Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமுதத்தின் கேலிச்சித்திரமும் தலையங்கமும், சில கட்டுரைகளும்.

Featured Replies

குமுதத்தின் கேலிச்சித்திரமும் தலையங்கமும், சில கட்டுரைகளும்..

pg2aio0.jpg

அபூர்வமாக எப்போதாவது தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளிடையே எழும் ஒற்றுமையான குரல் இந்த முறை - இலங்கைத் தமிழர்களுக்காக எழுந்திருக்கிறது.

சென்னையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் - தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதற்கு இருவாரக் கெடு விதிக்கப்பட்டிருப்பது & உறுதியான தீர்மானமே.

ஈழப்பிரச்னையில் இதுவரை ஒதுங்கி வந்த அ.தி.மு.க.வும் கரிசனத்துடன் குரல் எழுப்பியிருக்கிறது. தமிழக காங்கிரஸும் இந்த அலையிலிருந்து தனித்து ஒதுங்கியிருக்க முடியவில்லை.

திரைப்படக் கலைஞர்களும் ஒன்று சேர்ந்து ராமேஸ்வரத்தில் கண்டனப் பேரணியும் பொதுக்கூட்டமும் நடத்தித் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள்.

இலங்கையில் போர் தீவிரமடைந்தாலும், அங்குள்ள செய்திகளை சரிவரத் தெரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு இலங்கை அரசின் கெடுபிடிகள், ஐ.நா.வின் தன்னார்வத் தொண்டு அமைப்பைக்கூட இலங்கையிலிருந்து வெளியேற்றும் நெருக்கடிகள், புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிளிநொச்சியையும் முல்லைத் தீவையும் கைப்பற்ற இலங்கை அரசு நடத்தும் தீவிரத் தாக்குதல்கள்...

இந்தப் பின்னணியில் இலங்கையில் மூன்று லட்சம் பேர் வரை அகதிகளாகி, புகலிடம் தேடி அலைகிறார்கள். அவர்களுக்கு உணவு, மருந்தைக் கொடுப்பதைக்கூடத் தடுத்துக் கொண்டிருக்கிற நிலையில் & தமிழகத்திலிருந்து எழுந்திருக்கிற ஒற்றுமையான கண்டனக் குரல் முக்கியமானது. அத்தியாவசியமானதும்கூட.

இலங்கை அரசுக்கு இதுவரை பல உதவிகளைச் செய்திருக்கிற மத்திய அரசு, இனியாவது அதை அடியோடு நிறுத்தி அங்குள்ள தமிழர்களின் எதிர்காலம் குறித்து உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும். அதுவரை தமிழகத்தில் உள்ள அனைவரின் ஒற்றுமைக்குரலும் ஓங்கித் தொடரட்டும்..

Edited by NIZHALI

  • தொடங்கியவர்

அரசு கேள்வி பதிலில் இருந்து...

கேள்வி...:

"இலங்கையில் நடப்பது அதன் உள்நாட்டுப் பிரச்னை. அதில் இந்தியா தலையிட முடியாது. கருணாநிதி முதலில் இதைப் புரிந்து கொள்ளட்டும்" என்று சொல்லியிருக்கிறாரே ஜெயலலிதா?

ஜோ. ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

பதில்..:

சொல்லவில்லை, பிதற்றியிருக்கிறார். வங்காள தேசத்தில் ஒரு பிரச்னை என்ற போது இந்தியா தலையிடவில்லையா? காஷ்மீர் தனி ராஜ்ஜியமாக இருந்த போது இந்திய ராணுவம் அங்கே நுழையவில்லையா? அவ்வளவு ஏன், இதே இலங்கைக்கு அமைதிப் படை செல்லவில்லையா? ஊருக்கு ஒரு நீதி என்றால் ஜெயலலிதாவுக்கு மட்டும் தனி நீதி. கொழும்பிலும் வட கிழக்கு இலங்கையிலும் இன்றைக்குத் தமிழர்கள் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் ஒவ்வொரு நொடியும் செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் பயங்கரம் போயஸ் தோட்டத்தில் ஏஸி அறையில் சூப் குடித்துக் கொண்டிருப்பவருக்கு எப்படிப் புரியும். தமிழ்ப்புத்தகம் வைத்திருப்பதும், தமிழ் பேசுவதும் படிப்பதுமே குற்றம் என்கிற நிலை அங்கே நிலவுகிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு தமிழனும் இன்று ஈழத்தமிழனின் நிலையைக் கண்டு கொதித்துக் கொண்டிருக்கிறான் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு கருணையும் ஆதரவும் காட்டாதவர்கள் தமிழர்களாக மட்டுமில்லை, மனிதர்களாக இருக்கவே அருகதையற்றவர்கள்.

  • தொடங்கியவர்

தமிழக மீனவர்கள் கூறும் சோகம்..

=========

இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இலங்கைத் தமிழர்களை மட்டுமல்லாமல், தமிழக மீனவர்களையும் சுடுகிறது இலங்கை ராணுவம். பல மீனவர்களைப் பிடித்து சிறையில் அடைக்கிறது.

தமிழ்நாட்டிலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்று இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் சித்திரவதைகள் அனுபவித்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களை இராமேஸ்வரத்தில் சந்தித்துப் பேசினோம்.

பீட்டர், லோயலன், சுவீசன், ஆரோக்யம் ஆகியோருடன் திவாகர் என்ற பத்து வயதுச் சிறுவனும் சில மாதங்களுக்கு முன் கடலுக்குச் சென்றுள்ளனர். திடீரென அவர்களைச் சுற்றி வளைத்த இலங்கை ராணுவம் துப்பாக்கி முனையில் அவர்களைக் கைது செய்துள்ளது. சுமார் இரண்டு மாதம் சிறைவாசத்திற்குப்பிறகு அவர்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில் பீட்டர் நம்மிடம்

``நாங்க இந்திய எல்லையோரத்தில் படகுகளை நிறுத்தி வலைகளைப் போட்டு மீன்பிடித்துக்கொண்டிருந்தோ

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குமுதம் .

:(

  • தொடங்கியவர்

கேலிச்சித்திரத்தை தவறுதலாக முதலில் இணைத்திருந்தேன். தவறு திருத்திவிட்டேன் இப்போது (வெட்டி ஒட்டும் வேலை கூட சரியாக வருகுது இல்லை ) :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.