Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் அமெரிக்கா, பிரித்தானியா உட்பட 7 நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள்

Featured Replies

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், யப்பான், பங்ளாதேசம், மாலைதீவு ஆகிய நாடுகளின் இராணுவ ஆலோசகர்கள் குழுவொன்று கடந்த திங்கள் வன்னியில் அமைந்துள்ள,

57வது, 59வது டிவிசன் தலைமையகத்துக்கு விஜயம் செய்து சிறிலங்கா முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கையை நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதன்போது மகிந்தவின் மனிதாபிமான நடவடிக்கையில் வலுக்கட்டாயமாக இராணுவ பிரதேசங்களுக்கு வந்த மக்களையும் உருக்கமாக பார்வையிட்டனராம்.

படங்கள் இணைப்பு...

http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58

****

Edited by மோகன்
**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவைக்கும் எல்லாம் சேர்த்து அண்ணை அடிப்பார்.

வன்னி பிடிக்க வந்தவையள் வாங்கி கட்டி விழுந்து அழுகினம் பாக்கலயே...

கறிப்பட்ட முறிப்பில முதல் அமெரிக்க பயிற்சி பெற்றவை தான் அடி வாங்கினவை.

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் அமெரிக்கா, பிரித்தானியா உட்பட 7 நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள்

புதன், 17 டிசம்பர் 2008, 21:32 மணி தமிழீழம் [செய்தியாளர் தாயகன்]

அமெரிக்கா, பிரித்தானியா உட்பட 7 நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் வன்னிக்கு சென்று சிறீலங்கா வன்னி படைத் தளபதியைச் சந்தித்துள்ளனர்.

கடந்த 15ஆம் நாள் வவுனியாவிலுள்ள 57வது 59வது படைத் தலைமையகத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பயணத்தில் அமெரிக்கா, பிரித்தானியா, யப்பான், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், மாலைதீவு போன்ற நாடுகளின் தூதரகத்தைச் சேர்ந்த படைத்துறை அதிகாரிகள் உள்ளடங்கியிருந்தனர்.

இதன்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்கள் பற்றி தமது படை அதிகாரிகள் குறிப்பிட்ட நாடுகளின் படைத்துறை அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்திருப்பதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வன்னியில் இருந்து வவுனியாவிற்குச் சென்றுள்ள மக்களையும், தம்மிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களையும் இந்த படை அதிகாரிகள் சந்தித்திருப்பதாகவும் சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு கூறுகின்றது.

சிறீலங்கா படையினருக்கு பல்வேறு படைத்துறை உதவிகளை வழங்கிவரும் அனைத்துலக நாடுகள், தற்பொழுது களமுனைகளுக்கு நேரடியாகச் சென்று கள நிலவரங்களைக் கேட்டறியும் அளவிற்கு படைத்துறை ஊக்குவிப்பு வளர்ச்சியடைந்துள்ளது.

களமுனையில் சிறீலங்கா படையினருக்கு நேற்று பாரிய இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இவ்வாறான செய்தியை வெளியிடுவதன்மூலம் விடுதலைப் புலிகளையும், தமிழ் மக்களையும் உளவியல் தாக்கத்திற்கு உள்ளாக்கலாம் என சிறீலங்கா அரசும், படைத்துறையும் எண்ணுவதாகத் தெரிகின்றது.

வழமையாக உடனுக்குடன் செய்தி வெளியிடும் சிறீலங்கா அரசு, 15ஆம் நாள் இடம்பெற்ற இந்தப் பயணம் பற்றி செய்தியை வெளியிடாது தவிர்த்திருந்த போதிலும், அதனை வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு களமுனை முடிவுகள் அவர்களைத் தள்ளியுள்ளன.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது இந்த ஆண்டிற்கான மாவீரர்நாள் கொள்கைப் பிரகடன உரையில், தமிழீழ விடுதலைப் புலிகள் சிறீலங்கா அரசுடன் மட்டுமன்றி, அனைத்துலகுடன் போர் புரிந்து வருவதாகக் கூறியிருந்தமை மீண்டும் நினைவூட்டத்தக்கது.

pathivu

  • கருத்துக்கள உறவுகள்

defenceadvisorsof7natiohf3.jpg

defenceadvisorsof7natiomf1.jpg

defenceadvisorsof7natioyn4.jpg

defenceadvisorsof7natiorm8.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இவை வந்து யாருக்கு ஆலோசனை குடுத்தவை?????

இவை வந்து போனதிலிருந்து இப்படி அழிவாயிருக்கு ஆமிக்கு??????

ஆனையிறவு கைப்பற்ற முன்னரும் நிறைய வெளிநாட்டவர்கள் போய் பார்த்து அனையிறவை கைப்பற்ற முடியாது என்று சான்றிதழ் கொடுத்தவையாம். அதன்பின் ஆனையிறவு கைமாறியது. இப்போது வன்னியை பார்த்து ஆலோசனை கொடுத்திருக்கினம். எது கைமாறப் போகுதோ?

****

  • கருத்துக்கள உறவுகள்

உந்த வெள்ளயள்

உருல கிளங்கை சாப்பிட்டு சும்மா இருக்கிறத விட்டுட்டு அங்கை போய் சிங்களவனுக்கு அற்பஸ் சொல்லினம்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது நடக்கும்

எது நடக்கவேண்டுமோ அது நடந்தே தீரும்

எவன் வந்தும் தடுத்துவிடமுடியாது

ஒரு வேளை இவர்களும் முடியாது என்று சான்றிதழ் வழங்கியபின்தான்

ஆனையிறவுபோல் தமிழீழமும் விடுவிக்கப்படப்போகின்றதா..........

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கோ வந்து பாருங்கோ எண்டு வலுக்கட்டாயமாக ஒரு அரசாங்கம் கூப்பிட்டால் போய்ப் பார்க்கத்தானே வேணும் பாருங்கோ. உதுக்காக என்னத்துக்கு நாம அலட்டிக்கொள்ள வேணும். வன்னிக்கு மட்டுமா அவை போயினம் கொழும்புக்கு யாழப்பாணத்துக்கு எண்டு எல்லா இடமும் போயினந்தானே. சும்மா போய் கூப்பிட்டதுக்காகப் பார்த்திற்ப் போயிருக்கினம். அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டியதில்ல.

வாருங்கோ வந்து பாருங்கோ எண்டு வலுக்கட்டாயமாக ஒரு அரசாங்கம் கூப்பிட்டால் போய்ப் பார்க்கத்தானே வேணும் பாருங்கோ. உதுக்காக என்னத்துக்கு நாம அலட்டிக்கொள்ள வேணும். வன்னிக்கு மட்டுமா அவை போயினம் கொழும்புக்கு யாழப்பாணத்துக்கு எண்டு எல்லா இடமும் போயினந்தானே. சும்மா போய் கூப்பிட்டதுக்காகப் பார்த்திற்ப் போயிருக்கினம். அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டியதில்ல.

அவையளும் வெள்ளை வானில் கடத்துப்பட்ட ஆக்களே? இலங்கை அரசாங்கம் வலுக்கட்டாயமா கூப்பிட்டது என்டு போய் வேடிக்கை பாக்கிறதுக்கு? :)

இந்தியா கிரிக்கட் அணியை கூட பாகிஸ்தானுக்கு அனுப்பமாட்டம் என்று பம்மாத்து காட்டுது.ஆனால் இந்திய பாகிஸ்தான் அதிகாரிகளும் ஒற்றுமையாக வந்து சென்றுள்ளனர்.

  • தொடங்கியவர்

இந்தியா கிரிக்கட் அணியை கூட பாகிஸ்தானுக்கு அனுப்பமாட்டம் என்று பம்மாத்து காட்டுது.ஆனால் இந்திய பாகிஸ்தான் அதிகாரிகளும் ஒற்றுமையாக வந்து சென்றுள்ளனர்.

ஈழத்தமிழனை அழிப்பதில் அம்புட்டு இஷ்டம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழனை அழிப்பதில் அம்புட்டு இஷ்டம்

:):D:lol:

இந்த 7 பேருக்கும் கிளாலியையோ கிளிநொச்சியையோ காட்ட வெளிக்கிட்டுத்தானாம் மூக்குடைபட்டிருக்கினம் :)

Edited by Kuddi thampi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.