Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்ணாவிரதத்தில் சட்ட விரோதமாக பேச நடிகர்களுக்கு தடை

Featured Replies

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் நவம்பர் 1ம் தேதி நடக்கும் உண்ணாவிரதத்தில், நடிகர், நடிகைகள் சட்டத்துக்கு புறம்பாக பேச நடிகர் சங்கம் தடை விதித்துள்ளது.

இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, தமிழ் திரையுலகம் சார்பில், ராமேஸ்வரத்தில் பேரணியும், பொதுக் கூட்டமும் நடத்தப்பட்டது. நடிகர், நடிகைகள் அதிக அளவில் பங்கேற்கும் வகையில், இந்நிகழ்ச்சியை சென்னையில் நடத்த வேண்டும் என்று நடிகர் சங்கம் விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் சங்கம், நவம்பர் 1ல் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தது.

இதற்கிடையே, ராமேஸ்வரத்தில் நடந்த கூட்டத்தில் திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் ஆவேசமாக பேசினர். அவர்களின் பேச்சு, இந்திய ஒருமைப் பாட்டுக்கு எதிரானது என்று பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர்.

இதையடுத்து, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இயக்குநர்கள் பாரதிராஜா, தயாரிப்பாளர் ராமநாராயணன் உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.

இந்நிலையில், இலங்கை தமிழர்களுக்காக தி.நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடிகர், நடிகைகள் நவம்பர் 1ம் தேதி உண்ணாவிரதம் இருக்கின்றனர். உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளும் நடிகர்கள் கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசி விடக்கூடாது என்பதில் நடிகர் சங்கம் மிகவும் கவனமாக இருக்கிறது.

உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளும்படி நடிகர், நடிகைகளுக்கு நடிகர் சங்கம் சார்பில் சங்கத்தின் தலைவர் சரத்குமார் அழைப்பிதழ் அனுப்பியுள்ளார். அந்த அழைப்பிதழில், ‘உண்ணாவிரத மேடையில் பேசுபவர்கள், மத்திய, மாநில அரசுகளையோ இலங்கை அரசையோ தாக்கியோ, சட்டத்துக்கு புறம்பாகவோ, பிறர் மனம் புண்படும் வகையிலோ பேச வேண்டாம் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் கருத்துகளை பதிவு செய்வதோடு, உங்களால் இயன்ற நிவாரணத்தையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்தி இணைப்பிற்கு நன்றி அண்ணா.

இவ்செய்தி பிறந்த இடம் எங்கே?

  • தொடங்கியவர்

அய்யோ எடுத்த இடத்த போட மறந்திட்டேன். இப்ப எங்க சுட்டது என்று மறந்து போயிட்டடேன். :(:huh:

thatstamil.oneindia.in/news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.