Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை: என்னால் தனித்து ஏதும் செய்ய முடியாது-கருணாநிதி

Featured Replies

சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபட்டு சிலர் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தனித்து என்னால் எதுவும் செய்ய முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் நடைபெறும் தமிழ் இனப் படுகொலைஇ நாற்பது ஆண்டுக் கால வரலாற்றுக்குரிய தொடர் நிகழ்ச்சியாகி விட்டது.

அதைத் தடுத்து நிறுத்தித் தமிழர்க்கு உரிமை பெற்றுத் தர போர்க்கோலம் பூண்டவர்கள் பகைவர்கள் மீது பாய்ந்திடாமல்; சகோதர யுத்தம் நடத்துவதிலேயும் அவற்றில் மாண்டு மடியும் தமது பழைய களத் தளபதிகளுக்கு சமாதிகள் அமைத்திடும் பணியிலேயும் காட்டிய விறுவிறுப்பை இன ஒற்றுமையில் காட்டத் தேவையில்லையென்றே கருதிச் செயல்பட்டு தமது இனம் அறவே செத்து மடிவது குறித்து அக்கறையற்றே இருந்து விட்டனர்.

அதிர்ச்சி தரத் தக்கதும் ஆறாத் துயரம் அடையத் தக்கதுமான நிகழ்வுகள் இலங்கை மண்ணில் நித்தியத் 'திருவிழா'க்கள் ஆகி; இறுதிக் கட்டமாக அமைந்துள்ள இன்றுள்ள சோக நிலைஇ உலகத் தமிழர்கள் அனைவரும் அறிந்ததே.

இன்றைய நிலைக்கு முடிவு கண்டிட எடுத்திடும் முயற்சி என் ஒருவனால் மட்டுமே முற்றுப் பெறக் கூடியதல்ல!. இதை உணர்ந்திருப்போர் கூட நான் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருப்பதால் என்னால் தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்று தவறாக எண்ணுகிறார்கள்; அல்லது தவறாகக் கூறுகிறார்கள்.

"இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு ஒருமைப்பாட்டுக்கு விரோதமாக எதுவும் பேசுவோம் எங்களுக்கு வேண்டியது இலங்கையில் தமிழ் ஈழம் தான்'' என்கிற அவர்களின் பேச்சும் எழுத்தும் எனக்குப் புரிகிறது.

ஆனால் இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கிடையே அலை மோதும் எதிர் விமர்சனங்களையும் ஓர் அரசு சிந்தித்துச் செயல்பட வேண்டியிருக்கிறதல்லவா? அவற்றை அலட்சியப்படுத்த முடியாதல்லவா? முதலில் அத்தகைய சட்டக் கட்டுப்பாடுகளை உடைக்கும் விதமாகப் பேசுகிறார்கள்.

சட்டரீதியாக அதன் மீது நடவடிக்கை எடுத்திட நேர்ந்தால்இ 'கருணாநிதி இலங்கைத் தமிழர்களுக் கெதிராக நடந்து கொள்கிறார்' என்று என் மீது 'பெரும் பழி' சுமத்துகிறார்கள். சாதனைகள் புரியும் ஆட்சி என்பதற்குச் சான்றாக அமைந்துள்ள அடுக்கடுக்கான திட்டங்களும்இ அவற்றின் செயல்பாடுகளும் அவை தொடர்பான புள்ளி விபரங்களுமே போதுமானவை என்ற மன நிறைவு எனக்கிருந்தாலும்;

எனக்கும் என் தலைமையில் உள்ள ஆட்சிக்கும் எப்படியோ ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று தீர்மானித்து; எவையெவை சட்ட விரோதமான செயல்களோ; அவற்றிலே ஈடுபட்டு தமிழக அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் தந்திரத்தைக் கையாண்டு வருகிறார்கள்.

இந்தப் பிரச்சனையில் சுதந்திரமாக செயல்பட வருக என்று என்னைக் காட்டிலும் வீரமிக்க தமிழர்களை அழைப்பதோடு நான் ஒதுங்கி நின்று விடாமல்; அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் உறுதி கூறி என்னுடனிருந்து துணை நிற்கும் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.

இந்திய அரசு என் வேண்டுகோளையும் அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தின் தீர்மானங்களையும் படிப்படியாக நிறைவேற்ற முனைந்ததற்கு சோனியா காந்தி பிரதமர் மன்மோகன் சிங் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கும்

இலங்கை தமிழர்களுக்கு மருந்து உணவு உடை ஆகியவற்றை செஞ்சிலுவை சங்கம்இ ஐ.நா. மன்றம் ஆகியவற்றின் மூலம் வழங்க இதுவரை 8 கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கிய தமிழர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் வழங்கிட வேண்டுகிறேன்.

நான் தெரிவித்துள்ள இந்த கருத்துக்கள்; இலங்கை தமிழர்களின் காயத்திற்கும் இங்குள்ள சில தலைவர்களின் எரிச்சலுக்கும் தக்க சிகிச்சைக்கான மருந்தாகட்டும்.

அவர்களின் நலிவு தீர்த்திட ஒரு வகையில் நாம் பயன்படுகிறோம் என்கிற மன நிறைவுடன் என்றும் போல் தமிழ்த் தொண்டு தமிழினத் தொண்டு தொடர்வோம் என்று கூறியுள்ளார்.

தற்ஸ்தமிழ்

இதை வாசிக்கும் போதே.....வேண்டாம்.

Edited by THEEPAN0007

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரின் ஆதங்கத்தை அனைவரும் புரிந்து கொண்டு ஈழத்தமிழர் நலனை அரசியலாக்கி அரசியல் இலாபம் தேடாமல்.. ஈழத்தமிழர்கள் எதிர்பார்ப்பது போல தமிழகக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட முன் வர வேண்டும்.

அதேவேளை.. துரதிஷ்டவசமாக.. தமிழீழம் கேட்டுப் புறப்பட்ட பலர் இந்திய மத்திய அரசின் உளவுப்படையாலும்.. சிறீலங்காவின் உளவுப்படையாலும் விலைக்கு வாங்கப்பட்டு தமிழீழ விடுதலைக்கு எதிரான துரோகிகளாக மாறிவிட்ட நிகழ்வுகள் ஈழத்திலும் கடந்த காலங்களில் நடந்தேறித்தான் உள்ளன. அவற்றை மறந்து விட்டு ஈழத்தில் உள்ள தமிழ் தேசியத்தின் பால் பற்றுறுதி கொண்ட மக்கள் அனைவரும் தமிழீழத் தேசிய தலைவரின் பின்னால் ஒருங்கிணைய முன் வர வேண்டும். அதுவே மக்களாகிய எமக்கு எமது பிராதான எதிரியான சிங்களப் பேரினவாதத்தின் சதியை முறியடித்து தேச விடுதலையை பெற்றுத்தரும்.

அதை விடுத்து தொடர்ந்தும் காட்டிக்கொடுப்புகளிலும்.. துரோகத்தனத்திலும் செயற்பட்டு பணத்துக்காக மக்களையும் தேசத்தையும் காட்டிக் கொடுப்பவர்கள் மக்களால் எமது தேசத்தின் வரலாற்றால் என்று மன்னிக்கப்பட மாட்டாதவர்களாகவே கருதப்பட வேண்டும். :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
http://www.pathivu.com/news/421/34//d,topnews_full.aspx

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்கோலம் பூணாமல் வாயால் மாத்திரம் வெட்டி விழுத்தித்தான் 50000க்கு மேற்பட்ட சிங்களப்படைகளைக் கொன்று குவித்தார்கள் போலுள்ளது..

தமிழ் தேசியத்தைச் சிதைத்து சிங்களவர்களோடு சேர்ந்து ஒட்டுமொத்த தமிழினத்தையே அழிக்க முனைபவர்களை சகோதரர்களாக நினைக்கும் "ஞானோதயம்" புரியவில்லை...

தமிழ் தேசியத்தைச் சிதைத்து சிங்களவர்களோடு சேர்ந்து ஒட்டுமொத்த தமிழினத்தையே அழிக்க முனைபவர்களை சகோதரர்களாக நினைக்கும் "ஞானோதயம்" புரியவில்லை...

சிலர் பலகாரணங்கள் சொல்வார்கள்.... இதுக்கு ஒரே ஒரு கோர் காரணம் மட்டும்தான் உண்டு.. அது பயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலர் பலகாரணங்கள் சொல்வார்கள்.... இதுக்கு ஒரே ஒரு கோர் காரணம் மட்டும்தான் உண்டு.. அது பயம்.

பயம் இல்லை. பாசம். பிள்ளைகள் மேல் கொண்ட அளவில்லா பாசம். :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.