Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக கட்சிகளின் அழுத்தத்தினால் எமக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை: சிறிலங்கா அமைச்சர்

Featured Replies

தமிழக கட்சிகளின் அழுத்தத்தினால் எமக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை: சிறிலங்கா அமைச்சர்

[வியாழக்கிழமை, 16 ஒக்ரோபர் 2008, 12:10 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

இந்திய மத்திய அரசுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கொடுத்துள்ள அழுத்தம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திற்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்று அந்நாட்டு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர், தமிழக அரசியல் கட்சிகள் நடத்திய அனைத்து கட்சிகளின் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சிறிலங்கா படைத்தரப்பின் போர் நடவடிக்கைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று கூறினார்.

விடுதலைப் புலிகள் போரில் தோல்வியடைந்து வருகின்றமையினால் தமிழக அரசியல் கட்சிகளின் துணையுடன் உயிர்பிழைக்க முற்படுகின்றனர் எனவும் தெரிவித்த லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன, பயங்கரவாதத்திற்கு எதிரான போரை யாரும் நிறுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.

புதினம்

தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்காக இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த தயாரில்லை - ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா

[ புதன்கிழமை, 15 ஒக்ரோபர் 2008, 09:59.29 PM GMT +05:30 ]

lakksmanjapayapa001.jpg

தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்கமைவாக இங்கு முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்குத் தாம் தயாராகவில்லை என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

இந்தியா எந்தவொரு சந்தர்ப்பத்திலேனும் இலங்கையின் உள்விவகாரத்தில் தலையீடு செய்யும் என தாம் கருதவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு, நாரஹென்பிட்டியிலுள்ள தகவல் திணைக்கள வளாகத்தில் அமைந்துள்ள தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன பதிலளிக்கையில் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை, பிரதானமாக இந்தியாவில் அரசியல் ரீதியாக அந்நாட்டு அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள அழுத்தமாகும். அரசாங்கத்தின் ஸ்திரநிலை தொடர்பாக ஏற்பட்டுள்ள அழுத்தமாகும். எனினும், தமிழ்நாடும் இரண்டாகப் பிரிந்துள்ளது, தமிழ்நாட்டில் ஜெயலலிதா அணியும், வைகோ அணியும் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கும் அனைத்து செயற்பாடுகளுக்கும் ஆதரவை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளன.

இதேவேளை, கருணாநிதியும் வேறு சில தரப்பினரும் இந்திய அரசாங்கத்திற்கு ஏதோ வகையான அழுத்தத்தைக் கொடுத்துள்ளனர். எனினும், இந்திய அரசாங்கமும், எமது அரசாங்கமும் எப்போதுமே மிகுந்த புரிந்துணர்வின் அடிப்படையிலேயே செயற்பட்டு வந்துள்ளன.

எமது ஜனாதிபதி பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பது, அரசியல் தீர்வு காண்பது என்ற இரு விடயங்கள் தொடர்பாக மிகுந்த புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருகின்றார். இந்தியாவும் இது விடயத்தில் விளங்கிக் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்தியா எந்தவொரு சந்தர்ப்பத்திலேனும் எமது நாட்டு உள்விவகாரத்தில் தலையீடு செய்யும் என நான் கருதவில்லை.

அந்த வகையில் நாம் மிகுந்த புரிந்துணர்வோடு இந்தியாவில் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்படாத வகையில் செயற்படும் அதேவேளை, பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அதே விதத்திலேயே முன்னெடுப்பதற்காக இந்தியாவின் ஆதரவை வேண்டி நிற்பதுடன், இந்தியாவில் இது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அது விடயத்தில் புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கும் அரசாங்கம் தயாராகவுள்ளது.

அந்த வகையில் இது இரண்டு அரசாங்கங்களுக்கு இடையிலுள்ள விடயமேயன்றி தமிழ்நாட்டிலுள்ள பிரச்சினைக்கு மத்தியில் தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்கமைவாக இலங்கையில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நாம் தயாராகவில்லை.

எனினும், விடுதலைப் புலிகளை ஆயுதங்களைக் கீழே வைத்து பேச்சுவார்த்தை மேசைக்கு வருமாறு அழுத்தம் கொடுப்பதன் மூலமாக இந்த அரசாங்கம் அதன் உதவிகள் அனைத்தையும் இந்திய அரசாங்கத்தால் வழங்க முடியும். இந்தச் சந்தர்ப்பத்தில் இந்திய அரசாங்கத்தை எந்த விதத்திலும் அசௌகரிய நிலைக்கு உட்படுத்த நாம் தயாராகவில்லை.

http://www.tamilwin.com/view.php?2eIWnp00b...d430QH2b02nLW3e

Edited by சாணக்கியன்

யாப்பா... பலே பலே... ரொம்ப நன்னா தெரிஞ்சுவச்சிருக்கீங்க.... ஒரு பிரச்சனையும் வராது.... நீங்க நன்னா புகுந்து விளையாடுங்க!

தமிழகத்தின் இந்தப்போராட்டத்துக்கு நீங்கள் மசியமாட்டீர்கள்தான்.... உங்களிட்ட வந்து டில்லிக்காரன் கெஞ்சினாலும் நீங்கள் சரிவரமாட்டியல்தான்...

ஆனாலும் நிலமை மாறிவரும்போது... இனிடில்லிக்கு ஓடும்போதுதான் இப்போது தமிழகத்தின் போராட்டத்தின் விளைவு உங்களுக்கு தெரியவரும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.