Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா போரை பின்னால் இருந்து இயக்குகிறது - சீமான், அமீருடனான சந்திப்பின் பின்னர் வைகோ தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா போரை பின்னால் இருந்து இயக்குகிறது - சீமான், அமீருடனான சந்திப்பின் பின்னர் வைகோ தெரிவிப்பு

திகதி: 09.11.2008 // தமிழீழம் // [சோழன்]

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அவர்களை மதுரையில் திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் இலங்கைத் தமிழர்களுக்காக தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் போராட்டங்கள் குறித்து சந்தித்து ஒரு மணி நேரம் பேசியுள்ளனர்.

சந்திப்பின் பின்னர் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது: சிறீலங்கா அரசுக்கு ஆயுதம், ராடார், கோடிக் கணக்கில் பணம் கொடுத்து, போரை பின்னால் இருந்து இந்தியா இயக்குகிறது. பலாலி விமான தளத்தை புதுப்பித்து கொடுத்துள்ளது. இராணுவத்துக்கு ஆயுத உதவி செய்துள்ளது. இலங்கை தமிழர் கொல்லப்படுவதற்கு மன்மோகன் சிங் அரசுதான் காரணம். அந்த அரசில் இடம் பெற்றுள்ள தி.மு.க வுக்கும் முதல்வர் கருணாநிதிக்கும் இதில் பொறுப்புண்டு.

இந்த துரோகத்தை நாங்கள் மக்கள் மன்றத்தில் சொன்னதால், எங்களை அரசு கைது செய்தது.இலங்கைத் தமிழருக்கு 800 தொன் உதவி பொருளும், நிதி உதவியும் அளிப்பதாக கூறுவது, குரல்வளையை நெரித்தவர்களே முதல் உதவி செய்வது போல் உள்ளது. தமிழக மக்களின் கோபத்துக்கு பயந்து இலங்கைத் தமிழர்களுக்கு உதவி பொருள் அளிப்பதாக நாடகம் ஆடுகிறார்கள்.

அவர்கள் துரோகத்தை மக்களிடம் தொடர்ந்து சொல்வோம். மத்திய அரசை கண்டித்து நவம்பர் 12 முதல் 18ம் திகதி வரை ம.தி.மு.க சார்பில் உண்ணாவிரதம், பொதுக் கூட்டங்கள் நடைபெறும். இவ்வாறு வைகோ கூறினார்.

சங்கதி

  • கருத்துக்கள உறவுகள்

உன்மை தான்

தமிழகத்தில் எழுந்துள்ள கொந்தளிப்பு ஈழம் கிடைக்கும்வரை ஓயாது. உங்களுக்கு நன்றி சொல்ல எமக்கு வார்த்தைகளும் இல்லை. தகுதியும் இல்லை. ஆனால் தமிழீழ வரலாற்றில் உங்களின் பெயர் என்றும் நிலைத்திருக்கும்.

தமிழகமக்கள் விரைவில் ஒருங்கிணைந்த மக்கள் விழிப்பு போரட்டங்கள் நடத்தி மத்திய,மா நில அரசுகளின் சதிவேலைகளுக்கு எதிராக திரண்டு இரண்டினையும் கொள்கைகளை மாற்ற வைக்க வேண்டும் அல்லது ஆட்சிகளைக்கலைத்து புதிய அரசுகளை ஏற்படுத்தும் வரை போரட்டங்களை முன்னெடுக்க வேண்டும். செய்வார்களா?

கருணா நிதியும் ஜெயலலிதாவும் தமிழ்னாடு காங்கிரஸ் கட்சியும் இல்லாத ஒரு சர்வகட்சி மாகா நாடு புதிதாக உடனிடியாக கூட்டப்படல் வேண்டும், அதில் கடைசியாக கூட்டிய மா நாட்டு தீர்மானங்களுக்கு நடந்த கதியை அறிவித்து ஒரு கூட்டுகட்சி ஒரு பெயரில் உண்டாக்கப்பட்டு தமிழ்னாடு, இந்திய அரசு பதவிகளை தீர்மானிக்கும் நிலைமையை கொண்டுவரவேண்டும்..இதன் மூலம் பல தமிழர்களுக்கு சார்பான விடையங்களை கையாண்டு போலிகளை அரசியலில் இருந்து ஒதுக்கி தமிழகத்திற்கு தமிழர்களுக்கு விமோசனம் உண்டாக்க முடியம்,,

ஆம் இது முற்றிலும் உன்மை இந்திய ரானுவம் தான் இலங்கை ரானுவத்திற்க்கு எல்லாவகையிலும் உதவி செய்கிறது.இதற்க்கு பல ஆதாரங்கள் உள்ளன.குறிப்பாக வவுனியா முகாம் தாக்குதலில் காயமடைந்த இந்திய அதிகாரிகள்…அதுமாத்திரம் அல்ல மேலும் 265 இந்திய அதிகாரிகள் வடக்கு யுத்தமுனைகளில் இருப்பதாக இந்திய தூதரகமே அறிவித்ததையும் நாம் புறம்தள்ளிவிடமுடியாது. மேலும் சார்க் மகாநாட்டுக்காக வந்த 3000 இந்தியபடையினர் மீண்டும் திரும்பியதாக எந்த தகவலும் இல்லை. மேற்படி உண்மைகள் வெளிவந்துவிடும் என்ற காரணத்தில் மத்திய அரசாங்கமே கருணாநிதியை வைத்துக்கொண்டு நாடகம் ஆடுகிறது போல் உள்ளது. திருவாளர்.வை.கோ.அவர்கள் அண்ணன் சீமான்இஅமீர் ஆகியோருடன் பேசியிருப்பதன்மூலம் ஒருவிடயம் தெளிவாகிறது இந்த விவகாரத்தை மிக சிரத்தையுடன் கையால்வார்கள். இதை அவர்கள் கவணமாகவும் நுனுக்கத்துடனும் செயல்பட்டு தமிழகத்துக்கும் முழு உலகத்துக்கும் வெளிப்படுத்துவார்கள் எண்றாள்இ அது அவர்கள் தமிழ் ஈழத்துக்கு செய்யும் மிகப்பெரிய பணியாகும். அதற்க்காக நாம் என்றென்ரும் அவர்களுக்கு கடமைபட்டவர்களாக இருப்போம்.உங்களைப்போண்ற உண்மையான எல்லா தமிழ் இண உணர்வாளர்களுக்கும் ஈழத்தமிழர்களாகிய நாம் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்களின் கொந்தளிப்பு மாநில அரசு, மத்திய அரசுகள் மீது தாக்கங்களை உண்டுபண்ண முடியாமல் செய்வதற்கு பல்வேறு வகையான பிரச்சாரங்கள் நடைபெறுகின்றது. இதில் ஒன்றுதான், தமிழ் மக்கள் வேறு; புலிகள் வேறு என்ற பிரச்சாரம். இத்தகைய பிரச்சாரங்களை முறியடிக்க வைகோ, நெடுமாறன், திருமாமளவன் போன்றோர் செய்யும் சேவைகளுக்கு ஈழத்தமிழர் என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பார்கள். தமிழக மக்களின் எழுச்சிமூலம் இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் வந்தால் மாத்திரமே வன்னியில் அவலம் நிகழ்வது தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மத்திய அரசு தமிழகத்திலிருந்து வரும் எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியப்போவதில்லை என்று திரும்பத் திரும்ப நிரூபித்து விட்டது. தமிழக முதல்வர் கருணாநிதி தமது 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக நேரிடும் என்று எச்சரித்த பின்னரும் கூட மத்திய அரசிடமிருந்து வந்த பதில என்னவென்றால், " நாம் இலங்கைக்கு ஆயுத உதவிகள் செய்து வருகிறோம், இனியும் செய்வோம். நாம் அவர்களுக்கு ஆயுதமும் பயிற்சிகளும் கொடுப்பது எமது பாதுகாப்புக்கே அன்றி, சிங்கள அரசாங்கத்தின் பாதுகாப்புக்காக மட்டுமல்ல" என்பதுதான். இதை கர்நாடகத்தில் வைத்து அவர்களின் மத்திய அமைச்சர் ஒருவரே பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்.

இதற்குப்பின்னர் எதுவுமே இன் அவியாது என்ற மத்திய அரசின் உதாசீனத்துக்குப் பின்னர் கலைஞரும் கீழிறங்கி வந்து"போர் நிறுத்தம் சாத்தியமில்லை, 40 வருட போர் எப்படி 4 நாளில் தீரும்? மத்திய அரசை இக்கட்டில் மாட்டிவிடவோ அல்லது அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கவோ நான் விரும்பவில்லை" என்று அறிக்கை விட்டார். தனது 40 உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்ற எச்சரிக்கையும் காற்றில் பறக்கவிட்டு, போர் நிறுத்தமும் வேண்டாம், இலங்கை அரசினூடாக நிவாரண உதவி அளித்தாலே போதும் என்ற நிலமைக்கு மத்திய அரசு கலைஞரை காதில் திருகி உட்கார வைத்தது.

எமக்குச் சார்பாக இருக்கக் கூடியவர் என்று கருதப்பட்ட கலைஞராலேயே மத்திய அரசை "எமது அடிப்படைக் கோரிக்கைகளாவது நிறைவேற்றுங்கள்" என்று கேட்க முடியவில்லையாம், இந்த லட்சணத்தில் தமிழ்த் தேசியத்தை எதிர்த்தே தீருவது என்று கங்கணம் கட்டிச் செயற்படும் ஜெயலலிதாவும், தமிழ்நாடு காங்கிரஸுமா வந்து மத்திய அரசைப் பணிய வைக்கப் போகிறார்கள் ?

சரி இவர்கள் எவருமே வேண்டாம், பாரதீய ஜனதா ஆட்சிக்கு வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது மட்டும் என்ன நடந்துவிடப்போகிறது ? ஒருமுறை ஆட்சியில் இருந்தவர்கள் தானே? ஜோர்ஜ் பெர்னாண்டஸ் எனும் ஈழ ஆதரவாளர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது கூட எம்மீதான தடை அகற்றப்படவில்லையே? அல்லது எமக்குச் சார்பாக ஏதாவது தீர்மானமாவது நிறைவேற்றப்பட்டது ? அந்தக் காலப்பகுதியில் எமது கப்பல்களையாவது தாக்காமல் விட்டார்களா? இதில் எதுவுமே நடக்கவில்லையே?

ஆக இன்று தமிழ்நாட்டில் நடக்கும் தார்மீக ரீதியான போராட்டங்கள் எமக்கு உத்வேகத்தையும் எழுச்சியைஉம் தரக்கூடியவை மட்டுமே. ஆனால் அவை எந்த வித அரசியல், ராணுவ நிலமைகளையும் மாற்றப்போவதில்லை. ஏனென்றால் மத்திய அரசுக்கு எமது போராட்டம் எமக்குச் சார்பான வகையில் தீரவேண்டும் என்ற தேவையோ அல்லது கடப்பாடோ கிடையாது. இது தொடர்பான தமிழ்நாட்டிலிருந்து வரும் எந்தவிதாமான அழுத்தங்களுக்கும் அவர்கள் அடிபணியப்போவதுமில்லை, அதை காதுகொடுத்துக் கேட்கப்போவதுமில்லை. ஆனால் தமிழகத்தில் நடக்கும் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் முனைப்புப் பெறும்போது பாதிக்கப்படப் போவது தமிழக அரசேயன்றி மத்திய அரசில்லை.

இன்றுள்ள கள நிலவரமும், மக்களின் அவல வாழுவும் மாற வேண்டும் என்றால் அது போர்க்களத்தில் புலிகள் மேற்கொள்ளும் நகர்வுகளில்தான் தங்கியிருக்கிறது. அதற்கு எமது பங்களிப்பும் நிச்சயம் தேவை. அல்லது காலச் சக்கரத்தில் நாம் தாழ்வான புள்ளியை அடைந்து மீண்டும் எழுந்து வர நீண்ட நாட்கள் எடுக்கலாம்.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்தியர்களாகக் கருதப்படுவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டு மக்கள் இந்திய அரசால் மதிக்கப்படவில்லை என்பதையே கடந்தகால நிகழ்வுகள் காட்டுக்கின்றன இனிமேலாவது மத்திய அரசுக்கு வால் பிடிக்காமல் தமிழக அரசியல் கடசிகளும் தமிழக மக்களும் ஓன்று சேர்ந்து உங்களின் பலத்தை நிரூபிக்கவேண்டும் தவறினால் நாளை உங்களின் சொந்த பிரச்சனைகள் கூட மத்திய அரசால் பாராமுகமாக விடப்படும் என்பதே யதார்த்தம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.