Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

4 வது நாளாக உண்ணாவிரதம்: திருமா மயக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: இலங்கையில் போரை நிறுத்தக் கோரி 4வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு இன்று மயக்கம் ஏற்பட்டது.

கடந்த 15ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய அவர் வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி வருகிறார்.

இன்று காலை அவர் மிகவும் சோர்வுடன் மயங்கிய நிலையில் காணப்பட்டார். பேண்ட், சட்டை உடையிலிருந்து லுங்கிக்கு மாறியிருந்த அவர் நாற்காலியில் துவண்டு போய் காணப்படுகிறார்.

அவரது உடலை டாக்டர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்து வருகின்றனர். ரத்த அழுத்தம் குறைவாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து போய்விட்டதால் அவருக்கு மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டு வருகிறது. வெறும் தண்ணீர் மட்டுமே அருந்துவதால் வயிற்று புரட்டலும் ஏற்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவி்த்தனர்.

திருமாவளவனின் தாயார் பெரியம்மா, தம்பி செங்குட்டுவன் ஆகியோர் அவர் அருகிலேயே இருந்து கவனித்து வருகின்றனர்.

இந் நிலையில் இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் நிர்வாகக் குழுக் கூட்டம் உண்ணாவிரத பந்தல் அருகே நடக்கிறது. இதில் பங்கேற்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் குவிந்துள்ளனர்.

உண்ணாவிரதத்தை திருமாவளவன் கைவிடுவாரா என்பது பற்றி இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது.

திருமாவளவனின் தாயார் பெரியம்மா கூறுகையில்,

திருமா உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இனிமேல் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். அதை அவன் உடனே கைவிட வேண்டும். இங்கு கூடியிருக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து திருமாவை உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று கண் கலங்கினார்.

உண்ணாவிரத பந்தலில் திருமாவளவனுடன் ரவிக்குமார் எம்.எல்.ஏ., நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் இருந்தனர். இயக்குனர் அமீர், திருமாவளவனுக்கு சால்வை அணிவித்தார்.

உண்ணாவிரதம் தீவிரமடைந்ததால் மாநிலம் முழுவதும் இருந்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாகனங்களில் வந்து குவிந்து வருகின்றனர்.

நன்றி தற்ஸ் தமிழ்

திருமா அண்ணா , நீங்கள் உங்களது உண்ணாவிரதத்தை கைவிடுங்கள் . நாமும் இதே வழியில் தான் இந்திய அரசை கேட்டு திலீபனையும் , அன்னை பூபதியையும் இழந்தோம் .

அதே வழியில் உங்களையும் நாம் இழக்க தயாரில்லை .

இந்தியர்களும் அதன் அரசும் ஒண்டும் அகிம்சையாக போராடினால் நல்ல விடை கொடுக்க ஒண்றும் வெள்ளை காறரோ , பிரித்தானியர்களோ இல்லை. இதை அவர்கள் பல முறை செயலால் அறிவித்து விட்டனர். காந்தியின் கட்ச்சியான காங்கிரசிடம் அதை துளியும் எதிர்பார்க்காதீர்.

நாசமாய் போன போர் நிறுத்தம் வராமல் போனாலும் பறவாய் இல்லை. நிறுத்த சொல்லுங்கப்பா அந்த பட்டினி போராட்டத்தை.

ஈழத்தமிழர்கள் இந்த போராட்டதை நிறுத்த கோரி திருமவுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி இணையம்.

http://www.vck.in/

மின்னஞ்சல் திருமா அவர்களுக்கு.

thirumaa@hotmail.com

Edited by பொய்கை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்களும் அதன் அரசும் ஒண்டும் அகிம்சையாக போராடினால் நல்ல விடை கொடுக்க ஒண்றும் வெள்ளை காறரோ , பிரித்தானியர்களோ இல்லை. இதை அவர்கள் பல முறை செயலால் அறிவித்து விட்டனர். காந்தியின் கட்ச்சியான காங்கிரசிடம் அதை துளியும் எதிர்பார்க்காதீர்.

நாசமாய் போன போர் நிறுத்தம் வராமல் போனாலும் பறவாய் இல்லை. நிறுத்த சொல்லுங்கப்பா அந்த பட்டினி போராட்டத்தை.

ஈழத்தமிழர்கள் இந்த போராட்டதை நிறுத்த கோரி திருமவுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி இணையம்.

http://www.vck.in/

மின்னஞ்சல் திருமா அவர்களுக்கு.

thirumaa@hotmail.com

பொய்கை , திருமா அவர்களின் மின்னஞ்சல் தகவலுக்கு நன்றி .

நான் , மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன் .

  • கருத்துக்கள உறவுகள்

மணிப்பூரில் ஒரு பெண் இந்தியாவின் வட மாநிலங்களுக்கான ஒரு சட்டத்தை எதிர்த்து நான்கரை வருடங்களாக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறாராம். வலுக்கட்டாயமாக இத்தனை வருடங்களும் அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர் இன்று வரை தான் உண்ணாமல் போராட்டத்தைத் தொடர்ந்தவண்ணம் உள்ளாராம்..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது திருமா தனது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுவிட்டார்.

இன்று மாலை 6.00 மணிக்கு சற்று முன்பாக இத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது திருமா தனது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுவிட்டார்.

இன்று மாலை 6.00 மணிக்கு சற்று முன்பாக இத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

நல்ல முடிவு இப்போதுதான் எமக்கு ஆறுதலாக இருக்கின்றது.

ஊளல் அரசியலில் புளுத்த இந்திய இயந்திரம் அறப்போராட்டத்திற்க்கு தலைவணங்கும் என்று எதிர்பாரத்ததுதான் தவறு.

காந்தீயம் இன்று மூன்றாவது தடவையாகவும் தோற்றது. அகிம்சை வழியா? நான் கண்டுகொள்ளவே மாட்டேன்! என்கிறது பாரதம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காந்தீயம் இன்று மூன்றாவது தடவையாகவும் தோற்றது. அகிம்சை வழியா? நான் கண்டுகொள்ளவே மாட்டேன்! என்கிறது பாரதம்.

விடிவெள்ளி , இப்போ அது பாரதியின் பாரதம் அல்ல ,

தமிழனை மெல்ல கொல்லும் (போர்) போரதம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.