Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வேயில் இந்திய தூதரகத்தின் முன்பாக நூற்றுக்கணக்கான மக்களுடன் கவனயீர்ப்பு போரட்டம்

Featured Replies

நோர்வேயில் தொடர்ச்சியாக முன்னெடுக்ப்படவுள்ள ஆர்ப்பட்டங்களும் கண்டனப்பேரணிகளின் ஆரம்ப கட்டமாக நேற்றைய தினம் வெளிநாட்டு தூதரகத்தின் முன்பாக இடம்பெற்றது. இன்று நோர்வேயில் இந்திய தூதரகத்தின் முன்பாக நூற்றுக்கணக்கான மக்களுடன் கவனயீர்ப்பு போரட்டம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட மக்கள் தமது உணர்சிசிகளை பதாகைகளினூடாகவும் கோசங்கள் மூலமாகவும் வெளிப்படுத்தினார்கள்.

குறிப்பாக

போர்நிறுத்தத்தை கொண்டு வா

சிறீலங்காவை நிறுத்து தமிழரை காப்பாற்று

இந்தியாவிடம்தான் அதற்கான தகமை உள்ளது

நாங்கள் இந்தியாவிற்கு நண்பர்கள்

என இளைய சமுதாயம் கோசங்கள் எழுப்பி தமது உணர்வுகளை வெளியிட்டார்கள்.

அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்டப்படல் வேண்டும். தமிழ்தாயை சிங்கள காடையர்களிடமிருந்து மீட்க வேண்டும் இது இந்தியாவால் மட்டும்தான் முடியும். எமது வலிகள் உணர்ந்த அண்டை நாடு மாத்திரமல்ல ஒரே இன மொழி பேசும் மக்களை தன்னகத்தே கொண்ட நாடு.

இன்றைய இந்த கவனயீர்ப்பு ஓருவித தாக்கத்தை கட்டாயம் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் நாளை மறுதினம் தொடர்ந்து இதேபோன்ற போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் . . .

  • கருத்துக்கள உறவுகள்

இக்கவன ஈர்ப்பு போராட்டத்தை ஒழுங்கு செய்தவர்களுக்கும், பங்குபற்றியவர்களுக்கும் நன்றி.

இந்த இன அழிப்பு போருக்கு முக்கிய முண்டு கொடுக்கிறவனே அந்த இந்திய மத்திய அரசு.

பாருங்கள் தமிழன் நிலையை எங்களை அழிப்பவனிடமே எங்களை காப்பாற்று என்று மன்றாட்டம் கேட்கும் நிலை.

நிச்சயம் காலம் மாறும். அனைத்தையும் வரலாறு பதிவு செய்யும்

  • தொடங்கியவர்

தவறு நீங்கள் நினைப்பது தவறு

நடேசன் அண்ணா தற்போதும் இந்தியாதான் உதவவேண்டும் என்று முனைப்புடன் இருக்கின்றார். அந்த நேரத்தில் நாம் இந்தியாவை பகைப்பது நல்லதல்ல. அனுசரிக்க வேண்டும். காலம் மாறும்தானே

சிறிலங்கா பேரினவாத அரசாங்கத்தின் தமிழின அழிப்புப் போரினைத் தடுத்து நிறுத்துமாறு இந்திய அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுக்கும் முகமாக நோர்வேயில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் நூற்றுக்கணக்கான நோர்வே வாழ் தமிழர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வாசிக்க

கலந்து ஆதரவு தந்த உறவுகளுக்கு நன்றிகள்

  • தொடங்கியவர்

நேற்றைய தினம் நோர்வேயில் முன்னெடுக்கப்படட்ட கவனயீர்ப்பு போராட்டங்களும் தீப்பந்தப்பேரணிகளும் நோர்வேஜிய மக்கள் மத்தியில் ஒருவித மனமாற்றத்தை உருவாக்கியுள்ளது என்பதனை நேற்றைய பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்திகளின் மூலமே கண்டுகொள்ளலாம். இதுவரைகாலமும் எதுவுமே அசட்டை செய்யாத பத்திரிகைகள் தற்போது இப்படியனளவிற்காவது வெளிவருவது வரவேற்கத்தக்கது. உங்களது பார்வைக்கு அவற்றின் இணைப்புகள் கீழே

http://www.ba.no/nyheter/article4050958.ece

http://www.bt.no/lokalt/bergen/article691882.ece

http://www.politikkavisen.no/www__Dvenstre..._113_EUTF8.html

http://www1.nrk.no/nett-tv/indeks/156007

http://bt.no/webtv/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் தொடந்து பயன்தரக்கூடிய நிகழ்வுகளை முன்னெடுக்கவும்.

சமாதன தூதுவர் கோஸ்டியும் மகிந்தா வின் பொக்கட்டுக்குள்ளதானாம்.

சிங்களதூதுவனையும் அழைத்து தமிழ் தரப்பையும் சேர்த்து வெளிப்படையான தொலைக்காட்சி விவாதம் ஒன்றுக்கு ஒழுங்கு செய்ய வேண்டும். அப்ப தான் சிங்களவன் செய்யும் அட்டூழியங்கள் அவன் வாயால் தெரியவரும்.

நோர்வேயில் தொலைக்காட்சி விவாதம் என்றால் பிரபல்யமானது.

தமிழர் தரப்பு முயன்று அப்படியான ஒரு விவாதத்தை நடாத்த சந்தர்ப்பம் உருவாக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.