Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தக் கோரி தீக்குளிப்பு முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தக் கோரி தீக்குளிப்பு முயற்சி

வியாழன், 15 ஜனவரி 2009, 23:50 மணி தமிழீழம் [தமிழக நிருபர் அகரவேல்]

ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தக்கோரி பெரியார் திராவிடர் கழகத்தினைச் சேர்ந்த மூவர் பெற்றோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றபோது தமிழகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

kovaifirebath1lu1.jpg

இன்று வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் கோவை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தின் முன்றலில் பெரியார் திராவிடக் கழத்தின் ஆதரவாளர்கள் மூவர் முச்சக்கர வண்டியில் இறங்கி தலையில் பெற்றோலை ஊற்றி தற்கொலை செய்ய முயன்றுள்ளனர்

kovaifirebath2qw6.jpg

இதனை அறிந்த காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நவடிக்கை காரணமாக இந்த மூவர் தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

kovaifirebath3xz7.jpg

படங்கள்: தமிழ்ச் செய்தி மையம்

pathivu

இதை ஏற்று கொள்ள கூடாது மாற்று வழியில் உங்கள் ஆதரவுகலல எதிர்ப்புக்கலை செய்யுங்கள்.

நாங்கள் தான் வீட்டில இருந்து கொம்பியூட்டரால புரட்சி செய்யுறம் நீங்களாவது நேர்ல் செய்யுங்கள்.

இது தமிழன் மேல் கொண்ட பாசத்தில் இந்திய சகோதரர்கள் ஏதோ எல்லாம் செய்கின்றனர். ஆனால் இங்கு புலம்பெயர்ந்த மக்கள் வில்லு பார்க்க முண்டியடித்து கொண்டு நிற்கின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தமிழன் மேல் கொண்ட பாசத்தில் இந்திய சகோதரர்கள் ஏதோ எல்லாம் செய்கின்றனர். ஆனால் இங்கு புலம்பெயர்ந்த மக்கள் வில்லு பார்க்க முண்டியடித்து கொண்டு நிற்கின்றனர்.

வில்லு கதாநாயகன் ஈழத்தமிழருக்காக உண்ணாவிரதமிருந்தது தங்கச்சிக்கு தெரியேல்லை போலை கிடக்கு :lol:

இது தமிழன் மேல் கொண்ட பாசத்தில் இந்திய சகோதரர்கள் ஏதோ எல்லாம் செய்கின்றனர். ஆனால் இங்கு புலம்பெயர்ந்த மக்கள் வில்லு பார்க்க முண்டியடித்து கொண்டு நிற்கின்றனர்.

அப்ப நீங்க முன்டியடிக்கலையோ? :lol: ஒன்-லைன்ல வாங்கின ரிக்கறரோடயே வந்தனியள்??? :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்களைக் காக்க கோரி தீக்குளிப்பு முயற்சி -3 பேர் கைது

வெள்ளிக்கிழமை, ஜனவரி 16, 2009, 10:10 [iST]

கோவை: இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறத்தி கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெரியார் திராவிடர் கழகத்தினர் மூவரை போலீஸார் தடுத்துக் காப்பாற்றினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நேற்று பெரியார் தி.க.வைச் சேர்ந்த சிலர் தீக்குளிப்புப் போராட்டம் நடத்தப் போவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகம் முழுவதும் ஆங்காங்கு கண்காணிப்பிலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பிற்பகல் வாக்கில் தலைமை தபால் நிலைய சாலையிலிருந்து 3 பேர் தலையில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு ஓடி வந்தனர்.

இதையடுத்து அவர்களை போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஈ.வெ.பெரியார் ஜெகன், கோபிநாத், சம்புகன் என்பது தெரிய வந்தது. இவர்களில் பெரியார் ஜெகன் ஈரோட்டைச் சேர்ந்தவர். மற்ற இருவரும் திருப்பூரைச் சேர்ந்தவர்கள்.

http://thatstamil.oneindia.in/news/2009/01...3-arrested.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.