Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகத்து அனைத்து அரசியல் கட்சி தலைமைகளுக்கு நன்றி: விடுதலைப் புலிகளின் அரசியல்துறை

Featured Replies

தமிழகத்து அனைத்து அரசியல் கட்சி தலைமைகளுக்கு நன்றி: விடுதலைப் புலிகளின் அரசியல்துறை

[புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 06:53 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

போர் வெறி பிடித்த சிங்கள ஆட்சியாளர்களின் இராணுவ பிடிக்குள் சிக்கி தவிக்கும் ஈழத்தமிழர்களுக்கும் அவர்களின் போராட்டத்துக்கும் ஆதரவாக தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுசேர்ந்து எழுச்சி கொண்டிருப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கட்சி பேதங்களுக்கு அப்பால் தமது தமது தொப்புள் கொடி உறவுகளின் உரிமை போருக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தின் சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்திருப்பதை வரவேற்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறை விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அரசியல்துறை,

தமிழீழ விடுதலைப் புலிகள்

தமிழீழம்

08.10.2008

தமிழக உடன்பிறப்புக்களுக்கு.....

ஈழத்தமிழ் மக்களின் இன்னல் கண்டு குமுறிக்கொண்டிருக்கும் எமது அன்பிற்குரிய தமிழகத்து உடன்பிறப்புக்களே!

உயிர்காவத்துடிக்கும் குண்டுமழைக்கும் போர் வானூர்திகளுக்கும் நடுவே விடுதலைக்காக போராடும் உங்கள் ஈழத்தமிழ் உடன்பிறப்புக்களுக்காக குரல் கொடுத்திருப்பது எமக்கு நம்பிக்கையை ஊட்டுகிறது.

ஈழத்தமிழினம் மீதான சிங்கள அரசின் இன அழிப்புப்போர் என்றும் இல்லாத வகையில் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் ஒற்றுமையுணர்வுடன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்தி குரல்கொடுத்து வருவது துன்பப்பட்டு வரும் எமது மக்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

ஈழத்தமிழரை பூண்டோடு ஒழித்துக்கட்டி தமிழரின் தாயக நிலத்தை ஒரு மயான பூமியாக்கும் விருப்புடன் சிங்கள அரசு இன அழிப்புப்போரை தொடுத்துள்ளது. இதற்கு சிங்களத்தின் அனைத்துக்கட்சிகளும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஆதரவு கொடுத்துள்ளன. சிங்களப்படைக்கான ஆட்திரட்டலில் அனைத்துச் சிங்களக்கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன. மகிந்த ராஜபக்சவின் தலைமையில் சிங்கள இனம் ஒன்றுபட்டுத் தமிழரை அழித்தொழிக்க படை நடத்தி வருகின்றது.

இந்தப் போர் நெருப்பில் சிக்குண்டு எமது மக்கள் படும் அவலங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. குண்டுகள் போட்டு எமது மக்களைக் கொன்று குவிக்கின்றார்கள். குடியெழுப்பிக் கலைக்கின்றார்கள். நிலம் விழுங்கி முன்நகரும் சிங்களப்படைகளிடம் இருந்து உயிர்பிழைக்க எமது மக்கள் நாள்தோறும் இடம்பெயர்ந்துகொண்டு இருக்கின்றார்கள். மானத்துடனும் மிடுக்குடனும் வாழ்ந்து வந்த தமிழர்களை ஒரு நாடோடிக் கூட்டம் போல் மரநிழல்களுக்குக்குக் கீழும் தெருவோரங்களிலும் வாழ சிங்கள இனவெறியரசு நிர்ப்பந்தித்துள்ளது.

அவலப்படும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவோ உயிர்கொடுக்கவோ உலகில் எவரும் இல்லையென்ற இறுமாப்புடன் தமிழின அழிப்பை சிங்கள அரசு மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் ஒன்றுதிரண்டு ஒருமித்த உணர்வுடன் தமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பது சிங்கள இனவாத அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பாச மடல் :o

வாழ்க தமிழ் - மலர்க தமிழர்களின் ஒற்றுமை :lol:

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

சரியான சமயத்தில் வெளியிடப்பட்டிருக்கும் தொலை நோக்குடன் கூடிய ஒரு அறிக்கை..!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு மக்களுக்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.