Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் பொதுமக்களை இலக்கு வைத்து பரவலான எறிகணைத் தாக்குதல்: இன்று மட்டும் 14 பேர் பலி; 12 பேர் காயம்

Featured Replies

வன்னி பகுதியில் பொதுமக்களை கொன்றொழிக்கும் நோக்குடன் சிறிலங்கா படையினர் பரவலாகவும் தொடர்ச்சியாகவும் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் இன்று மட்டும் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு நகர் மற்றும் சுற்றயல் பகுதிகள் மீது இன்று வெள்ளிக்கிழமை செறிவான எறிகணைத் தாக்குதலை சிறிலங்கா படையினர் நடத்தியுள்ளனர்.

இதில் புன்னைநீராவிப் பகுதியில் உழுவூர்தி மீது எறிகணை வீழ்ந்து வெடித்ததில் ஓட்டுநர் கொல்லப்பட்டுள்ளதுடன் சிறுமி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். ஒருவர் உயிர் தப்பியுள்ளார் என நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

தொடர் எறிகணைத் தாக்குதல் காரணமாக கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மற்றொரு உழுவூர்தி மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

சேதங்களின் துப்பரவுப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் சேத விவரம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

விசுவமடு நகரில் பெருமளவில் மக்கள் உடமைகளுக்கும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

விசுவமடுவில் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக நடத்தி வரும் எறிகணைத் தாக்குதலில் இராஜரட்ணம் என்பவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுதந்திரபுரம் பகுதியில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 2 பேர் படுகொலை செய்யப்பட்னர்.

இதில் படுகாயமடைந்த சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேராவில் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று பிற்பகல் 1:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 3 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மல்லாவி வன்னிவிளாங்குளத்திலிருந்து இடம்பெயர்ந்து தேராவிலில் வசித்து வந்தவர்களான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இராமநாதன் (வயது 65), இராமநாதன் குமரன் (வயது 30), மற்றும் குமரனின் மாமியாரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவரின் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

படுகொலை செய்யப்பட்ட குமரனின் மனைவி, ஒன்றரை வயது குமரனின் மகள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் உள்ள கைவேலி, கோம்பாவில் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று முற்பகல் 11:45 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

இதில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 7 பேர் படுகாயமடைந்துள்ளனா

மோகனதாஸ் (வயது 25)

இராமநாதன் குமரன் (வயது 30)

தம்பையா யோகேஸ்வரன் (வயது 50)

யோகேஸ்வரன் கஜேந்தினி (வயது 14)

உள்ளிட்ட 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரின் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

யோகேஸ்வரன் பிரசாத் (வயது 08)

பாபுகரன் ஜெயந்தினி (வயது 33)

ஞானரூபன் வசந்தகுமார் (வயது 30)

நந்தகுமார் தபோதினி (வயது 30)

உள்ளிட்ட 7 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 3 பேரின் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

காயமடைந்த அனைவரும் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

puthu_20090116003.jpg

puthu_20090116001.jpg

-PUTHINAM-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.