Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவர்களே! எழுந்து நில்லுங்கள் போதும்! அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு

Featured Replies

• 6 லட்சம் தமிழர்கள் சாவின் விளிம்பில் நிற்கிறார்கள்.

• இனி விழும் ஒவ்வொரு குண்டுக்கும் நூற்றுக்கணக்கானோர் பலியாகப் போகிறார்கள்…

• இலங்கையில் போர் என்ற பெயரில் தமிழ் இனப் படுகொலை நடந்து வருகின்றது.

• அதற்கு இந்திய அரசு ஓடி, ஓடி உதவி வருகின்றது.

• அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது, வணிகர்கள் முதல் திருநங்கைகள் வரை எல்லோரும் பட்டினி கிடந்து பார்த்துவிட்டார்கள்.

• தமிழக சட்ட சபையில் போர் நிறுத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; முதல்வர் பிரதமரிடம் முறையிட்டார்.

ஆனால்,

o தமிழினப் படுகொலை தொடர்கின்றது .

o உலக நாடுகளைப் போல் இந்தியாவின் மெளனமும் தொடர்கின்றது.

o அரசியல் கட்சிகள் கை கழுவிவிட்டன.

• நாம் இன்று வேடிக்கைப் பார்த்திருந்தால், இன்னும் 100 ஆண்டுகள் கழித்து, “ உலகின் மிகப்பெரிய கல்லறை இலங்கை; அங்கும் தமிழர்கள் வாழ்ந்தார்கள்” என்று வரலாறு சொல்லும். ஏதாவது ஒரு புத்திசாலி மாணவன் கேட்கக் கூடும், “ கூப்பிடும் தூரத்தில் 6.5 கோடி தமிழர்கள் வாழ்ந்தார்களே, அவர்கள் என்ன செய்தார்கள்?” என்று ….

நம்புங்கள், உங்களின் ஒருமித்த சிறு அசைவால் பல உயிர்களை காக்க முடியும்.

உரக்கச் சொல்லுங்கள் உலகுக்கு –

நீங்கள் இனப்படுகொலைக்கு எதிரானவர்கள் என்று!

இன்னும் நம் உணர்வுகள் மலுங்கிவிடவில்லை என்று!

தமிழர் நாதியற்று போகவில்லை என்று!

21 ம் தேதி முதல் வகுப்பை புறக்கணிப்பீர் !

கடந்த 6 மாதத்தில் போர் என்ற பெயரில் மறைக்கப்பட்ட உண்மைகள்.

• வீட்டுக்குள் இருந்தால் குண்டுகளால் சாவு நிச்சயம் என்று நம்முடைய ஊரோடு நாம் இடம்பெயர்ந்து காட்டிலும், பதுங்குகுழியிலும் வாழ்ந்தால்…

• பள்ளி கட்டடங்கள் பாதுகாப்பு இல்லாதவை என்று மரத்தடிகளில் நம் வீட்டு பிள்ளைகள் பாடம் கற்றால்

• 3 மாதத்திற்கு மேலாக காட்டிற்குள் பழம், இலை, தழைகளை சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருந்தால்…

• நாம் விட்டு சென்ற வீடும், பசு மாடுகளும் ‘கிளஸ்டர்’ குண்டுகளால் அழிக்கப்பட்டால்…(கிளஸ்டர் குண்டுகள் ஐ.நா. வால் தடை செய்யப்பட்டவை).

• திடீரென்று வந்த இராணுவக்காரர்கள், நான்காவது தெருவில் உள்ள நம் நண்பனை ‘தமிழன்’ என்ற ஒரே காரணத்திற்காக சுட்டுவிட்டு போனால்…

• நம் ஊரை விட்டு ஓடும் போது, குணடு வெடித்து சிதறிய குழந்தை ஒன்றின் இடது கை ஒன்றை மிதிக்க நேர்ந்தால்…

• காட்டில், நம் பக்கத்து வீட்டுக்காரர் பாம்பு கடித்து துடிக்கக் கண்டால்….

• அவரை தூக்கிச் சென்று சேர்த்த மருத்துவ மனையில் பாம்புக் கடிக்கு மருந்து இல்லாமல், அவர் சாகக் கண்டால்….பிணங்களை அடக்கம் செய்ய வழியில்லாமல், அங்கங்கே விட்டு விட்டு இடம்பெயர்ந்தால்….

• கிறுத்துமஸூக்கு முன்னும், பின்னும் நம் பக்கத்து ஊரில் உள்ள தேவாலயத்தில் குண்டு வீசப்பட்டால்..

• நாம் ஓடி ஒளிந்த ஒரு ஊருக்குள் நம்மைப் போல் 4.5 லட்சம் மக்கள் தஞ்சம் புகுந்து இருந்தால்….

• இனி விழும் ஒவ்வொரு குண்டுக்கும் 500 பேர் பலியாகலாம் என்ற நிலையில்….

• இதை உலகுக்கு சொல்ல ஒரு பத்திரிக்கையும் இல்லை என்ற சூழ்நிலையில்…

இது தான், இலங்கையில் தமிழர்களின் இன்றைய நிலை. இதை நாம் அறிந்தால் துடித்து விடுவோம் என்றே நம் ஊடகங்கள் நமக்கு இதை மறைக்கின்றன. துடிப்போமா????

உண்மைகளை அறிய / வரலாற்றை அறிய

இந்த வலை தளங்களை பாருங்கள்.

/ http://www.tamilnation.org/tamileelam.htm

http://www.puthinam.com/

http://www.tamilwin.com/

http://www.sankathi.com/

http://www.tamilnaatham.com/

http://www.pathivu.com/

http://www.nitharsanam.com/

http://www.blackjuly83.com/

www.tamilcanadian.com

http://www.tamilseythi.com/tamilnaadu/chen...2009-01-19.html

-அசுரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான மடல்

மழுங்கடிக்கப்படலுக்கான சரியான எழுத்தைப்பிரயோகியுங்கள். எல்லா வலைத்தளங்களுக்கும், கூகுள், யாஹூ குழுமங்களுக்கும் இந்த மடலை அனுப்பி வையுங்கள்.

நானும் அனுப்பி வைக்கின்றேன்.

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தமிழரசு,

நீங்கள் இன உணர்வுடன் எழுதிய இந்த வாசகங்கள் நிட்சயம் ஒவ்வொரு தமிழர் மனதையும் தொட்டிருக்கும். அமெரக்க ஏகதிபத்திய நாயகன் விடைபெற்றுவிட்டான், புதியவன் பயங்கரவாததற்கும், விடுதலை வேட்கைக்கும் சரியான இலக்கணம் தேடினான் என்றால் உலகம் சமநிலை பெற்றுவிடும்.

அது நமது விடுதலையின் போரின் வெற்றியின் முதலாம் படி,

அடுத்தாக பிராந்திய வல்லரசன் மௌனித்து போய்விடுவான், சிங்களம் தோறறுப்போய்விடும்.

மனித அவலம்போய் அல்லல்படும் நம் உறவுகள் நிம்மதி பெருமூச்சு விடலாம்.

நம்பிக்கையோடு ஒவ்வொரு தமிழனும் தனது பங்களிப்பை செய்வேண்டியது அவசியமானதும், அவசரமானதும்

விடைபெறும்

பென்மன்

என்.வை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.