Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுக்கு "மீண்டும் திரும்பும்' பிரபாகரன் - தமிழ்நாட்டு மக்களின் மன நிலை மாறியுள்ளது - தெகல்ஹா

Featured Replies

2002 இல் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவையும் ஏனைய அரசியல்வாதிகளையும் இலங்கைத் தமிழ் போராளிகளின் ஆதரவாளர்களென கூறிக் கைது செய்திருந்தார்

.6வருடங்களின் பின்னர் நிலைமை முழுமையாக தலை கீழாக மாறியுள்ளது.தமிழ்நாட்டு மக்களின் மன நிலை தமிழ்க் கிளர்ச்சியாளர்களுக்கு சாதகமாக மாறியுள்ளது.

மாநிலத்தின் இரு முன்னணி ஊடக இல்லங்களான "நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்',தமிழ் வார இதழான "ஆனந்த விகடன்' ஆகியவை மேற்கொண்ட அண்மைய கருத்துக் கணிப்பீட்டின் பிரகாரம் இலங்கைத் தமிழ் விடுதலை இயக்கத்துக்கும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அடிமட்டத்தில் அபரிமிதமான ஆதரவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களின் இழப்புகள் அதிகரித்து வருவது தொடர்பான செய்திகள் பிரபாகரன் மீதும் புலிகள் இயக்கத்தின் மீதுமான பொதுமக்களின் அனுதாபத்தை வலுவடையவே செய்துள்ளது.கடந்த இரு வாரங்களாக மாநிலத்தில் ஆர்ப்பாட்டங்கள் பரவலாக இடம்பெற்றன.பல இடங்களில் இலங்கை அரச தலைவரின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டன.

சிங்களவர்களுக்கு ஆதரவாக செயற்படுகின்றதென்ற குற்றச்சாட்டில் ஆங்கில தினசரியான "இந்து'வின் பிரதிகள் எரிக்கப்பட்டன.கோயம்புத்தூரி

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த தெகல்ஹா?

யார் எழுதினா இந்த கட்டுரையை?

தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் அமைச்சர்கள் (மத்திய அரசிலுள்ள) ஏன் ராஜிநாமா (பின் திகதியிடப்பட்ட) கடிதங்களை கையளித்தனர்? இந்தியாவின் முன்னணி இணையத்தளமான தெகல்ஹாவில் வினோஜ்குமார் தான் கண்டு கேட்டதை விரிவாக எழுதியுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது

2002 இல் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவையும் ஏனைய அரசியல்வாதிகளையும் இலங்கைத் தமிழ் போராளிகளின் ஆதரவாளர்களென கூறிக் கைது செய்திருந்தார். 6 வருடங்களின் பின்னர் நிலைமை முழுமையாக தலை கீழாக மாறியுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் மன நிலை தமிழ்க் கிளர்ச்சியாளர்களுக்கு சாதகமாக மாறியுள்ளது. மாநிலத்தின் இரு முன்னணி ஊடக இல்லங்களான "நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்', தமிழ் வார இதழான "ஆனந்த விகடன்' ஆகியவை மேற்கொண்ட அண்மைய கருத்துக் கணிப்பீட்டின் பிரகாரம் இலங்கைத் தமிழ் விடுதலை இயக்கத்துக்கும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அடிமட்டத்தில் அபரிமிதமான ஆதரவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் மக்களின் இழப்புகள் அதிகரித்து வருவது தொடர்பான செய்திகள் பிரபாகரன் மீதும் புலிகள் இயக்கத்தின் மீதுமான பொதுமக்களின் அனுதாபத்தை வலுவடையவே செய்துள்ளது.

கடந்த இரு வாரங்களாக மாநிலத்தில் ஆர்ப்பாட்டங்கள் பரவலாக இடம்பெற்றன. பல இடங்களில் இலங்கை அரச தலைவரின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டன. சிங்களவர்களுக்கு ஆதரவாக செயற்படுகின்றதென்ற குற்றச்சாட்டில் ஆங்கில தினசரியான "இந்து'வின் பிரதிகள் எரிக்கப்பட்டன. கோயம்புத்தூரில் "இந்து' அலுவலகம் மீது தாக்குதல் இடம்பெற்றது. மாணவர்கள் வகுப்புகளைப் பகிஷ்கரித்தனர். சட்டத்தரணிகள் நீதிமன்றங்களை புறக்கணித்தனர். அக்டோபர் 19 ஆம் திகதி திரைப் படத்துறையினர் இராமேஸ்வரத்தில் மாபெரும் எதிர்ப்புப் பேரணியை நடத்தினர்.

பாராளுமன்றத் தேர்தலில் கண் வைத்திருக்கும் அரசியல் கட்சிகள் ஈழப் பிரச்சினையை கையிலெடுக்க வேண்டிய நிலைமைக்கு வலிந்து தள்ளப்பட்டனர். திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்த தமிழ் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்கள் யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்காவிடில் பதவியை இராஜிநாமா செய்து விடப் போவதாக மிரட்டியுமிருந்தனர். ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசுக்கு ஆதரவளிக்கும் (16 தி.மு.க., 5 பா.ம.க., 10 காங்கிரஸ், 2 ம.தி.மு.க., 2 ம.தி.மு.க. அதிருப்தியாளர்) இந்த எம்.பி.க்களின் அச்சுறுத்தலையடுத்து முகத்தை காப்பாற்றிக் கொள்ளும் தீர்வுக்காக இந்திய அரசு கொழும்புடன் தொடர்பு கொண்டுள்ளது.

அதேசமயம், சென்னையிலிருந்து தென்மேற்கே 375 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் சேலம் மாவட்டத்திலுள்ள கொளத்தூரில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் இருக்கின்றனர். "குடும்ப உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டால் உங்கள் குடும்ப அல்பத்திலிருந்து அவரின் படத்தை எடுத்து வீசிவிட மாட்டீர்கள். அவர் இப்போதும் குடும்ப உறுப்பினராக இருக்கிறார். எங்கள் குடும்பங்களின் ஒரு உறுப்பினரே பிரபாகரன். அவர் குறித்துப் பெருமைப்படுகிறோம். அவர் விடுதலைப் போராளி என்று கூறுகிறார் கொளத்தூர் மணி. அவர் பெரியார் திராவிடக் கழகத் தலைவராவார். கொளத்தூர் பகுதியிலுள்ள கிராமங்களிலுள்ள பல வீடுகளின் சுவர்களில் பிரபாகரனின் புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டுள்ளது. சட்டசபைத் தேர்தலில் பிரபாகரன் போட்டியிட்டால் வெற்றி பெறுவாரென உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

கொளத்தூர் பட்டின பஞ்சாயத்தில் 10 கிராமங்கள் வரை இருக்கின்றன. சனத்தொகை 75 ஆயிரமாகும். 1980 களில் பிரபாகரனின் உறுப்பினர்கள் 2 ஆயிரம் பேர் கும்பரப்பிட்டி போன்ற இக்கிராமங்களில் பயிற்சி பெற்றனர்.

"பையன்கள் சுமார் 3 வருடங்கள் இங்கு இருந்தனர். அவர்களுக்கு உணவும் புகலிடமும் கிராம மக்கள் வழங்கினர் என்று பால சுப்பிரமணியம் கூறுகிறார். இந்த முகாம்களில் தொண்டர் சேவைகளை இவர் மேற்கொண்டவராகும்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் பையன்கள் மிகவும் ஒழுக்கக் கட்டுப்பாடுடையவர்கள். அவர்களில் பலர் இலங்கை இராணுவத்தால் பாதிக்கப்பட்டவர்கள். செல்வந்த குடும்பங்களைச் சேர்ந்த பையன்களும் இருந்தனர். அவர்கள் பலவற்றையும் இழந்தவர்கள். தமது தாய்மார், சகோதரிகள், தமது கண்முன்னால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட

யார் இந்த தெகல்ஹா?

யார் எழுதினா இந்த கட்டுரையை?

http://www.tehelka.com/story_main40.asp?fi...ran_returns.asp

http://en.wikipedia.org/wiki/Tehelka

சஞ்சீகை, ஜோர்ஜ் பெர்ணான்டஸ் இன் ஊழலை ஆதாரத்துடன் வெளிபடுத்தியவர்கள், பின்னர் அவர் குற்றசாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார்,

இந்த சம்பவம் தான் தெகல்ஹாவை பிரபலபடுத்தியது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.