Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இந்தியாவை சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்: மகிந்தவுக்கு ரணில் அறிவுரை

Featured Replies

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் இந்தியாவை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழனை அழித்தொழிக்க வேண்டும் என்ற பெருமுனைப்போடு இரு பேரினவாதக்கட்சிகளும் கைகுலுக்குகின்றன. இந்தியா சாமரம் வீசுகின்றது.

பஞ்சாப் சீக்கியர்கள் பாக்கிஸ்தானியர்கள் பெங்காலிகள் என்று 1960களில் 1970களில் மேற்குலகிற்கு வந்து சேர்ந்தவர்களைப் பொறுத்தவரை இன்று 2 ஆம் சந்ததி தாண்டி, 3 ஆம் சந்ததியும் வேரூன்றி நிக்கிறது.

இவர்களினுள் 1 ஆவது சந்ததியினரை (அதாவது வயது வந்தவர்களாக வந்து குடியேறிய சந்ததியை) எடுத்துக் கொண்டால், இவர்களின் கலாச்சாரம் பண்பாடு மற்றும் அவர்களது தாயகம் பற்றிய இன்றைய நிலைப்பாடுகள் கருத்துக்கள் என்பது அவர்கள் தாயகத்தில் இருந்து வெளியேறிய காலப்பகுதியை அடிப்படையாக கொண்டது. அவர்கள் வெளியேறி மேற்குலகம் வந்து 3ஆவது சந்ததி அளவிற்கு காலம் கடந்து வந்துவிட்ட நிலையில் அவர்கள் விட்டுவிட்டு வந்த தாயகம் அங்குள்ள நிலமைகள் பண்பாடு கலாச்சாரம் கருத்தியல் என்பவை கால நீரோட்டத்தில் அதன் பரிணாம வழர்ச்சியில் தேவைகள் அனுபவங்கள் யதார்த்த சூழல்களிற்கு எற்ப மாற்றங்கண்டு நகர்ந்து விட்டது, இது தவிர்க்க முடியாததும் இயற்கையானதும்.

அதாவது தாம் விட்டுவிட்டு வந்த கலாச்சாரம் பண்பாடு என்பவற்றில் உள்ள பற்று பாசம் என்பவற்றால் அவர்கள் வெளியேறிய காலப்பகுதி நடைமுறைகள் பழக்க வழக்கங்கள் கருத்தியலையே ஒரு வித மூர்க்கத்தோடு (கலாச்சார சீரழிவை தடுப்பதாக) புலம்பெயர்ந்த தேசங்களில் பேண முயல்கிறார்கள். ஆனால் இவர்கள் விட்டுவிட்டு வந்த அதே சமுதாயம் அதன் யதார்த்த சூழநிலைகளிற்கு ஏற்ப முன்னகரந்து விடுகிறது. இந்த அவதானத்தை மேற்குலகில் குடியேறியிருக்கம் மேற்குறிப்பிட்ட இனக்குழுமங்களை அவதானித்து ஆராச்சி செய்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இது மனித இயல்பு. அண்மையில் மும்பாயில் நடந்த சம்பவத்திற்கு பழிவாங்க வேண்டும் பாக்கிஸ்தான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கடும் நிலைப்பாடுகளை ஊடகங்களில் பகிர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் புலம்பெயர்ந்த இந்தியர்கள். இந்தியாவில் இருந்து பெறப்பட்ட கருத்துக்கள் நிதானமானதாக இருந்தது.

இதையே இன்று புலம்பெயர்ந்த ஈழத்தவர் மத்தியிலும் காணலாம். இந்திய அமைதிப்படை காலத்திலும் அது முடிவடைந்து ஈழப்போர் 2 இல் வெளியேறிய புலம்பெயர்ந்தவர்களிற்கு இன்னமும் இந்திய அமைதிப்படைக் காச்ச இறங்கவில்லை.

அடுத்து தாம் விட்டுட்டு வந்த பின்னர் தாயகம் எப்படிப்பட்ட முன்னேற்றங்கள் கண்டிருக்கிறது என்பதை மாத்திரம் ஊடகங்கள் உரையாடல்கள் மூலம் பொறுக்கி எடுத்தவர்களாக (postive விடையங்களை மாத்திரம் உள்வாங்கி ideal expectations ஓடு) தாம் விட்டுவிட்டு வந்த தாயகம் பற்றி ஒரு கற்பனையான எதிர்பார்பை தாயகப்பற்று காரணமாக வைத்திருக்கிறார்கள். இந்த தன்மையையும் புலம்பெயர்ந்த இந்தியர்களிற்கும் அங்கு வசிக்கும்இந்தியர்களிற்கு இடையிலும் அவதானிக்கலாம். இதையே புலம்பெயர்ந்த ஈழத்தவர்கள் மத்தியிலும் புலிகளின் பலம் மற்றும் சிறீலங்காவின் பலம் பற்றிய மதிபீடுகளில் அவை சார்ந்த நியாயப்படுத்தல்கள் கருத்தாடல்களில் அவதானிக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள்ள நரிகளின் கசாப்பு கடை புத்தி விடுமோ என்ன...

புலிகளின் பலமே தமிழர்களை நிமிர வைக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்

கள்ள நரிகளின் கசாப்பு கடை புத்தி விடுமோ என்ன...

புலிகளின் பலமே தமிழர்களை நிமிர வைக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்

குள்ளநரியும்

இராணுவவெற்றியை பங்கிட ஆரம்பிக்கத்துடிக்கிறது

அதுதான் இதுபோன்ற நரிவிளையாட்டுக்களின் ஆரம்பம்

ஆனால் தமிழனுக்கு ஏதாவது கொடுக்கப்போகின்றோம் என்று மகிந்த சொன்னால்

நரி தலைகீழாகிவிடும்

அதேபோல்

தமிழனுக்கு ஏதாவது கொடுக்கப்போகின்றோம் என்று நரி சொன்னால்

மகிந்த தலைகீழாகிவிடும்

இதுபுரியாமல் இன்னும் எம்மில் சிலர்

இப்படி இன்னும் கட்டுரை கற்பனை எழுதியபடி

அடுத்து தாம் விட்டுட்டு வந்த பின்னர் தாயகம் எப்படிப்பட்ட முன்னேற்றங்கள் கண்டிருக்கிறது என்பதை மாத்திரம் ஊடகங்கள் உரையாடல்கள் மூலம் பொறுக்கி எடுத்தவர்களாக (pழளவiஎந விடையங்களை மாத்திரம் உள்வாங்கி னைநயட நஒpநஉவயவழைளெ ஓடு) தாம் விட்டுவிட்டு வந்த தாயகம் பற்றி ஒரு கற்பனையான எதிர்பார்பை தாயகப்பற்று காரணமாக வைத்திருக்கிறார்கள். இந்த தன்மையையும் புலம்பெயர்ந்த இந்தியர்களிற்கும் அங்கு வசிக்கும்இந்தியர்களிற்கு இடையிலும் அவதானிக்கலாம். இதையே புலம்பெயர்ந்த ஈழத்தவர்கள் மத்தியிலும் புலிகளின் பலம் மற்றும் சிறீலங்காவின் பலம் பற்றிய மதிபீடுகளில் அவை சார்ந்த நியாயப்படுத்தல்கள் கருத்தாடல்களில் அவதானிக்கலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.