Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விமானங்கள் இல்லாமையே யுத்த களத்தில் காயமடையும் படையினர் உயிரிழக்க காரணம் - ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விமானங்கள் இல்லாமையே யுத்த களத்தில் காயமடையும் படையினர் உயிரிழக்க காரணம் - ரணில்

வீரகேசரி நாளேடு 12/28/2008 10:45:30 PM - யுத்தக் களத்தில் காயமடையும் படை வீரர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதற்கான விமானங்களை அரசாங்கம் பெற்றுக் கொடுக்காமையினாலேயே படையினர் பெருமளவில் உயிரிழக்கின்றனர். படையினருக்காக விமானங்களைக் கொள்வனவு செய்யப் பணமில்லையெனக் கூறும் அரசாங்கம், ஒரு மணித்தியாலத்திற்கு 3000 அமெரிக்க டொலரை செலுத்தி மிஹின் எயாருக்காக விமானத்தை குத்தகைக்கு பெற்றுள்ளது என்று ஐ.தே.க. குற்றம் சாட்டியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இக்குற்றச்சாட்டை சுமத்தினார். இங்கு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியதாவது, பருவப் பெயர்ச்சி மழைகாலத்தில் எமது படையினர் மும்முனைத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் கடல் மார்க்கமாக படையினருக்கு தேவையான ஆளணிகள், ஆயுதங்களை கொண்டு செல்வது கடினமான விடயமாகும்.

எனவே விமானப் படையினரின் ஆளணியை கொண்டு செல்வதுடன் காயமடையும் படையினரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு உகந்த என் 32, சீ 30 ரக விமானங்கள் இருக்க வேண்டும்.

நான் பிரதமராக இருந்தபோது இவ்வாறான 12 விமானங்கள் இருந்தன. ஆனால், இன்று சீ 130 ரக இரண்டு விமானங்களே உள்ளன. எனவே புதிதாக விமானங்களை கொள்வனவு செய்ய வேண்டுமென்ற விமானப் படையினரின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதோடு இக்கோரிக்கையை முன்வைத்தவர்களை இடமாற்றம் செய்துள்ளது.

இது புலிகளுக்கும் தெரியும். அரசாங்கத்திற்கும் புரியும். இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே கடந்த வாரம் 500க்கு மேற்பட்ட படையினர் உயிரிழந்துள்ளனர். யுத்தக் களத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைவு. ஆனால் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு தாமதிக்கப்பட்டதாலேயே அதிகளவு படையினர் உயிரிழந்துள்ளனர்.

இதற்குக் காரணம் விமானங்கள் இல்லாததேயாகும். எமது படையினரின் இழப்புகளுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நரி ரணிலும் இருந்து இருந்துட்டு அறிக்கை விடுது தானும் உயிரோட தான் இருக்கிரேன் என்று காட்ட :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.