Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நூறு கோடி இந்தியர்களின் தன்மானத்துக்கும், சுயமரியாதைக்கும் சவால் விட்டுள்ள மகிந்த: வைகோ

Featured Replies

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தமிழ்நாட்டின் ஏழு கோடி மக்களுக்கு மட்டும் அல்ல, நூறு கோடி இந்தியர்களின் தன்மானத்துக்கும், சுயமரியாதைக்கும் சவால் விட்டுள்ளார் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கோடி இந்தியர்களின் தன்மானத்திற்கு சவால் விடுத்துள்ளார் இலங்கை ஜனாதிபதி - வைகோ கடும் சீற்றம்

[17 நவம்பர் 2008, திங்கட்கிழமை 8:55 மு.ப இலங்கை]

சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே இந்திய அரசுக்கு என்றுமே ஏற்படாத அவமானம் ஒன்று இப்போது நேர்ந்து விட்டது. இலங்கைத் தீவில், ஈழத்தமிழ் இனத்தைக் கருவறுக்க, கொடிய இராணுவத் தாக்குதலை நடத்திவரும் சிங்கள அரசின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, இந்தியத் தலைநகரில் நடந்துகொண்ட விதமும், ஆணவத்தோடும், திமிரோடும் இலங்கையில் போர்நிறுத்தம் செய்யமாட்டோம்; இராணுவத் தாக்குதலைத் தீவிரப்படுத்துவோம்; விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் வரை, போரை நிறுத்தப் போவதே இல்லை என்று, கொக்கரித்து விட்டுச்சென்றுள்ளார்.

- இவ்வாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு-

இலங்கையில் போர்நிறுத்தம் செய்வதற்கு விடுதலைப் புலிகள் முன்வந்துள்ள நிலையில் இலங்கை அரசு போர்நிறுத்தம் செய்வதற்கு இந்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் தமிழகச் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட 48 மணி நேரத்துக்குள் இலங்கையின் அரச தலைவர் இவ்வளவு மமதையோடு பேசியது, தமிழ்நாட்டின் ஏழு கோடி மக்களுக்கு மட்டும் அல்ல, நூறு கோடி இந்தியர்களின் தன்மானத்துக்கு, சுயமரியாதைக்கு விடப்பட்டுள்ள சவால் ஆகும்.

இவ்வளவு துணிச்சலாக ராஜபக்ஷ பேசியதற்கு, இந்தியாவின் மன்மோகன்சிங் அரசுதான் காரணம் ஆகும். கடந்த நான்கு ஆண்டு காலமாகவே இலங்கை அரசுக்கு எல்லாவிதத்திலும் இராணுவ உதவிகள் அளித்தும், ஆயுதங்கள், ராடர்களை வழங்கியும் 2 ஆயிரம் கோடி ரூபா வரை வட்டி இல்லாக் கடன் கொடுத்தும், இலங்கை விமானிகள், இராணுவச் சிப்பாய்களுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுத்தும் வந்தது மத்திய அரசே ஆகும்.

இதுமட்டுமன்றி இந்திய - இலங்கை கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்வதும், இந்திய இறையாண்மைக்கே இழுக்கு ஏற்படுத்தும் வகையில், இந்தியக் கடல் எல்லையில் இலங்கைக் கடற்படை கண்ணிவெடிகளைப் போட அனுமதித்தும், ஐக்கிய நாடுகள் சபையில், இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து, சுவிற்ஸர்லாந்தும், நியூஸிலாந்து ஆகிய நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கை அரசோடு சேர்ந்து கொண்டு எதிர்த்துக் குரல் கொடுத்ததும் மன்மோகன் சிங் அரசே.

கடந்த நான்கு ஆண்டு காலத்தில் தொடர்ந்து இந்திய இராணுவத் தளபதிகளை கொழும்புக்கு அனுப்பி, இலங்கை அரசின் இராணுவத்துக்கு ஆலோசனைகளை வழங்கியும், பலாலி விமானத் தளத்தை இந்திய அரசின் செலவில் புதுப்பித்துக் கொடுத்தும், இலங்கை விமானப் படைக்கு ராடர்களை கொடுத்தும், இந்திய நிபுணர்களை இலங்கைக்கு அனுப்பி சிங்கள அரசு நடத்தும் இராணுவத் தாக்குதல்களை, தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை முழுக்க முழுக்கப் பின்னாலே இருந்து இயக்கி வந்தது இந்திய அரசுதான் என்ற மறுக்க இயலாத இந்த உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

இலங்கைத் தீவில், மூன்று லட்சம் தமிழ் மக்கள் இராணுவத் தாக்குதலுக்கும் குண்டு வீச்சுக்கும் நடுவில், மரண பீதியில் துடிக்கின்றனர். தமிழக முதலமைச்சர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ‘இலங்கையில் இரண்டு வார காலத்துக்கு உள்ளாக போர் நிறுத்தம் ஏற்படாவிடில், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள்’ என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைச் செயல்படுத்த ஏன் முனையவில்லை?

போர்நிறுத்தம் செய்ய இலங்கையை நிர்ப்பந்திக்குமாறு மத்திய அரசை அந்த இரண்டு வார காலத்தில் தமிழக முதலமைச்சர் ஏன் வற்புறுத்தவில்லை?

"போர்நிறுத்தம் செய்யுமாறு, இந்திய அரசு எங்களைக் கேட்கவே இல்லை" - என்று மஹிந்த ராஜபக்ஷவும், பஸில் ராஜபக்ஷவும் திமிரோடு சொன்னார்களே இது எப்படி?

அவர்கள் நடத்தும் போருக்கு இந்திய அரசு முழுக்க முழுக்க ஆதரவாக இருப்பதால்தானே,

"கடந்த நான்கு ஆண்டுகளில் ஈழத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கும், அவர்கள் சிந்திய ஒவ்வொரு சொட்டு இரத்தத்துக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்"- என்று, கடந்த இரண்டு ஆண்டுகாலமாக நான் குற்றம் சாட்டிவருகிறேன்.

‘தமிழினத்துக்கு இந்திய அரசு செய்து உள்ள துரோகத்தை எதிர்த்து, தமிழக மக்களின் உள்ளம் கொந்தளிக்கும் கடல் ஆகும். குமுறும் எரிமலையாக மாறும்’ என்ற அச்சத்தாலேயே, ஒருபக்கத்தில் போர்நிறுத்தம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்காமல், அதற்கு உரிய அரசியல் அழுத்தத்தைத் தமிழக முதலமைச்சரும் ஏற்படுத்தாமலேயே பிரச்சினையைத் திசை திருப்புகின்ற வகையில், மிகத் தந்திரமாக சில நடவடிக்கைகளைக் கையாள்கின்றது.

ஈழத்தமிழர்களின் ஒரே பாதுகாப்புக் கவசம் விடுதலைப் புலிகள்தான். அவர்களை அழித்துவிட்டால் பின்னர் தமிழீழ மக்களை நிரந்தரமாக அடிமை இருளில் தள்ளிவிடலாம் என்பதுதான், சிங்கள அரசின் நயவஞ்சகத் திட்டம் ஆகும். இந்தத் திட்டத்துக்கு இந்திய அரசும் உடந்தை ஆகும்.

ஒரு காலத்தில் வல்லரசுகளையே எச்சரிக்கின்ற தகுதியும், மரியாதையும் பெற்று இருந்த பண்டித நேருவின் காலம் எங்கே? இந்திரா காந்தி அம்மையாரின் காலம் எங்கே? அடல் பிகாரி வாஜ்பாயின் காலம் எங்கே?

எட்டு கோடித் தமிழர்கள் மூச்சுவிட்டாலேயே பதர் போலக் காற்றில் பறக்கும் சிங்கள இனவெறி அரசின் தலைவர், டெல்லிக்கு வந்து திமிர்வாதம் பேசிவிட்டுப்போனது, சுதந்திர இந்திய வரலாற்றிலேயே நடக்காத களங்கம் மிக்க அவமானம் ஆகும். தமிழர் குலத்துக்கு மட்டும் அல்ல இந்திய மக்களுக்கும், இந்திய அரசு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்து உள்ளது.

சீன யுத்தத்தின் போதும், பாகிஸ்தான் போரின் போதும், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்ட சிங்கள அரசு இனி எதிர்காலத்திலும் இந்தியாவின் பூகோள அரசியல் நலன்களுக்கு எதிராகவே செயற்படும், இந்தியாவின் தென்முனையில், ஈழத் தமிழர்களின் வலுதான், இந்தியாவுக்கே பாதுகாப்பு அரண் ஆகும்.

அருணாசலப் பிரதேசம் எங்களுக்கே சொந்தம் என்று அநியாயமாக உரிமை கொண்டாடும் சீனா ஒரு பக்கம், எந்த நேரத்திலும் இந்தியாவுக்குத் தீங்கு விளைவிக்கத் துடிக்கும் பாகிஸ்தான் ஒருபக்கம் இந்நிலையில் இந்துமா கடலிலும், தென்முனையில் இந்தியாவின் எதிர்கால நலன்களுக்குக் கேடு செய்யும் சிங்கள அரசக்கு ஆயுதத்தைத் தீட்டிக்கொடுக்கும் முட்டாள்தனமும், அநியாயமும் நிறைந்த நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது.

இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்த நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாததோடு, அந்த இனக்கொலை யுத்தத்தைப் பின்னிருந்து இயக்கும் இந்திய அரசை, அதன் துரோகத்தை தமிழக மக்களும், இந்திய மக்களும் கடுமையாக எதிர்த்துக் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

அந்தக் கோபாவேச எழுச்சியைக் கண்டதற்குப்பிறகாவது, இந்திய அரசு தன் துரோகச் செயலை நிறுத்திக்கொண்டு இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த முன்வரட்டும் - என்றுள்ளது.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.