Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் உத்தரவு - முகாம்களில் தமிழக அமைச்சர்கள் நேற்று திடீர் ஆய்வு:

Featured Replies

தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் உத்தரவொன்றை அடுத்து, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் தமிழக அமைச்சர்கள் நேற்று திடீர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது முகாம்களில் தங்கியுள்ளவர்களின் குறைகளைக் அமைச்சர்கள் கேட்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 117 அகதி முகாம்களில் 77 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்து அமைச்சர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு அருகில் உள்ள அகதிகள் முகாமில், உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி ஆய்வு நடத்தியுள்ளார்.

அந்த முகாமில் 475 குடும்பங்களைச் சேர்ந்த 1,728 பேருக்கு பழங்கள், ரொட்டி உள்ளிட்ட பொருள்களை வழங்கினார். ''முகாம் அமைந்துள்ள பகுதியில் போதிய மின்சார வசதியில்லை என அகதிகள் அமைச்சரிடம் முறையிட்டுள்ளனர். இதுகுறித்து, ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இதேவேளை திருச்சி மாவட்டத்தில் கொட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ள அகதிகள் முகாமில், போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு நடத்தினார்.

அப்போதுஇ ''குடிநீர், உணவுப் பொருள் உள்ளிட்டவை போதுமான அளவு கிடைப்பதாகக் கூறிய இலங்கைத் தமிழர்கள், கோதுமை கிடைப்பதில்லை. மேலும், சிறந்த கல்வி பெறுவதற்கு தனி வகுப்பு (டியூசன்) வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்'' போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார். அதேவேளை விருதுநகர் மாவட்டம் குல்லூர்சந்தை, மல்லாங்கிணறு, ஆனைக்குட்டம், மொட்டமலை உள்ளிட்ட 6 இடங்களில் அமைந்துள்ள அகதி முகாம்களில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன

் ஆய்வு நடத்தியுள்ளார்.

அப்போது, முகாம்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தரவும், மோசமான நிலையில் உள்ள வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் அமைத்து கொடுக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் நியாய விலைக் கடைகளில், அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 இடங்களில் அகதி முகாம்கள் உள்ளன. அதில், பெருமாள்புரம், பழவிளை ஆகிய இடங்களில் அமைந்துள்ள முகாம்களில் சுற்றுலாத்துறை அமைச்சர் என்.சுரேஷ் ராஜன் ஆய்வு நடத்தியுள்ளார்.

இங்குள்ள 4 முகாம்களில் 430 குடும்பங்களைச் சேர்ந்த 1,581 பேர் தங்கியுள்ளனர். பழவிளையில் உள்ள முகாமில் கழிவு நீர் ஓடை வசதிக்கும், பெருமாள்புரம் முகாமில் குடிநீர் வசதிக்கும் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோன்று, அகதி முகாம்கள் அமைந்துள்ள தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் அமைச்சர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம் அவிநாசியில் உள்ள அகதிகள் முகாமில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பார்வையிட்டு, அங்குள்ள மக்களுக்கு அரிசி உள்ளிட்ட பொருள்களை வழங்கினார். இதுகுறித்த செய்தி வார இதழ் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியுள்ளவர்களின் குறைகளைக் கேட்டறிய, அமைச்சர்கள் திடீர் ஆய்வு நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : www.globaltamilnews.net

தமிழ்நாட்டில், அவர்கள் உணர்வை வெளிப்படுத்துகின்றார்கள். அவர்கள் கவனத்தை திசை திருப்ப "மத்திய கொள்கை வகுப்பு கூட்டம்" செய்யும் சதியே தமிழ் அகதிகள் நாடகம்.

ஒரே திசையில் கவனத்தை குவித்து அனைவரும் தமிழகத்திடம் தமிழீழத்தை அங்கீகரிக்கும்படி வேண்டுங்கள். கடிதமோ, தொலைநகலோ, தொலைபேசியோ, மின்னஞ்சலோ அல்லது தனிப்பட்ட தொடர்புகளோ எல்லா வழிகளிலும் தமிழீழத்தை அங்கீகரிக்கும் கோரிக்கையை முன் வையுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.