Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகளிம் ஆயுதப் பயிற்சி பெற்றவர்களே குண்டுவீச்சில் உயிரிழப்பு -உதயநாணயக்கார

Featured Replies

கிளி. முரசுமோட்டைப் பகுதிகள் மீதே விமானப்படையினர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். குண்டு வீச்சில் பலியானவர்கள் புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றவர்களேயாவர். குண்டு வீச்சில அவர்கள் பலியானதும் ஆயுதங்களை களைந்து விட்டு பொதுமக்கள் பலியானதாக விடுதலைப் புலிகள் பொய்ப்பிரச்சாரம் செய்கின்றனர். இவ்வாறு இராணுவப் பேச்சாளன் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் : கிளிநொச்சி முரசுமோட்டை மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள புலிகளின் இலக்குகள் மீதே இலங்கை விமானப்படையினர் விமானத்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். எனினும் அங்குள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றுவோர் அரச ஊழியர்களான இருக்கின்ற போதிலும் அழுத்தங்கள் காரணமாக விமான குண்டுவீச்சிகளில் பொதுமக்களே பலியாவதாகவும், படுகாயமடைவதாகவும் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சியிலுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள், ஊழியர்கள் அரச ஊழியர்கள் என்றாலும் அவர்கள் அழுத்தங்களைச் சந்திக்கின்றனர்.

அவ்வாறான அழுத்தங்கள் காரணமாக விமானப்படையினரின் விமானத்தாக்குதல்களில் பொதுமக்களே பலியாகின்றனர், காயமடையிக்றனர் என்று கூறுகின்றனர், ஆனால் இலங்கை விமானப்படையினர் புலிகளின் இலக்குகள் மீதே விமானத்தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். எனத் தெரிவித்தார்.

நன்றி : வீரகேசரி

அப்ப டிச.23ம் திகதி குஞ்சுப் பரந்தன் அருகில் செத்த 85 கால்நடைகளும் புலிகளிடம் ஆயுதப்பயிற்சி பெற்ற கால்நடைகளா பிரிகேடியர்?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில வாரங்களுக்கு முன் சிறீலங்கா அரசானது, சில அழுத்தங்களில் இருந்து தம்மை தற்காத்துக்கொள்ளும் நோக்கோடு இடம்பெயரும் மக்களுக்காக அறிவிக்கப்பட்ட, அதாவது தாக்குதல் அற்ற பகுதியக பிரகடணப்படுத்தப்பட்ட பகுதியின் மையப் பகுதியே இந்த முரசுமோட்டைப் பகுதியாகும். கிழக்கு வன்னியின் தாழ்வான பகுதியுமாகும். முன்பும் பல தடவைகள் இதையே சிங்கள அரசு செய்துள்ளது. எடுத்துக்காட்டாக நவாலித் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த இடம்பெயர்ந்த மக்கள் மீதும், நாகர் கோவில் பகுதியில் பாடசாலை மீதும், ஏன் சாமாதான காலத்தில் செஞ்சோலைச் சிறுவர் இல்லம் என்று இனங்காட்டப்பட்ட, சிறுர் இல்லம் மீதும் தாக்குதல் நடத்தியவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விடயமல்ல. இந்தியாவும் தற்போதைய அமெரிக்கத் தூதுவர்கள் போன்றவர்களின் துணை இருக்கும் வரை தமிழினத்தின் அழிவும், அழிப்புக் நியாயம் தேடும் பொய்ப் பரப்புரைகளும் தொடரவே செய்யும்.இதனை மாற்றும் வலு தமிழரிடமே உள்ளது. குறிப்பாகப் புலம்பெயர் தமிழர்களிடமே.

இவண்

நொச்சியான்

அமெரிக்க தூதர் தன் பதவிக்காலத்தின் கடைசி மூச்சை விடுகிறார், ஆகவே சிங்கள விசுவாசம் பொங்கிப் பாய்கிறது!

இந்திய தேர்தலின் மாற்றம், அவர்களை நண்பர்களாக்க ஒரு வாய்ப்பு, தமிழக எழுச்சியை தக்க வைப்பதன் மூலம் இதுவும் சாத்தியமானதே,

நண்பர்களே, அதிசயம் ஒன்றும் ஓரிரவில் நடக்காது, மேற்ச்சொன்ன மாற்றங்களை அறுவடை செய்யும் பணியும் எம்மிடமே உள்ளது.

எம்மால் முடிந்த அனைத்து வளங்களையும் பாவித்து இவற்றை செய்வோம். நம்பிக்கை ஒன்றே இப்போது நம் பலம், அதை இழக்காத வரை எதை இழந்தாலும் எதற்கும் யோசிக்க தேவை இல்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.