Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்- 51% - "இந்தியன் எக்ஸ்பிரஸ்" கருத்துக் கணிப்பு

Featured Replies

இராணுவத்தின் கொடுந்தாக்குதலைச் சந்தித்துவரும் இலங்கைத் தமிழர்களின் இன்னலைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகள் மேலும் அக்கறை காட்ட வேண்டும், இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளான தமிழர்களுக்கு உணவு, மருந்து, உடைகள் போன்றவற்றை உடனடியாக அனுப்பி உதவ வேண்டும், இதற்குத் தடங்கல்கள் வருமானால் மத்திய அரசிலிருந்து திமுக விலக வேண்டும் என்று தமிழ்நாட்டின் 10 பெரிய நகரங்களில் நடத்திய கருத்துக் கணிப்பிலிருந்து தெரிகிறது.

சென்னை, கோயமுத்தூர், ஈரோடு, சேலம், மதுரை, வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் இம் மாதம் 6 முதல் 11 வரையில் 1,031 பேர்களிடம் கருத்து கேட்டபோது இந்தத் தகவல்கள் கிடைத்தன.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக் குழுமம் சார்பில், சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடமும் கருத்து கேட்கப்பட்டது. கருத்து கேட்கப்பட்டவர்களில் 45% பேர் பெண்கள்.

கருத்துக் கணிப்பில் தெரியவந்த முக்கிய தகவல்கள் வருமாறு:

இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்களையும் பயிற்சியையும் தரும் மத்திய அரசிலிருந்து திமுக விலக வேண்டும்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரன் சுற்றி வளைக்கப்படும் நிலை ஏற்படுமானால், தமிழர்களுக்கு உதவுவதற்காக இந்திய இராணுவம் இலங்கைக்குச் செல்ல வேண்டும்.

விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது ஈழத் தமிழர்களின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடிவரும் போராளிகள் இயக்கம், ஈழத் தமிழர்களின் ஒரே, உண்மையான பிரதிநிதிகள் விடுதலைப் புலிகள்தான்.

ஈழம் மலர்வதற்காக பணமும் பொருளும் தரத் தயார். (40% பேர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளனர்)

இலங்கைப் பிரச்னை தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதற்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். (94% பேர் இக்கருத்தை வலியுறுத்தினர்.)

ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்துவரும் நளினியின் தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே எதிர்த்தனர்.

இந்தக் கொலை வழக்கு தொடர்பாக பிரபாகரனைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்ற கருத்தை வெகுசிலர்தான் ஆதரித்தனர்.

இனி கேள்விகளும், அதற்கு அளிக்கப்பட்ட பதிலும் வருமாறு: (பதில் அளித்தவர்கள் எண்ணிக்கை சதவீதத்திலும் தரப்படுகிறது)

ஈழத் தமிழருக்காக என்ன செய்ய விருப்பம்?

பந்த் நடத்தினால் பங்கேற்பேன்-8.

தமிழ்நாட்டில் புகலிடம் தருவதை ஆதரிப்பேன்-22.

ஈழப் போராட்டத்துக்கு ஆதரவு இல்லை-16.

பத்திரிகைகளுக்குதான் ஆர்வம், எனக்கு இல்லை-14.

ஈழத்துக்காக பணம், பொருள் தருவேன்-40.

புலிகள் தோற்கடிக்கப்பட்டு, பிரபாகரன் சுற்றி வளைக்கப்பட்டால்?

ராஜீவ் கொலைவழக்கு விசாரணைக்காக இந்தியாவுக்கு அவரை அனுப்பக் கோருவேன்-6.

தமிழ்நாட்டில் அரசியல் புகலிடம் தரப்பட வேண்டும்-23.

இலங்கை அரசே விசாரிக்க வேண்டும்-12.

ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும்-25.

இலங்கை இராணுவம் அவரைக் கொன்றுவிடும்-3.

அப்படி நடக்காமலிருக்க நமது இராணுவத்தை அனுப்ப வேண்டும்-31.

தமிழக அரசு உடனே கவனிக்க வேண்டிய பிரச்சினை என்ன?

நாளுக்குநாள் மோசமாகிவரும் மின்சப்ளை நிலைமைதான்-32.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு திரட்டுவது-6.

தமிழ்நாட்டில் பயங்கரவாதம் பரவாமல் தடுப்பது-20.

விலைவாசியைக் கட்டுப்படுத்துவது-40.

புலிகள் மீதான தடையை இந்தியா விலக்க வேண்டுமா?

இப்போது கூடாது-15.

எப்போதுமே கூடாது-8.

சொல்ல முடியாது, தெரியாது-26.

ஆமாம், தடையை விலக்க வேண்டும்-51.

புலிகள் இயக்கம் பற்றி கருத்து என்ன?

பயங்கரவாதிகள்-12.

ஈழ விடுதலைக்காகப் போராடுகிறவர்கள்-30.

ஈழத்தமிழர் நலனுக்காக பாடுபடுகிறவர்கள்-22.

ஈழத் தமிழர்களின் ஒரே, உண்மையான குரல்-36.

நம் அரசியல் தலைவர்களின் கடமை என்ன?

இலங்கைத் தமிழருக்காக பந்த் நடத்துவது-18.

கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதம் இருப்பது-12.

சிறப்பு வரிகளை விதித்து நிதி திரட்டுவது-10.

இலங்கையே தீர்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுவது-26.

மத்திய அரசிலிருந்து திமுக விலக வேண்டும்-34.

நளினியின் தண்டனை குறைக்கப்பட வேண்டுமா?

ஆமாம், போதுமான காலம் சிறையில் இருந்துவிட்டார்-26.

மரண தண்டனை விதிக்கப்பட்ட அவரின் சக கைதிகளையும் விடுவிக்க வேண்டும்-10.

பிரியங்காவே மன்னித்து விட்டதால் விடுவிக்க வேண்டும்-12.

வருத்தம் தெரிவித்து விட்டதால் விடுவிக்க வேண்டும்-18.

விடுதலை செய்யக்கூடாது-34.

தமிழக மீனவர் சுடப்படாமல் தடுக்க என்ன வழி?

இந்திய, இலங்கை கூட்டு ரோந்து-20.

புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளைத் தடுப்பது-10.

மேலே கூறிய இரண்டும் அல்ல-6.

இலங்கைக் கடல்பரப்பில் மீன் பிடிக்காமல் இருப்பது-24.

தமிழக அரசியல்வாதிகள் தலையிடுவது சரியா?

ஏற்க முடியாது, காஷ்மீரில் பாகிஸ்தான் தலையிடுவதைப் போல-8.

சிந்தனை வறட்சியையே இது காட்டுகிறது-10.

வாக்காளர்களைக் கவரும் மலிவான உத்தி-28.

ஆபத்தாக முடியும், பிரச்சினையை அவர்களே தீர்த்துக் கொள்வதை விரும்பாத போக்கு-10.

அங்கே இருப்பதும் தமிழர்கள் என்பதால் சரியே-44.

tamilwin

Edited by THEEPAN0007

புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்- 51% - "இந்தியன் எக்ஸ்பிரஸ்" கருத்துக் கணிப்பு

[ஞாயிற்றுக்கிழமை, 12 ஒக்ரோபர் 2008, 10:46 மு.ப ஈழம்] [செ.விசுவநாதன்]

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இந்தியத் தடையை நீக்க வேண்டும் என்று 51 விழுக்காடு தமிழர்கள், இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளேடான "இந்தியன் எக்ஸ்பிரசின்" ஞாயிறு பதிப்பு நடத்திய (சண்டே எக்ஸ்பிரஸ்) கருத்துக்கணிப்பில் வாக்களித்துள்ளனர்.

கருத்துக் கணிப்பு விவரம்:

நான் மகிழ்ச்சியடைவேன்....

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான முழு அடைப்புப் போராட்டம் நடத்தினால்..... 8 விழுக்காடு

மேலதிகமாக ஈழத் தமிழர் ஏதிலியர்களுக்கு தமிழ்நாடு அடைக்கலம் கொடுத்தால்..... 22 விழுக்காடு

இந்த பிரச்சினையில் எதுவும் செய்யக்கூடாது- நான் ஆதரிக்கமாட்டேன் - 16 விழுக்காடு

ஊடகங்களைப் பொறுத்த வரைக்கும் ஈழத் தமிழர் பிரச்சினை ஓ.கே. ஆனால் எனக்கு போதுமான ஆர்வமில்லை - 14 விழுக்காடு

தமிழீழத்துக்கு நிதியும் பொருள் உதவியும் வழங்க வேண்டும் - 40 விழுக்காடு

ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நமது அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டும்?

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முழு அடைப்பு நடத்த வேண்டும் - 18 விழுக்காடு

வெற்றி பெறும்வரை சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்த வேண்டும் - 12 விழுக்காடு

கூடுதல் வரி வசூலித்தால் நான் மகிழ்ச்சியாக தருவேன் - 10 விழுக்காடு

சிறிலங்கா படைத்தரப்புக்கு ஆயுதம் மற்றும் பயிற்சி வழங்கும் மத்திய அரசாங்கத்துடனான உறவை தி.மு.க. துண்டிக்க வேண்டும் - 34 விழுக்காடு

புலிகளை சிறிலங்கா தோற்கடித்து பிரபாகரன் சுற்றி வளைக்கப்பட்ட பின்னர்

ராஜீவ் வழக்கு விசாரணைக்காக பிரபாகரனை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என்று நாம் கோரவேண்டும் - 6 விழுக்காடு

தமிழ்நாட்டில் பிரபாகரனுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் - 23 விழுக்காடு

ஐ.நா. தலையிட வலியுறுத்த வேண்டும் - 25 விழுக்காடு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டுமா?

நீக்க வேண்டும் - 51 விழுக்காடு

இப்போதில்லை - 15 விழுக்காடு

எப்போதும் நீக்கக்கூடாது - 8 விழுக்காடு

தெரியவில்லை- சொல்ல இயலவில்லை - 26 விழுக்காடு

விடுதலைப் புலிகள்

ஒரு பயங்கரவாத இயக்கம் - 12 விழுக்காடு

விடுதலைப் போராட்ட வீரர்கள் - 30 விழுக்காடு

தமிழர் பிரச்சனைக்காக செயற்படுபவர்கள் - 22 விழுக்காடு

இலங்கைத் தமிழர்களின் ஒரே- உண்மையான பிரதிநிதி - 36 விழுக்காடு என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விழுக்காடுகளெல்லாம் ஈழத்தமிழர்கள் விழுந்த பிறகுதான் உயரும் போல கிடக்குது. எண்டாலும் பறவாயில்லை. தமிழ்நாட்டில ஏற்பட்டிருக்கிற இந்தளவு ஆதரவு அலையே தமிழக அரசியல் வாதியள விழிப்படையச் செய்திருக்குது எண்டால் தமிழக மக்கள் இன்னும் கொஞ்சம் ஆதர தெரிவித்தால் அரசியல் வாதிகள் திரண்டெழுந்து மத்திய அரசை ஒரு புரட்டு புரட்டிப் போடுவார்கள். எல்லாம் வரப்போற எலக்சனில கண்வச்சித்தான் நடக்கும். அதுக்குப் பிறகு வழமையான ஆதரவுக் குழுக்களைவிடப் பெரிய கட்சிகள் வேறு வேலையைப் பார்க்கப் போய்விடும்.

கரு தமிழக மக்களுக்கு தணிக்கை செய்யப்பட்ட ... புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் செய்திகளே முக்கியமாக சென்றடைகிறது... அப்படி இருந்த போதும் தமிழகத்தில் ஈழ விடுதலைக்கு ஆதரவு அதிகரித்த வண்ணம் உள்ளது...

மேலும் தமிழகத்தில் சுமார் 20 % பிறமொழியினர் என்பதையும்... இங்கே தி.மு.க ,அ.தி.மு.க போன்ற கட்சிகளுக்கே 30 % அளவுதான் ஆதரவு என்பதையும் எண்ணிப்பார்க்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்களுக்கு தணிக்கை செய்யப்பட்ட ... புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் செய்திகளே முக்கியமாக சென்றடைகிறது
.

இது தான் எனது இந்திய நண்பர்களும் சொன்னது ஆனால் தற்பொழுது ஏற்பட்டுள்ள மாற்றம் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்துமென எதிர்பார்க்கலாம்

எல்லாம் தமிழ் நாட்டு ஊடகங்களிடம் கைகளில்தான் உள்ளது [தொலைக்காட்சி,வானொலி ,பத்திரிகைகள்]

அன்பான செய்தி பத்திரிகையாளர்களே நீங்கள் ஊன்றும் பேனாவில் உன்மை என்னும் உயிரை வையுங்கள் ஈழ உறவுகளுக்கு ஒரு கை மேலோங்கும்

expressbuzz

மேலுள்ள இணைப்பினூடு, நாம் எமது கருத்துக்களைம் ,நன்றியயும் , இந்தியன் எக்ஸ்பிரஸ்ற்கு தெரிவிக்கலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.