Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் குடாநாட்டில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் சுட்டுக் கொலை:

Featured Replies

யாழ் குடாநாட்டில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் சுட்டுக் கொலை:

250px-icrc_logo_svg.jpg

யாழ் வடமராட்சி கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சுந்தரலிங்கம் ஹெங்காதரன் என்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இன்று காலை தனது வீட்டில் இருந்து புறப்பட்டு பேருந்தில் ஏறிய இவர் யாழ் நல்லூர் வீதியில் அமைந்துள்ள தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த வேளை காலை 7.10 அளவில் நல்லூர் வீதியின் பின்புறத்தில் ஆலையத்திற்கு 100 மீற்றர் தூரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே ஒவ்வொரு நாளும் 15 - 20 தமிழன் என்று இலங்கை முழுக்க சுட்டுக் கொன்று , முற்றாக தமிழனை அழித்து விடுங்கப்பா . :):)

அதுக்கு தான் நேற்று முன் தினம் சிங்க கொடியோடை ஊர்வலம் நடத்தினீர்களோ ......... :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் யாழில் சுட்டுக்கொலை

திகதி: 23.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்]

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றியவர் ஒருவர் இன்று செவ்வாய்கிழமை காலை 7.10 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வடமராட்சி கரவெட்டியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கெங்காதரம் என்ற 45 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான குடும்பத்தவரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நல்லூர் ஆலயத்தில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் அமைந்திருக்கும் சர்வதேச அமைப்பான யூ.என்.ஏச்.சி.ஆர். அலுவலகம் முன்பாக வைத்து இவர் சுட்டக் கொல்லப்பட்டுள்ளார். இந்த இடம் சிறிலங்கா இராணுவத்தின் உயர் பாதுகாப்பு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றியவர் என ஐ.சி.ஆர்.சி உறுதிப்படுத்தியுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ஏராளமான மனிதாபிமான பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதும், மனிதாபிமானப் பணியாளர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சங்கதி

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றியவர் ஒருவர் இன்று செவ்வாய்கிழமை காலை 7.10 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வடமராட்சி கரவெட்டியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கெங்காதரம் என்ற 45 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான குடும்பத்தவரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நல்லூர் ஆலயத்தில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் அமைந்திருக்கும் சர்வதேச அமைப்பான யூ.என்.ஏச்.சி.ஆர். அலுவலகம் முன்பாக வைத்து இவர் சுட்டக் கொல்லப்பட்டுள்ளார். இந்த இடம் சிறிலங்கா இராணுவத்தின் உயர் பாதுகாப்பு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றியவர் என ஐ.சி.ஆர்.சி உறுதிப்படுத்தியுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ஏராளமான மனிதாபிமான பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதும், மனிதாபிமானப் பணியாளர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

www.sankathi.com

கரவெட்டி விக்னேஸ்வராக்கல்லூரி வீதியை சேர்ந்த கிராம சேவையாளர் ரவி அவர்களின் சகோதரியின் கணவர்தான் இவர். பாடசாலைக்கு அருகாமையில் வீடு இருக்கின்றுது. அரபு நாட்டில் பணிபுரிந்துவிட்டு தாயகம் திரும்பி செஞ்சிலுவைச்சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். எம் மக்களிற்காக நிறைய கடமைகளை செய்துள்ளார்.

முகமாலை சோதனைச்சாவடியில் பணிபுரிந்த இவர் கதைப்பதற்கும் பழகுவதற்கும் மிகமிக அன்பானவர். ஓட்டுக்குழுக்களின் கண்களில் ஏன் விழுந்தார் என்பதுதான் அதிர்ச்சியாக இருக்கின்றது. கொடியவர்கள் எத்தனைபேரைத்தான் அழிப்பார்கள்

சிங்கள இராணுவத்தின் கொடூரத்தாக்குதலிற்கு தனது சகோதரனையும் தற்போது தனது கணவனையும் இழந்து தவிக்கும் எனது ஊரைச்சேர்ந்த உமா அக்காவிற்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.

வவுனியாவில் ஏற்பட்ட மோதலில் சில ஆண்டுகளிற்கு முன்பு தன் சகோதரனான ராஜ் அண்ணா ( திரு வீடியோ விஸனில் கடமையாற்றியவர். ஆசிரியராகவும் இருந்தவர்) அகாலமரணமடைந்தார். தற்போது இவர். ஒரு குடும்பத்தில் இரு உறவுகளை இழந்துள்ளது அந்தக் குடும்பம். அழகான இரு குழந்தைகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.