Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 - வருடங்களாக தன்சொந்த மகளையே இருட்டறைக்குள் வைத்திருந்து 8 - குழந்தைகளுக்கு தாயாக்கிய தந்தையின் மிருகத்தனம்!´

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வியன்னாவிலிருந்து 80 - மைல் தொலைவில் இருக்கும் ஆஸ்திரியாவிலுள்ள ஆம்ஸெட்டன் என்ற பகுதியில் நடந்த கொடூரமான சம்பவம்.... நெஞ்சை உறைய வைத்த சம்பவமாக இன்று உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த பரபரப்பான சாலையும், சுற்றியிருக்கும் மக்களும் 73 - வயதான இந்த முதியவனின் பின்னால் இப்படியொரு கொடூரமா என்று அதிர்ச்சியில் உறைந்துப்போயிருக்கிறது.

அறைகளில் அடைபட்டுக்கிடந்த எலிசபெத்தின் ஐந்து சகோதர, சகோதரிகளும் தங்கள் சகோதரி அனுபவிக்கும் கொடூமையை அறியாமல் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக எலிசபெத்தின் தாய் தான் குடியிருக்கும் வீட்டுக்கு கீழே தன் மகள் அடைக்கப்பட்டுக்கிடப்பதை அறியாமல் காமுகக் கொடூரனுடன் 24 - வருடங்கள் வாழ்ந்திருக்கிறார். 18 - வயதில் தன் மகளுக்கு நேர்ந்த கொடூரத்தை 42 - வது வயதில் தன் மகள் இருட்டறை வாழ்க்கை வெளிச்சத்திற்கு வந்திருப்பதில்.... அதுவும் தன் கணவனால் தன் மகள் பலாத்தாரம் செய்யப்பட்டு 8 - எட்டு குழந்தைகளுக்கு தாயாக்கப்பட்ட சம்பவத்தை அறிந்து வயோதிக தாய் அதிர்சியில் இருக்கிறார்.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது எலிசபெத்தின் பதினெட்டு வயதில்..... அவளுடைய கைகளை கட்டி ஒரு இருட்டு அறைக்குள் பூட்டி அவளை பலாத்காரம் செய்த தந்தை, எலிசபெத் வீட்டை விட்டு ஓடி விட்டதாக நாடகமாடினான். அதற்கு சாட்சியாக " என்னைத் தேடாதீர்கள்" என்று எலிசபெத்தை கட்டாயப்படுத்தி கைப்பட எழுதிய கடிதத்தை மற்றவர்களிடம் காட்டி நம்ப வைத்திருக்கிறான். அதன் பிறகு நடந்த கொடூரங்களோ வார்த்தையால் விவரிக்க முடியாத நிலைமையில் இருக்கிறது.

கடந்த இருபத்து நான்கு வருடங்களாக அவளை தொடர்ந்து பாலியல் கொடுமை செய்து எட்டு குழந்தைகளுக்குத் தாயாக்கி இருக்கிறது. வெளிச்சமே இல்லாத இருட்டு அறைகளில் அவள் தாய்மை நிலையில் பிரசவத்தை எதிர்கொள்ளும் கொடுமையும் நிகழ்ந்திருக்கிறது.

முதலில் பிறந்த பெண் குழந்தையும் (பெயர் கெர்ஸ்டின், தற்போது

வயது 19) அடுத்ததாக பிறந்த ஆண் குழந்தை (பெயர் ஸ்டீபன்,

தற்போது வயது 18) குழந்தைகளும் தாயுடனே இருட்டறையில்

வாழ்ந்திருக்கிறார்கள். அதன் பிறகு ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் மருத்துவ கவனிப்புகள் இன்றி பிறந்த சில நாட்களிலேயே இறந்திருக்கின்றன.

அதன் பிறகு 1993, 1994, 1997 - களில் பிறந்த மூன்று குழந்தைகளை (அலெக்சாண்டர், மோனிகா, லிசா) எலிசபெத் வாசலில் மகள் போட்டு விட்டுச் சென்றதாக எடுத்து வளர்த்தியிருக்கிறான். அதற்கு ஆதாரமாக தான் ஏழ்மைநிலைமையில் இருப்பதாகவும், குழந்தைகளை வளர்க்க முடியாத சூழ்நிலையில் இருப்பதால் குழந்தைகளை விட்டுச் செல்வதாகவும் எலிசபெத் கடிதம் எழுதி குழந்தைகளுடன் வைத்ததாக சாட்சியாக காட்டி மற்றவர்களை நம்ப வைத்தான். கடைசியாக பிறந்த குழந்தை பெலிக்ஸ் தற்போது வயது ஐந்து. தன் தாய் மற்றும் இரண்டு சகோதரர்களுடன் இருட்டறைக்குள் வாழ்ந்திருக்கிறது. கடைசி குழந்தை பிறக்கும் போது காமூக தந்தைக்கு வயது 69.

தாயுடன் மூன்று குழந்தைகளையும் சன்னலோ, கதவோ, வெளிச்சமோ, வெளிக்காற்றோ இல்லாத அந்த அறைகளில் அடைத்து வைத்திருந்த கொடூர தந்தை மூன்று குழந்தைகளை தன்னுடன் வைத்து வளர்த்தியிருக்கிறான். அறைகளில் தாயுடன் அடைபட்டுக் கிடந்த மூத்த மகள் கெர்ஸ்டினுக்கு, உடல் நிலை மிகவும் சீர் குலைந்திருக்கிறது.

19 - வருடங்களாக சூரிய ஒளியைக் கூட காணாத அவளை தந்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறான். வெளியுலக வாழ்க்கையையும் வெளிமனிதர்களின் தொடர்பும் இல்லாமல் வளர்ந்திருந்த 19 - வயது கெர்ஸ்டினுடைய நடவடிக்கைகளைக் கண்டு டாக்கடர்கள் சந்தேகங்கொண்டு விசாரித்தனர். அங்கே தான் இந்த பதற வைக்கும் உண்மை வெளி வந்திருக்கிறது.

மகளை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டுமெனில் தாயிடமிருந்து சில தகவல்கள் பெற வேண்டுமென மருத்துவமனை வற்புறுத்தியதால் அந்தக் கொடூரத் தந்தை தனது மகளை இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் அறைச் சிறையை விட்டு வெளியே கொண்டு வந்திருக்கிறான். மருத்துவமனையில் உடலும் மனமும் பாதிக்கப்பட்ட நிலையில் தந்தையின் கொடுமைக்கு ஆளான மகள் சொன்ன கதைகளைக் கேட்டு உலகமே அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. இனிமேல் தந்தையை நான் பார்க்கவே கூடாது எனும் கதறல் விண்ணப்பத்துக்கு உறுதி அளித்த பிறகே அந்த

42 - வயது மகள் பேசியிருக்கிறார்.

11 - வயது முதலே தன்னிடம் பாலியல் தவறுகள் செய்து வந்த தந்தை

1984 - ஆகஸ்ட் 28 - ம் தியதி கைகளில் விலங்கிட்டு அறைகளுக்கு இழுத்துச் சென்றபோது இத்தனைக் கொடுமைகளைச் சந்திப்போம் என கனவிலும் நினைக்கவில்லை என்ற எலிசபெத் கதறல்களுக்கிடையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்த போது உலமே அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்கிறது.

ஐந்து வயதான பெலிக்ஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்

19 - வயதான கெர்ஸ்டன்,ஸ்டீபன் மற்றும் அந்தக் குழந்தைகளின் தாய் அனைவருமே உளவியல் ரீதியான அழுத்தத்தில் இருப்பதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் தனது பேரன், பேத்திகளை பள்ளிக்கூடத்திற்கு கூட்டிச் செல்லும் வயதான பாட்டிக்கு தனது மகள் தன் மகளின் வாக்குமூலத்தில் உறைந்துபோய் இருக்கிறார்.

24 - வருடங்களாக இருட்டு அறைகளில், குழந்தைகளோடு ஒரு அடிமையை விட அதிகபட்ச கேவலமான வாழ்க்கையை வழங்கியிருக்கும் தந்தை மரணத்தை நோக்கிய பயணத்தில் முதுமையையும் கடந்து 73 - வது வயதில் இருக்கும் கொடூரத் தந்தையை சட்டம் எப்படி தண்டித்தாலும் அது குறைவானதாகவே இருக்க முடியும்.

28.04.2008 - அன்று தொலைகாட்சிகளில் மர்மங்களுக்குள்ளும், சொல்ல முடியாத சோகத்திற்குள் புதைந்த போயிருந்த எலிபெத் வாழ்ந்த இருட்டறைகளையும், குழந்தைகளையும் பார்த்தபோது வாழ்க்கையில்

24 - வருடங்களில் தொலைந்து போய்விட்ட பழைய நினைவுகளில் இருந்து இந்த பெண் மீண்டு வரும்படியான நிகழ்வா நடந்திருக்கிறது என்று நம்மை எண்ண வைக்கிறது.

எப்போதாவது தந்தை மகள் மீது பலாத்தாரம் செய்தது செய்திகளாக வந்திருந்தாலும் இந்த நிகழ்சி கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவில் இருக்கிறது. 24 - வருடங்களாக இருட்டு அறைகளில், குழந்தைகளோடு, பலாத்தாரப் புணர்ச்சிகளுக்கிடையிலும், பிறந்ததிலிருந்து சூரியவொளி கூட பார்க்காவண்ணம் வாழ்ந்திருந்த குழந்தைகளும் தவற விட்ட வாழ்க்கையையும், அவர்களின் சுதந்திரத்தை பறித்து அடிமைகளைவிட மிக மோசமான வாழ்க்கையை தீர்மாணித்திருந்த காமூகத் தந்தை 73 - வயதில் மரணத்தில் வாயிலில் இருந்தாலும் சட்டம் இந்த மிருகத்திற்கு அதிகபட்ச தண்டனையாக எந்த தண்டனை கொடுத்தாலும் நான்கு பேர்களும், அனுபவித்த கொடூரத்திற்கு ஈடாக இந்த உலகமும், மனிதாபிமானமும் ஓன்றுமே பரிகாரம் செய்துவிட முடியாது.

http://tamilinpam.blogspot.com/2008/10/24-8.html

  • கருத்துக்கள உறவுகள்

கிட்லர் பிறந்த இடத்தில் இன்னுமொரு கிட்லர். :)

  • கருத்துக்கள உறவுகள்

இதை முன்பு எங்கோ படித்த ஞாபகம்

இது சற்று பழைய செய்தி.

சம்பவம் பற்றி பெருஞ் செய்தி சேவைகள் (BBC, CNN) தொடங்கி சிறிய செய்திகள் வரை மிக நீண்ட செய்திகளை தந்து மேலும் மேலும் அந்த பாதிக்கப்பட்ட மகளுக்கும், அவவின் குழந்தைகளுக்கும் பாதிப்பையே கொடுத்தன.

இதை முன்பு எங்கோ படித்த ஞாபகம்

இங்கேதான் படித்தீர்கள் கறுப்பி

http://www.yarl.com/forum3/index.php?showt...ிரியா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.