Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேச்சுவார்த்தையின் விவரங்களை அவர் வெளியிட சிவசங்கர மேனன் மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தையின் விவரங்களை அவர் வெளியிட சிவசங்கர மேனன் மறுப்பு

திகதி: 18.01.2009 // தமிழீழம் // [சோழன்]

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசிய இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் இன்று காலை சென்னை வழியாக நாடு திரும்பினார். ஆனால், பேச்சுவார்த்தையின் விவரங்களை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.

அவர்கள் போர் நிறுத்தம் குறித்து ஏதும் பேசியதாக தகவல் இல்லை. அடுத்த மாதம் கொழும்பில் நடக்கவுள்ள சார்க் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு, இரு நாட்டு உறவுகள் என வழக்கமான பேச்சுவார்த்தைகளே நடந்ததாகத் தெரிகிறது.

இரு தரப்பு பொருளாதார உறவுகள், இலங்கையின் இப்போதைய அரசியல் நிலைமை ஆகியவை குறித்தே பேசப்பட்டதாக சிறிலங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

90 நிமிட நேரம் நீடித்த இந்த சந்திப்பைத் தொடர்ந்து சிறிலங்கா அதிபரின் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுக்கும் சிறிலங்காக்கும் இடையே மிக ஆழமான, நெருக்கமான மற்றும் நல்லுறவு நீடித்து வருவதாக சிவசங்கர் மேனன் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தீவிரவாதத்தை உறுதியோடும், இராணுவ ரீதியாகவும் எதிர்கொண்டு வரும் அதே வேளையில் தமிழர் இன பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண சிறிலங்கா அரசு உறுதி பூண்டிருப்பதாகவும், வட பகுதிகளில் இருந்து வெளியேறும் தமிழ் அகதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வசதிகள் குறித்து மேனனிடம் மகிந்த ராஜபக்ச விளக்கியதாகவும் அதி்ல் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அந்த அறிக்கையில் போர் நடந்து வரும் பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குறித்தோ, போர் நிறுத்தம் குறித்தோ எந்தத் தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மகிந்த ராஜபக்ச கண்டியில் இருந்ததால் அவரை மேனன் கண்டிக்கு சென்று சந்திதது குறிப்பிடத்தக்ககது. இந் நிலையில் தனது சிறிலங்கா பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி செல்லும் வழியில் இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தார் சிவசங்கர மேனன்.

அவரை சந்திப்பதற்காக பத்திரிகையாளர்கள் நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் அவர் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் டெல்லி சென்று விட்டார்.அவரது வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதேபோல மேனன் நடத்திய பேச்சு குறித்து இந்தியாவின் சார்பிலும் அறிக்கை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

சங்கதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிவசங்கர மேனன் திரும்பி வந்தார்

ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 18, 2009, 12:14 [iST]

கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசிய இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் இன்று காலை சென்னை வழியாக நாடு திரும்பினார்.

ஆனால், பேச்சுவார்த்தையின் விவரங்களை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.

அவர்கள் போர் நிறுத்தம் குறித்து ஏதும் பேசியதாக தகவல் இல்லை. அடுத்த மாதம் கொழும்பில் நடக்கவுள்ள சார்க் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு, இரு நாட்டு உறவுகள் என வழக்கமான பேச்சுவார்த்தைகளே நடந்ததாகத் தெரிகிறது.

இரு தரப்பு பொருளாதார உறவுகள், இலங்கையின் இப்போதைய அரசியல் நிலைமை ஆகியவை குறித்தே பேசப்பட்டதாக இலங்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

90 நிமிட நேரம் நீடித்த இந்த சந்திப்பைத் தொடர்ந்து அதிபரின் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே மிக ஆழமான, நெருக்கமான மற்றும் நல்லுறவு நீடித்து வருவதாக சிவசங்கர் மேனன் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தீவிரவாதத்தை உறுதியோடும், ராணுவ ரீதியாகவும் எதிர்கொண்டு வரும் அதே வேளையில் தமிழர் இன பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண இலங்கை அரசு உறுதி பூண்டிருப்பதாகவும், வட பகுதிகளில் இருந்து வெளியேறும் தமிழ் அகதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வசதிகள் (!!??) குறித்து மேனனிடம் ராஜபக்சே விளக்கியதாகவும் அதி்ல் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அந்த அறிக்கையில் போர் நடந்து வரும் பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குறித்தோ, போர் நிறுத்தம் குறித்தோ எந்தத் தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ராஜபக்சேவை மேனன் சந்தித்தபோது இலங்கைக்கான இந்தியத் தூதர் அலோக் பிரசாதும் உடனிருந்தார். ராஜபக்சே கண்டியில் இருந்ததால் அவரை மேனன் ராணுவ ஹெலிகாப்டரில் கண்டிக்கு சென்று சந்திதது குறிப்பிடத்தக்ககது.

இந் நிலையில் தனது இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி செல்லும் வழியில் இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தார் சிவசங்கர மேனன் வந்தார்.

.

அவரை சந்திப்பதற்காக பத்திரிகையாளர்கள் நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் அவர் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் டெல்லி சென்று விட்டார்.

அவரது வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அதே போல மேனன் நடத்திய பேச்சு குறித்து இந்தியாவின் சார்பிலும் அறிக்கை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

தற்ஸ்தமிழ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் வளர்ச்சி திட்டங்கள்: இலங்கை அதிபர் ராஜபக்சே உறுதி

கொழும்பு, ஜன.18-: இந்தியாவின் உதவியுடன் கிளிநொச்சி பகுதியில் வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று சிவசங்கர் மேனனிடம் இலங்கை அதிபர் ராஜபக்சே உறுதி அளித்தார்.

இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதால், உடனடியாக போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என்று தமிழக தலைவர்கள் மத்திய அரசை வற்புறுத்தி வரும் நிலையில், மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் கடந்த வியாழக்கிழமை இரவு கொழும்பு புறப்பட்டு சென்றார்.

அங்கு இலங்கை அதிபர் ராஜபக்சேயின் அரசியல் ஆலோசகரும், சகோதரருமான பசில் ராஜபக்சே, இலங்கை வெளியுறவு மந்திரி ரோகித பொகல்லகாமா, இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர் பலிதா கோகனா ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது, போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு உதவ 2-வது தவணையாக இந்தியாவின் சார்பில் ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

சிவசங்கர் மேனன் நேற்று கண்டி நகருக்கு சென்று இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அங்குள்ள ராஜபக்சேயின் இல்லத்தில் நடந்தது. சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது இலங்கைக்கான இந்திய தூதர் அலோக் பிரசாத், இலங்கை அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்கா, வெளியுறவு செயலாளர் பலிதா கோகனா, கூடுதல் செயலாளர் பிரசாத் கரியவாசம் ஆகியோர் உடன் இருந்தனர்.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குதல், கொழும்பு நகரில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சார்க் நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மாநாடு உள்ளிட்டவை குறித்து ராஜபக்சேயும், சிவசங்கர் மேனனும் ஆலோசனை நடத்தினார்கள்.

இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் இரு தரப்பு நல்லுறவுகள் பற்றி ஆலோசனை நடத்திய சிவசங்கர் மேனன், இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்தார். விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கையில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படக்கூடாது என்று கூறிய அவர், தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கின் கோரிக்கைப்படி இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணும் படியும் ராஜபக்சேயிடம் வற்புறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலவரம் குறித்து சிவசங்கர் மேனனிடம் ராஜபக்சே விளக்கி கூறினார். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து தப்பி வரும் தமிழர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய வசதிகள் குறித்தும் விவரித்தார்.

இனப்போர் என்ற பெயரில் வடக்கு மாகாணங்களில் ஏராளமான தமிழர்கள் தெளிவான நோக்கம் இன்றி விடுதலைப்புலிகளுடன் சேர்ந்துள்ளதாக கூறிய ராஜபக்சே, அவர்களை மீண்டும் ஜனநாயக பாதைக்கு வரவழைத்து வளர்ச்சிப்பணிகளில் ஈடுபடுத்துவதற்கு தமது அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றியும் விவரித்தார்.

விடுதலைப்புலிகளுக்கும், அப்பாவி தமிழர்களுக்கும் இடையே வேறுபாடு உள்ளதாகவும், தீவிரவாதத்துக்கு எதிராகத்தான் ராணுவம் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கூறிய ராஜபக்சே, விரைவில் வடக்கு மாகாணங்களில் அமைதி திரும்பும் என்று கூறியதோடு, இலங்கை அரசு தீவிரவாதிகளுக்கு தான் எதிரானது என்றும், அப்பாவி தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.

இலங்கை மண் சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் உள்பட அனைத்து சமயத்தவருக்கும் சொந்தம். அதில் அனைவருக்கும் சம உரிமை உள்ளது. அவர்களின் உரிமை, உணர்வுகள் மற்றும் உயிருக்கு பாதுகாப்பு வழங்குவது இலங்கை அரசின் கடமை என்று சிவசங்கர் மேனனிடம் ராஜபக்சே தெரிவித்தார்.

அத்துடன், விடுதலைப்புலிகள் வசம் இருந்த கிளிநொச்சி கைப்பற்றப்பட்டு தற்போது இலங்கை அரசின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து, விரைவில் அங்கு இந்தியாவின் உதவியுடன் தமிழர்களுக்கு வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் ராஜபக்சே உறுதி அளித்தார்.

கொழும்பு நகரில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் எஸ்.ஸ்ரீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் சிவசங்கர் மேனனை சந்தித்து பேசினார்கள்.

அப்போது, தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த உடனடியாக ராணுவ தாக்குதலை நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சிவசங்கர் மேனனிடம் தமிழர் தலைவர்கள் வற்புறுத்தினார்கள். இலங்கை இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வு காண இந்தியா ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று அப்போது அவர்களிடம் சிவசங்கர் மேனன் கேட்டுக் கொண்டார்.

விகடன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி அந்த மேனன் எப்படி தெரிவிப்பார் ,கதைத்தது மற்றவனை எப்படி அழிக்கலாம் எவ்வளவு பணம் தருவிங்கள் வேற என்ன ஆயுதம் வேணும் வேற யாரவது புது பொம்பிளைகள் வைத்திருக்கிறிங்களோ இப்படி எல்லாம் தன் கதைத்திருப்பார் என்று அவர் சொல்லி தெரியவேண்டிய அவசியமில்லையே ..... அதுக்குள்ள அங்கால ஒருவர் பொறுமை காக்கட்டாம் :huh::unsure::unsure:

அதுசரி அந்த மேனன் எப்படி தெரிவிப்பார் ,கதைத்தது மற்றவனை எப்படி அழிக்கலாம் எவ்வளவு பணம் தருவிங்கள் வேற என்ன ஆயுதம் வேணும் வேற யாரவது புது பொம்பிளைகள் வைத்திருக்கிறிங்களோ இப்படி எல்லாம் தன் கதைத்திருப்பார் என்று அவர் சொல்லி தெரியவேண்டிய அவசியமில்லையே ..... அதுக்குள்ள அங்கால ஒருவர் பொறுமை காக்கட்டாம் :huh::unsure::unsure:

இதுகளை நீங்கள் தான் சொல்லலாம் அவர் சொல்லலாமோ?... அப்பைடிசொன்னா அது இறகு இராச தந்திரி என்றபேர் போய் அற்ற இயற்பட்டம் வந்திடும்.... அது என்னெவெண்டு கேழுங்கோவன். அதுதான் "இராச மாமா"

மகிந்தவிடம் இலவசமாக(அன்பளிப்பு) கொடுத்த இரத்தினபுரி மாணிக்க கல் பதித்த நகைகள் பற்றி விசாரித்து இருப்பார். அதை எல்லாம் வெளியில் சொல்ல முடியுமா என்ன.?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.