Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொய் சொல்லும் கோத்தபாய ராஜபக்சா

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தியைப் போலவே சிங்கள அரசுக்கு துதிபாடும் தமிழர் விரோத ஏடான தினமலர் பொய்ச்செய்தி தலைப்பில் இட்டிருக்கிறது.

http://www.dinamalar.com/fpnnews.asp?news_...wfrom=1/06/2009

கிளிநொச்சி மக்களுக்காய் உருகும் தமிழகத்து பத்திரிகை.

பாரதி , அண்ணா , பெரியார் என அழகு செய்த தமிழ் நாட்டு ஊடகத்துறைக்கு தம் சுயநல நோக்கோடு மட்டும் நடாத்தப்படும் சில பத்திரிகைகள் சாபக்கேடாய் அமைந்து விட்டது வரலாற்றின் தவறன்றி இந்த பத்திரிகை நிறுவனங்களின் தவறு அல்ல.

கிளிநொச்சி வீழ்ந்த செய்தி தமிழனாய் பிறந்த ஒவ்வோருவருக்கும் வலியை தந்தது. விடுதலை புலிகளின் அதரவு எதிர்ப்பு என எல்லாவற்றையும் தாண்டி உரிமைக்காக போராடிய ஒருதமிழன் தனது முயற்சியில் பின்னடைவை சந்தித்தான் எனும் செய்தி அல்லது அந்த உணர்வு எல்ல தமிழருக்கும் வலியை தந்தது , இதை யாரும் மறுக்க முடியாது.

அத்தகைய உணர்வு பூர்வமான செய்தியை இந்த வியாபார பத்திரிகை தனது புலி எதிர்ப்பு கருத்தோடு சேர்த்து எப்படி தருகிறது பாருங்கள்....

உருக்குலைத்து விட்டுச்சென்ற விடுதலைபுலிகள் , காட்டுக்குள் மனித கேடயமாக ஒரு லட்சம் மக்கள்

விடுதலை புலிகள் கிளிநொச்சியை தரைமட்டமாக்கிவிட்டு , நகரின் தண்ணீர் மற்றும் மின் விநியோகத்தை துண்டித்து விட்டு ஒருலட்சம் மக்களை விரட்டி விட்டு நகரை வெறுமையாக விட்டு சென்றுவிட்டார்களாம் புலிகள் என கவலைகொள்கிறது அந்த பத்திரிகை.

ராம சுப்பையர் கொம்பனியிடம் சில கேள்விகள் ,

1. அந்த நகரத்தின் மீது சிங்கள அரசு வீசிய குண்டுகள் எல்லாம் , காமன் வீசிய மலர் அம்புகளா?

சிங்கள அரசே சொல்கிறது புலிகள் 6 தடவைதான் குண்டு போட்டார்கள் , நாங்கள் 6000 தடவை போட்டிருக்கின்றோம் என. சுப்பையருக்கு இந்த செய்தி தெரியாதோ ?

2. நகரின் மின் விநியோகம் , தண்ணீர் விநியோகம் என எல்லாவற்றையும் புலிகள் தடைசெய்து விட்டார்களாம் ?

கிளிநொச்சிக்கு ராம சுப்பையர் கொம்பனியா பிரதான மின்சாரம் வழங்குனர். கிளிநொச்சி நகரத்திற்க்கு 80 களில் இருந்தே மின்சாரம் இருந்ததில்லை , வன்னி பிரதேசத்துக்கு என்றுமே அரசு மின் வழங்கள் செய்ததில்லை. பெரும்பாலான வீடுகளில் மண்ணை விளக்குகள் தான். வசதியான சிலர் சூரிய சக்தி விளக்குகளை உபயோகிப்பர்.

பிரதான சந்திகளில் உள்ள கடைகளுக்கு மாத்திரம் மின்பிறப்பாக்கிகள் மூலம் தமிழர் பொருன்மிய மேம்பாட்டு கழகம் மாதாந்த கட்டாண அடிபடையில் மின் வழங்கும்.

அடுத்தது நீர் விநியோகம் ,

கிளிநொச்சி நகருக்கு யாரும் நீர் விநியோகம் செய்வதாய் நான் அறியவில்லை , தமிழிழத்தில் கிணறு மூலமாகவே மக்கள் நீரை பெறுகின்றனர். வன்னி பிரதேசத்தில் மாத்திரம் விவசாய நிலங்களுக்கு குளங்களில் இருந்து வாய்கால் மூலமாக நீர்விநியோகம் நடைபெறும். கிளிநொச்சி நகரத்தில் உள்ள வைத்தியசாலைக்கு நீர் வழங்கள் செய்யவென ஒரு நீர் தொட்டி உள்ளது. இதில் எப்படி நகரத்திற்கான நீர் விநியோகம் தடைப்பட்டது அப்பத்திரிகை மட்டுமே அறிந்த உண்மை.

3. ஒரு லட்சம் மக்கள் காட்டுக்குள் மனித கேடயங்களாக உள்ளதாய் கூறும் இச்செய்தி மறைமுகமாய் சிங்கள இராணுவத்தை மீட்பர்களாய் சித்தரிக்கும் அடிவருடித்தனம் மட்டுமல்லாது தமிழரது விடுதலைப் போராட்டத்தையும் அவர்களது இராணுவ அரசியல் சக்தியான விடுதலைபுலிகளையும் கேலிக்குள்ளாகிறதா இந்த பத்திரிகை ?

இவை வெறும் புலிஎதிர்ப்பு கோஷங்கள் அல்ல. திட்டமிட்டு தமிழகத்தில் சுடர்விடும் தமிழிழ உணர்வை மழுங்கடிக்கும் நோக்கோடு வரையப்படும் செய்திகள். தமிழ் நாட்டில் இருந்து இவர்கள் ஒதுக்கப்படும் நிலமை மிக விரைவில் உருவாகும்.

ஒரு பொய்யான செய்தியை மிகவும் கெட்டிக்காரதனத்தோடு சொல்லிவிட்டு இருக்கும் இந்த பத்திரிகைக்காரார் உண்மையிலேயே கிழ்த்தரமானவர்கள்.

வேசித்தொழில் செய்வதற்கு ஒப்பானது இவர்களது ஈனச்செயல்.

- http://akathi95.blogspot.com/2009/01/blog-post_06.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.