்திய அரசுதான் பின்நின்று நடத்துகிறது என்று குற்றம் சுமத்துகிறேன். இப்படிப் பேசுவது, தேசத்துரோகம் என்றால் இந்த தேச துரோகத்தை வைகோ தொடர்ந்து செய்வான்.

சிறிலங்கா இராணுவம் தமிழர்களை கொன்று குவிப்பது மட்டும் தேசபக்தியா? இந்திய அரசு உடனடியாக இராணுவ உதவிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தியாவும், சிறிலங்காவும் தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தம் போட்டுள்ளன என்பது இன்னும் வெளியே தெரியாத செய்தி. இந்த ஒப்பந்தம் 2013 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருக்கப்போகின்றது.

தமிழர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சுடுவதை கண்டித்தும், இலங்கை தமிழர்கள் மீது சிங்கள இராணுவம் நடத்தி வரும் தாக்குதலை மத்திய அரசு தடுக்கக் கோரியும் வருகிற 10 ஆம் நாள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்துவோம் என்றார் அவர்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் உருவில் பகத்சிங்கை காண்கிறேன்: வைகோ

http://thatstamil.oneindia.in/news/2008/10...aran-vaiko.html

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் உருவில் பகத்சிங்கை காண்கிறேன்: வைகோ

சென்னை: மாவீரன் பக்திசிங்கின் வீரத்தை வன்னிக்காட்டில் பார்க்கிறேன். பகத்சிங்கை பிரபாகரனின் வடிவத்தில் பார்க்கிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

பகத்சிங் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் மதிமுக தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் எழுதிய கனவாகிப்போன கச்சத்தீவு நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நூலை வைகோ வெளியிட நல்லக்கண்ணு பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் வைகோ பேசுகையில், மாவீரன் பக்திசிங்கின் வீரத்தை வன்னிக்காட்டில் பார்க்கிறேன். பகத்சிங்கை தம்பி பிரபாகரனின் வடிவத்தில் பார்க்கிறேன். தமிழினத்தை மீட்க விடுதலை புலிகள் போர்க்களத்தில் நிற்கிறார்கள். அவர்களின் ஆயுத போராட்டம் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்.

இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு ராணுவ உதவிகளை செய்து வருகிறது. அதை வைத்து அங்குள்ள தமிழர்களை ராணுவம் கொன்று குவித்து வருகிறது. இதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.

இலங்கையில் நடந்து வரும் யுத்தத்தை இந்திய அரசுதான் பின் நின்று நடத்துகிறது என்று குற்றம் சுமத்துகிறேன். இப்படி பேசுவது, தேசதுரோகம் என்றால் இந்த தேசதுரோகத்தை வைகோ தொடர்ந்து செய்வான். இலங்கை ராணுவம் தமிழர்களை கொன்று குவிப்பது மற்றும் தேசபக்தியா

இந்திய அரசு, ராணுவ உதவிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தியாவும் இலங்கையும் தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தம் செய்திருப்பது இன்னும் வெளிவராத செய்தி. இந்த ஒப்பந்தம் 2013ம் ஆண்டு வரை அமலில் இருக்கப்போகிறது.

தமிழர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதை கண்டித்தும், இலங்கை தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை மத்திய அரசு தடுக்கக் கோரியும் வரும் 10ம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு திரண்டு மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2008/10...aran-vaiko.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த உரையை பாருங்கல்

http://www.youtube.com/watch?v=27o4IwJyWG8...feature=related

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.