Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை 336.67 பில்லியன் ரூபா. (4 வது இணைப்பு) ஜனாதிபதியின் தமிழ் உரையினை இங்கு கேட்கலாம் )

Featured Replies

வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை 336.67 பில்லியன் ரூபா. (4 வது இணைப்பு) ஜனாதிபதியின் தமிழ் உரையினை இங்கு கேட்கலாம் )

நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் அடிப்படையில் 2009 ஆண்டில் அரசாங்கத்தின் முழு வருமானம்,855 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 779 பில்லியன் ரூபா வரி அறவீடுகள் மூலம் பெற்றுக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்த வருடத்திற்கான அரசாங்கத்தின் முழு செலவு ஆயிரத்து 191.67 பில்லியன் ரூபாவாகும், இதனடிப்படையில் வரவு செலவுத் திட்டத்தின் துண்டு விழும் தொகை 336.67 பில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. துண்டு விழும் தொகையை ஈடு செய்ய 123.02 பில்லியன் ரூபா வெளிநாடுகளில் இருந்தும் 183.13 பில்லியன் ரூபா உள்நாட்டிலும் கடனாக பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் துண்டு விழும் தொகையானது மொத்த தேசிய உற்பத்தியில், 6.5 வீதம் என கணக்கிடப்பட்டுள்ளது.

அதே நேரம்; 2009 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி, அரசாங்கம் இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள சில வரி அறவீடுகள் காரணமாக பொருட்களின் விலைகள் அதிகரிக்க கூடும் என ஐக்கிய தேசிய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதியின் தமிழ் உரையினை இங்கு கேட்கலாம்

ஜனாதிபதியா? யாருக்கு ஜனாதிபதி?

ஓ! சிங்கள பேரினவாத சிறீலங்காவின் ஜனாதிபதியை சொல்கிறீர்களா?

மகாவம்ச போதை தலைக்கேறி தமிழினப் படுகொலையை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு சிங்கள இனவெறியன்

என்றும் தமிழர்களுக்கு ஜனாதிபதியாக முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்!!!

Edited by vettri-vel

  • தொடங்கியவர்

இந்தக் கொமெடியை எங்கேபோய்ச் சொல்ல...

மகித்தாவ இப்படிச் சொல்லுறது?

"தமிழ் LTTE அவர்களோடு ஒன்று சேருமாரு அப்பாவி மக்களிடம் நான் வேண்டுகிறேன்.."

மகிந்த தனது தமிழ் உரையில் "பாதுகாப்பு படை" என்பதற்கு "பாதுகாப்பு பாடை" என்று மிகச்சரியாக சொல்கிறார்கள்!!! :unsure:

ஆமாம்! தனது சிங்கள பாதுகாப்பு படைகள் ஒட்டுமொத்தமாக ஒரு நாள் பாடையில் ஏறப் போகிறது என்பதை மகிந்த சொல்லாமல் சொல்லிவிட்டார் !!! :lol:

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"உந்த ஆள் தமிழனை மட்டுமல்ல 'தமிழையும் கொலை செய்யுது"...!!!

அவர் தன்னை எம் விடுதைலைகாக முழுமையாக கொடுத்துள்ளார். இவர் ஆயிரம் சந்திரிக்கா. அவர் தான் மட்டுமில்லை தன் குடும்பத்தையே தமிழீழத்துக்கு தந்தவர்.

நம்புங்கோ, அடுத்த வரவு செலவு சரியான சுகமாய், பாதுகாப்பு செலவே இருக்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது பாதுகாப்பு பாடை படை

அந்தப் பிரதேஷத்திற்கு வருவது

மனித நேன்யத்தின் பெயரால்

உங்களை மிக்கவே from LTTE அவர்காளோடு ஒன்றுசேருமாறு

அப்பாவி மக்களிடம் நான் வேண்டுகிறேன்.

:unsure::lol::huh::o

Edited by காட்டாறு

  • தொடங்கியவர்

மகிந்த அவர்களுக்கு நன்றி!

உங்கள் தமிழ் உரையை கேட்கும் போதுதான் தமிழர்களின் சனாதிபதி ஒரு தமிழனாகவே கட்டாயம் இருக்க வேண்டும் என்பது புரிகிறது!

மேலும் மொழியையே புரிந்து கொண்டு பேச நீங்கள் படும் சிரமம், உங்களால் ஏன் எங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளமுடியாதிருப்பதற்கான காரணத்தை தெளிவாக உணர்த்துகிறது!

உங்கள் தமிழில் பேசும் முயற்சியில் நீங்கள் காட்டிவரும் முன்னேற்றம் உங்களுக்கு தமிழ் கற்பதிலும் தமிழீழத்தை கொடுத்துவிடுவது சுலபமானது என்பதை விரைவில் புரியவைக்கும்!

:lol:

Edited by சாணக்கியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.