Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோத்தபாய – பசில் இன்று இந்தியா பயணமாகின்றனர் - புதுடெல்லியில் அவசர சந்திப்புகள் ஏற்பாடு - இந்திய வெளியுறவு அமைச்சருக்கு இலங்கை அழைப்பு:

Featured Replies

கோத்தபாய – பசில் இன்று இந்தியா பயணமாகின்றனர் - புதுடெல்லியில் அவசர சந்திப்புகள் ஏற்பாடு - இந்திய வெளியுறவு அமைச்சருக்கு இலங்கை அழைப்பு:

ஜனாதிபதியின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் இன்று இந்தியா பயணமாகின்றனர். இந்திய பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் நேற்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றதுடன் இதன் போது, இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் பிரச்சினைகள் குறித்து, நேரில் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில், பசில், மற்றும் கோத்தபாய ஆகியோர் புதுடெல்லி செல்கின்றனர். ஜனாதிபதியின் சகோதரர்களான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற பசில் ராஜபக்ஷ ஆகியோர், தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகள் என்பது குறிப்பிடதக்கது.

இலங்கை வெளிவிவகார அமைச்சர், இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு:

இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சர், இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் விரைவில் பிராணப் முகர்ஜி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக பிரபல வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யுத்தம் காரணமாக அல்லலுறும் இலங்கைத் தமிழர் தொடர்பில் தமிழக கட்சிகள் வெளிகாட்டிவரும் எதிர்ப்பு காரணமாக இந்திய மத்திய அரசாங்கம் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் கட்சிகளின் சார்பில் நேற்றைய தினம் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதியுடன் தெலைபேசி மூலம் இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.

என்ன விலை கொடுத்தேனும் தமிழ்ச் சிவிலியன்களின் உரிமைகள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என இந்திய பிரதமர் இந்த உரையாடலின் போது வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் கரிசனையைப் புரிந்து கொண்டுள்ளதாகவும், தமிழ்ச் சிவிலியன்களது பாதுகாப்பை உச்ச அளவில் உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமரிடம் உறுதியளித்துள்ளார்.

மேலும், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் களைந்தால் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் தடையேதும் இல்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தையென்ற போர்வையில் இந்திய மத்திய அரசு தனது பித்தலாட்டத்தின் அடுத்த கட்டத்தைத் தொடங்கப் போகிறது. தமிழகத்தைப் பேய்க்காட்ட. போகும் இருவரும் சிங்கள இனவெறியர்கள். ஜனாதிபதியின் சகோதரரர்கள். அங்குள்ள அதிகாரிகளுக்கும் முக்கிய புள்ளிகளுக்கும் எதைக் கொண்டு போகிறார்களோ தெரியவில்லை.

பெரும்பாலும் இந்தியாவில் பெரிய அரசியல் புள்ளிகள் விரும்புவது அதைத்தான்! அந்த ஒழுங்குகளினூடாக இலங்கைத் தமிழன் இனப்படுகொலை செய்யப் படுவதற்கான மாற்று வழிகள் போட்டுக் கொடுக்கப்படும். இது மறுக்கப்பட முடியாத உண்மை ஆனால் வெளிச்சம் போட்டுக்காட்ட யாருமில்லை.

தமிழகத்தில் தமிழன் ஓரளவு விழித்துக்கொண்டான் ....

இலங்கை முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தையென்ற போர்வையில் இந்திய மத்திய அரசு தனது பித்தலாட்டத்தின் அடுத்த கட்டத்தைத் தொடங்கப் போகிறது. தமிழகத்தைப் பேய்க்காட்ட. போகும் இருவரும் சிங்கள இனவெறியர்கள். ஜனாதிபதியின் சகோதரரர்கள். அங்குள்ள அதிகாரிகளுக்கும் முக்கிய புள்ளிகளுக்கும் எதைக் கொண்டு போகிறார்களோ தெரியவில்லை.

பெரும்பாலும் இந்தியாவில் பெரிய அரசியல் புள்ளிகள் விரும்புவது அதைத்தான்! அந்த ஒழுங்குகளினூடாக இலங்கைத் தமிழன் இனப்படுகொலை செய்யப் படுவதற்கான மாற்று வழிகள் போட்டுக் கொடுக்கப்படும். இது மறுக்கப்பட முடியாத உண்மை ஆனால் வெளிச்சம் போட்டுக்காட்ட யாருமில்லை.

உந்தச் செய்தியின் உண்மைத்தன்மை தெரியவில்லை.சில செய்திகள் கோத்தபாய இந்திய இராணுவ உதவி நிறுத்தப்பட்டாலும் என்று பாகிஸ்தான் செல்வதாக கூறப்படுகிறது.

http://www.orunews.com/?p=2289

இரண்டுபேரும் பொய்மூட்டைகளுடன் வெளிகிட்டு டில்லியின் மண்டைகழுவப்போகிறார்கள் சாத்தானகள் ஒதப்போகிறது.. தாங்கள் செய்யும் இனப்படுகொலைகளை நியாயப்படுத்தி இன்னும் ஆயுதப்பிச்சையுடன் தமிழ்னாட்டில் உருவாகிவரும் ஈழ மக்களுக்கு ஆதரவையும் ஆப்பு வைத்து இல்லாமல் செய்யவும் தான்..

எத்தனை நாளுக்கு முழுப்பூசணிக்குள் மறைத்து வைக்கலாம்...

தமிழ் நாட்டில் தமிழீழ ஆதரவு அலையை ஒடுக்க உளவுத்துறை புரிந்த நாடகங்கள் எல்லாம் அம்பலமாகி விட்டன !!!

இரண்டுபேரும் பொய்மூட்டைகளுடன் வெளிகிட்டு டில்லியின் மண்டைகழுவப்போகிறார்கள் சாத்தானகள் ஒதப்போகிறது.. தாங்கள் செய்யும் இனப்படுகொலைகளை நியாயப்படுத்தி இன்னும் ஆயுதப்பிச்சையுடன் தமிழ்னாட்டில் உருவாகிவரும் ஈழ மக்களுக்கு ஆதரவையும் ஆப்பு வைத்து இல்லாமல் செய்யவும் தான்..

எத்தனை நாளுக்கு முழுப்பூசணிக்குள் மறைத்து வைக்கலாம்...

தமிழ்நாட்டில் இப்போது எழுந்திருந்துள்ள எழுச்சியைக் குறைக்கமுடியும் என நான் நினைக்கவில்லை. கருணாநிதி எதுவும் செய்யாமல் இருந்தபோது நம்பிக்கை இழந்திருந்தேன். ஆனால், இப்போது இவ்வாறு வெளிப்படையாக அவர் ஆதரவு தந்தபின்பு, அவர் பின்வாங்குவார் என நினைக்கவில்லை. அப்படியே பின்வாங்கினாலும், அங்குள்ள ஈழஆதரவாளர்கள் விடுவார்களா என்பது சந்தேகம்தான். இப்போது நடந்துகொண்டிருக்கும் போராட்டங்களே அதற்குச் சான்று. இனிமேலும் அவர்கள் சிறீலங்கா அரசினதும், இந்திய அரசினதும் பொய்களை நம்பமாட்டார்கள். அவர்களின் பயணம் தமிழ்மக்களுக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும் மட்டும் நிச்சயம் தொடரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.