Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக அரசு இன்னமும் இருக்க வேண்டுமா?; முதல்வரின் பேச்சு நியாயமே: ஆனந்த விகடன்

Featured Replies

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க இயலாத தமிழக அரசு இன்னமும் இருக்க வேண்டுமா? என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்து நியாயம்தான் என்று ஆனந்த விகடன் வார இதழ் கருத்து தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

www,puthinam.com

தமிழக அரசு இன்னமும் இருக்க வேண்டுமா?; முதல்வரின் பேச்சு நியாயமே: ஆனந்த விகடன்

[வெள்ளிக்கிழமை, 09 சனவரி 2009, 09:54 பி.ப ஈழம்] [கி.தவசீலன்]

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க இயலாத தமிழக அரசு இன்னமும் இருக்க வேண்டுமா? என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்து நியாயம்தான் என்று ஆனந்த விகடன் வார இதழ் கருத்து தெரிவித்துள்ளது.

ஆனந்த விகடனின் தலையங்கம்:

'ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகளை ஒடுக்குகிறோம்' என்ற பெயரில், நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களின் இரத்தத்தைத் தொடர்ந்து குடித்துக் கொண்டே இருக்கிறது சிறிலங்கா இராணுவம்.

'ஒரு தமிழனைக் கொன்றால், நூறு சிங்கள ஓட்டு கிடைக்கும்' என்பதே தங்கள் சூத்திரம் என சிறிலங்கா அரசு செயற்பட்டுக்கொண்டு இருக்கிறது. இப்போது, 'புலிகளின் கோட்டை எங்கள் கைவசம்' என்ற கொக்கரிப்பையும் கேட்க முடிகிறது.

கோட்டையைப் பிடிக்கும் அந்த முயற்சியில் அப்பாவித் தமிழர்கள் எத்தனை ஆயிரம் பேர் வேட்டையாடப்பட்டார்களோ!

இலங்கைத் தமிழரைப் பாதுகாக்கப் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பதவி விலகல் மிரட்டல், அனைத்து கட்சிக் கூட்டம், டெல்லிப் பயணம் என்று தமிழகத் தலைவர்கள் எடுத்துக்கொண்ட எந்த முயற்சிக்குமே மத்திய அரசு கடைசி வரை செவிசாய்க்கவில்லை.

நம் இராணுவ அதிகாரிகள் அங்கு சென்று பயிற்சி தரும் தகவலையும் மத்திய அரசு மறுக்கவில்லை. 'மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கிறோம்' என்று கொடுத்த வாக்குறுதியைக்கூடத் தந்திரமாகத் தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறது டெல்லி!

இதையெல்லாம் பார்க்கும்போது, 'புலிகளை நாங்கள் முழுதுமாக ஒடுக்கி விடுகிறோம். அதுவரை உங்கள் தேசத்து மக்களைத் திசை திருப்பும் வகையில் கண்ணா மூச்சி அரசியல் நடத்திக் காலத்தைக் கடத்துங்கள்' என்று மத்திய அரசோடு எழுதப்படாத 'புரிந்துணர்வு ஒப்பந்தம்' ஒன்றைப் போட்டிருக்கிறதோ சிறிலங்கா அரசு என்ற பலமான சந்தேகம்தான் எழுகிறது!

நினைத்ததை எல்லாம் நிபந்தனைகளாக விதித்து, குறித்த நேரத்துக்குள் சாதித்துக் கொள்கிற தமிழக ஆளுங்கட்சி, இந்த விடயத்தில் எள் முனையளவுகூட எதையும் சாதிக்கவில்லை என்பதுதான் வேதனையளிக்கும் நிதர்சனமான உண்மை!

'இதன் பிறகும் இந்த அரசு இருக்கத்தான் வேண்டுமா?' என்று பொதுக்கூட்ட மேடையில் தமிழக முதல்வர் தழுதழுத்த குரலில் எழுப்பிய கேள்வி, தமிழ் மக்களின் காதில் இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் கலைஞர் கருணாநிதி. ஆறு கோடித் தமிழர்களின் அதியுன்னத தலைவன். தனது வாழ்நாளில் 22 மைலகளுக்கு அப்பாலிருக்கும் இலங்கைத் தீவில் காலடிவைத்து தனது தொப்பூழ்க் கொடியுறவுகள் எப்படியிருக்கிறார்கள் என்பதைக்கூடக் காணும் வாய்ப்புக் கிடைக்காமல் எண்பது வருடங்களுக்குமேல் காலத்தை ஓட்டிவிட்டார்.

சுருங்கிப்போன உலக உருண்டையில் தமிழர் தலைவனுக்கு மட்டும் தன் சுற்றத்தைப் பார்க்க இடமளிக்கப்படவில்லை. கொழும்பு அவரை ஒரு தடவைகூட அழைத்ததில்லை.

அவர்மட்டுமா என்ன? அங்கிருந்துகொண்டு ஈழத்தமிழர்களின் வீரமிக்க போராட்டத்திற்கெதிராகத் தன் வக்கிர புத்தியைக் காட்டும் துக்ளக் சோவிற்குக்கூட சிங்களம் ஒரு அழைப்பை விடுக்கவில்லை.

தமிழனென்றாலே ஓர் இழக்காரம். இலங்கையிலிருந்து எத்தனையோ தடவை இந்தியாவுக்குச் சிங்கள அரசியல் வாதிகள் போய் வருகிறார்கள். அவர்களையெல்லாம் வரவேற்று உபசரித்துப் பாதுகாப்பும் கொடுக்கும் தமிழகத்து மண்ணின் மைந்தர்களசை; சிங்களம் ஒரு நாளும் மதித்ததேயில்லை.

இந்து ராம் மட்டுமே சிங்கள ரத்னாவாக்கப்பட்டார்.

இவ்வளவும் தெரிந்தும் தமிழகத்தில் இன்னமும் காங்கிரஸ்காரர்கள் ஈழத்தமிழர்களுக்கு விரோதமாகவும் சிங்கள சிறீலங்காவுக்கு ஆதரவாகவும் துரோகம் புரிகிறார்களென்று புரியவில்லை.

தமிழ்நாட்டில் தமிழனுக்கென்று ஓர் அரசு இருந்தென்ன இல்லாமற்போயென்ன?

மக்களுக்காகவே அரசு. மக்களின் உணர்வுகள் மதிக்கப்படவில்லையென்றால் அந்த அரசியலமைப்புச் சட்டத்தால் என்ன பயன். தமிழகத் தமிழுறவுகள் பாவம். பல் பிடுங்கப்பட்ட பாம்புகள். சீறிச் சீறிக் கொத்துவார்கள். ஆனால் மத்திய அரசுக்கு ஒரு காயமும் ஏற்படாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.