Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபாகரன் கையசைத்தால்தான் நாட்டுக்கு நிம்மதி; அவர் பச்சைக்கொடி காட்டினால் தான் பாதுகாப்பு: த.தே.கூட்டமைப்பு

Featured Replies

விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் கையசைத்தால் தான் நாட்டில் நிம்மதி ஏற்படுமெனவும், அவர் பச்சைக் கொடி காட்டினால் தான் நாடு பாதுகாப்பாக இருக்குமென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சொலமன் சூ.சிறில் செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார்.

அத்துடன் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைப்பது என்பது வரலாற்றிலேயே சாத்தியமற்றதொன்று எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் பேசும்போதே சொலமன் சூ.சிறில் இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

அமெரிக்காவில் சிறுபான்மை கறுப்பினத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா அந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது இனத்துவ சமத்துவத்தின் அடையாளமாகும். இதை நாம் வரவேற்கிறோம். ஆனால் இந்த சிங்கள தேசத்திலோ, அதன் ஆட்சியமைப்பிலோ எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. இதை 2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமும், அதை சமர்ப்பித்து பேசிய ஜனாதிபதியின் உரையும் தெளிவாக எடுத்துக் காட்டி நிற்கின்றன.

பாதுகாப்புச் செலவினங்களுக்கென நடப்பு ஆண்டை விட 2009 ஆம் ஆண்டிற்கு 1061 கோடியே 30 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா நிதி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. சிறிதொரு நாட்டுக்கு பாதுகாப்புக்கென இவ்வளவு பாரியதொரு தொகையை ஒதுக்கி வெளிநாட்டு உதவிகள் அனைத்தும் யுத்தத்துக்காக பயன்படுத்தப்படுகின்றன.

இந்த யுத்தத்தை அமெரிக்காவுடனோ, சீனாவுடனோஇ ரஷ்யாவுடனோ அல்லது இந்தியாவுடனோ அரசாங்கம் செய்யவில்லை. இந்த நாட்டின் தமிழ் பிரஜைகளுடன் தான் யுத்தம் செய்யப்படுகிறது. கடந்த 30 வருடங்களாக இதைத் தான் அரசாங்கங்கள் செய்கின்றன. ஆனால் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. இந்த மண்ணில் ஒரு தமிழன் இருக்கும் வரையும் இந்த மண்ணில் விடுதலைப் புலி உறுப்பினர் இருக்கும் வரையிலும் அரசாங்கத்தால் இது முடியவே முடியாது. இதை அகராதியில் எழுதிவைத்துக் கொள்ளுங்கள்.

பல இலட்சம் தமிழ் மக்கள் தத்தமது சொந்த இருப்பிடங்களை இழந்து, கோடிக்கணக்கான சொத்துகளையும் இலட்சக்கணக்கான உயிர்களையும் இழந்து நோய் பிணியுடனும் பசி பட்டினியும் அகதிமுகாம்களில் அல்லல்படுகின்றனர். இந்த நிலையில் எம் மக்களுக்கான உயிர் வாழ்விற்கான உணவையும், மருந்துப் பொருட்களையும் மறுக்கும் அரசாங்கமும் அதன் தலைவர்களும் அரசியல் தீர்வை வழங்கி விடுவார்களென நம்பப் போவதில்லை.

குட்டக் குட்ட குனிபவன் தமிழனல்ல. வெட்ட வெட்ட வீரியத்துடன் தழைப்பவன் தான் தமிழன் என்பதை புரியாதவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், வாழ்வும் அந்த நாட்டின் மனித உரிமை பேணலிலேயே தங்கியுள்ளது. ஆனால் இன்று இலங்கையோ மனித உரியை மீறல்கள் இடம்பெறும் நாடுகளில் முன்னிலையில் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அண்மையில் கூட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவத்தை பெறுவதில் இலங்கை தோல்வியடைந்தமை பெரும் வெட்கத்துக்குரிய விடயமாகும்.

போரின் வெற்றி தான் பொருளாதாரத்தின் வெற்றியென சித்தாந்தம் பேசி வெல்ல முடியாத போருக்காக காலத்தை நீடித்து அழிவுகளையும், உயிரிழப்புகளையும் அதிகரித்துக் கொள்ளாமல், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டுமானால், தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு அமைதிவழியில் தீர்வு காண்பதுதான் ஒரே வழி.

இதை நிராகரித்தால் நாம் பிரிந்து சென்று தனித்து வாழ்வது தான் எமக்கு சிறந்த வழி. விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழேவைத்து விட்டு வந்தால் தான் பேச்சுகள் என அரசாங்கம் கூறுகிறது. அது வரலாற்றிலேயே சாத்தியமற்றதொன்று.

புலிகளின் தலைவர் பிரபாகரன் பச்சைக் கொடி காட்டினால் தான் நாடு பாதுகாப்பாக இருக்கும். பிரபாகரன் கையசைத்தால் தான் நாட்டில் நிம்மதி ஏற்படும்' என்றார்.

நன்றி : தமிழ்வின்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மண்ணில் ஒரு தமிழன் இருக்கும் வரையும் இந்த மண்ணில் விடுதலைப் புலி உறுப்பினர் இருக்கும் வரையிலும் அரசாங்கத்தால் இது முடியவே முடியாது. இதை அகராதியில் எழுதிவைத்துக் கொள்ளுங்கள்.

காலம் கனிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.