Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுத்தத்திற்கு செலவிடுவது ராஜபக்ஷ வீட்டில் இருந்து கொண்டு சென்ற பணம் அல்ல - விக்கிரமபாகு கருணாரட்ன :

Featured Replies

யுத்தத்திற்கு செலவிடுவது ராஜபக்ஷ அரசாங்கம் வீட்டில் இருந்து கொண்டு சென்ற பணம் அல்ல என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

தனக்குக் கிடைத்த தகவல்களின்படி அண்மையில் 9 ஆயிரம் படையினர் மோதல்களில் உயிரிழந்ததாகவும் எனினும் அரசாங்கத்தின் ஊடகங்களும் அரசாங்கத்திற்கு ஒத்து ஊதும் ஊடகங்களும் படையினருக்கு சிறு சேதமே ஏற்பட்டதாக கூறுவதாகவும் விக்கிரமபாகு கூறியுள்ளார்.

இந்த யுத்தத்திற்குச் செலவிடப்படும் பணம் ராஜபக்ஷ அரசாங்கம் வீட்டில் இருந்து கொண்டு சென்ற பணம் இல்லை என்பதன் காரணமாகத்தான் யுத்தத்தில் ஏற்படும் விபரங்களை வெளியிடுமாறு கோருவதாகவும் மக்களுக்கு உண்மையைத் தெரிந்து கொள்ளும் உரிமை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் கடுமையாக நடைபெற்று வருவதாக அரசாங்கம் கூறுகிறது. அப்படியென்றால் அரசாங்கத்திற்கும் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எதிரியைத் தோற்கடிக்க மேலும் உலகத்திடம் கடன்களைப் பெற்று, மக்களின் நிவாரணங்களைக் குறைத்து, இறுதியில் அணுகுண்டுத் தாக்குதல் நடத்தியா வெற்றிபெற போகிறீர்கள் என விக்ரமபாகு கேள்வி எழுப்பியுள்ளார்.

தமது பிரதேசத்தின் நிர்வாகத்தைக் கோரி நிற்கும் தமிழர்களின் மனநிலையைக் குண்டுகளினால் அழிக்க முடியாது.அப்படியெனில் உலகத்தில் உள்ள சகல தமிழர்களை கொல்ல வேண்டும். தேவானந்தவை மாத்திரமல்ல, பிள்ளையான் கருணாவையும் கொலை செய்ய வேண்டும். அவ்வாறில்லாது போனால் தமிழ் மக்களின் குரல் எங்கிருந்தாவது எழும்.

இதனால் இது நிறைவு பெறாத யுத்தம் என்பதை ராஜபக்ஷாக்களை ஆட்டிவைக்கும் இந்திய எஜமானர்களும் உணர்ந்து கொண்டுள்ளனர். இந்த யுத்தம் மன்மோகன் சிங்கின் வாசலுக்குச் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பேச்சுவார்த்தை நடத்துங்கள் என இந்தியா எஜமானர்கள் தற்போது ராஜபக்ஷாக்களின் கழுத்தை நெரித்துள்ளனர். ரணிலும் டில்லிக்கு செல்கிறார், யுத்தமும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தற்போது தீர்வு வேண்டும் என ரணில் விக்ரமசிங்க இந்தியாவில் வைத்துத் தெரிவித்ததும், அங்குள்ள கம்யூனிஸ்டுகள் ஆத்திரமடைந்து, ரணிலையும் தாக்கி, அவரின் வாகனத்தைப் புரட்டிபோட முயற்சித்தனர்.

தற்போது அரசாங்கத் தரப்பினருக்கு மாத்திரமல்ல எதிர்க்கட்சியினருக்கும் இந்தியாவுக்குச் செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் ஆபத்தான நிலைமை.

ஆட்சியாளர்கள் இந்த நிலைமைக்கு நாட்டை இட்டுச் சென்றுள்ளனர். இந்த நிலைமையில் தமிழ் போராளிகள் கிளிநொச்சி, முகமாலை மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் மும்முனை மோதல்களுக்கு தயாராகின்றனர்.அரசாங்கம் அடித்து முடித்து விடலாம் என கருத்துகிறது. அரசாங்கம் முடிக்கும் போது, முழு இலங்கையும் அழிந்து, மக்களும் அழிந்து, உண்பதற்கு எதுவுமின்றி போகும். இலங்கையில் உள்ள சகலரினதும் அழிவின் மூலமாகவா அரசாங்கம் தனது வெற்றியை தேட முயற்சிகின்றது எனவும் விக்ரமபாகு கருணாரட்ண கேள்வி எழுப்பியுள்ளார்.

நன்றி :GTM

விக்கிரமபாகு கருணாரட்ணவின் அரசாங்கம் மீதுள்ள ஆத்திரம் புரிகிறது. சிங்கள ஆட்சியாளர் மீது இந்திய அழுத்தம் சிங்களவரைப் பாதிப்பதும் புரிகிறது. யுத்தத்தின் பழு சிங்கள மக்களைப் பாதிப்பதும் புரிகிறது. தேவானந்தா, பிள்ளையான் ஆகியோரையும் கொன்றுவிடுவார்களா? என்பது மட்டும் புரியவில்லை.

விக்கிரமபாகு கருணாரட்ணவின் அரசாங்கம் மீதுள்ள ஆத்திரம் புரிகிறது. சிங்கள ஆட்சியாளர் மீது இந்திய அழுத்தம் சிங்களவரைப் பாதிப்பதும் புரிகிறது. யுத்தத்தின் பழு சிங்கள மக்களைப் பாதிப்பதும் புரிகிறது. தேவானந்தா, பிள்ளையான் ஆகியோரையும் கொன்றுவிடுவார்களா? என்பது மட்டும் புரியவில்லை.

அருமை இறைவா அருமை :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.