Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ மக்களின் துயரை நீக்கக் கோரி செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 14 பேர் நேற்று முதல் சாகும் வரை பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்

Featured Replies

ஈழ மக்களின் துயரை நீக்கக் கோரி செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 14 பேர் நேற்று முதல் சாகும் வரை பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். செங்கல்பட்டு சட்டக் கல்லூரி வாசலில் நடக்கும் இந்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் பெயர்கள்:

1. கெம்ப குமார் - தொடர்பு எண் : 92455-81684

2. திருமுருன்

3. விஜயகுமார்

4. மணிவேல்

5. பிரவீன்

6. சுரேஷ்

7. ராஜா

8. ராஜ்குமார்

9. முஜிபுர் ரகுமான்

10. முனிஷ் குமார்

11. நவீன்

12. பிரியன்

13. பிரபு

14. ஆறுமுக நயினார்

திரு. கெம்ப குமாரிடம் பேசிய போது, 'ஈழத்தில் துன்புறும் தமிழ் மக்களுக்கு இந்திய அரசும் தமிழக அரசும் உடனடியாக உதவ வேண்டும். இந்திய அரசு சிங்கள அரசுக்கு செய்யும் உதவிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

எத்தனை நாட்களானாலும் எங்கள் போராட்டத்தை நாங்கள் உறுதியாகத் தொடருவோம். எங்களை கைது செய்தாலும் சிறையிலும் எங்கள் உண்ணாவிரதம் தொடரும்' என்று உறுதியோடு கூறினார்.

இந்த செய்தியின் உறுதித்தன்மை பற்றி எனக்கு தெரியாது தற்ஸ் தமிழ் இணையத்தில் பின்னூட்டமாக பதியப்படிருந்தது

http://thatstamil.oneindia.in/news/2009/01...ent-tamils.html

நன்றி உறவுகளே

கைகூப்பி தொழுகின்றோம். எமது மக்களுக்காக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற உங்களின் உயரிய குறிக்கோளுக்கு நாம் எப்படி நன்றி சொல்வது.

உங்கள் போராட்டம் வெற்றியைத் தருகின்றதோ இல்லையோ நம்பிக்கை தருகின்றது. மனோசக்தியை தருகின்றது.

தமிழகமக்களின் உணர்வு மனதை பிழிகின்றது... இந்த உணர்வு எம்மக்களில் இன்னும் பலபேருக்கு வரவில்லை.. வந்தால் உலகத்தை கிடுகிடுக்கும் போரட்டங்களையும், கடைசி சுழர்ச்சி முறை உண்ணாவிரதப்போரட்டங்களையும் நடத்தி உலகின் கவனத்தை ஈர்த்து எம்மக்களுக்கு நடக்கும் கொடுமைகளை உலகினுக்கு அறிய வைத்து நித்திரையாக இருக்கும் மனச்சாட்சிகளைத்தட்டி எழுப்பி எம்மக்களை இலங்கையின் அழிவிலிருந்து காக்கலாம்..

எமக்காக குரல் கொடுக்கும் உறவுகளுக்கு மிக்க நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி தமிழக மாணவ சமுதாயமே! உங்களால்த்தான் தமிழகத்திலும் தமிழ் ஈழத்திலும் பெரும் மாற்றங்களைக் கொண்டு வர முடியும். ஈழப்பிரச்சனை தீர்ந்தபின்னர்தான் தமிழகத்தில் தேர்தல் ஓட்டுக் கேட்க முடியும் என்பதை அழுத்தமாகச் சொல்லுங்கள் எதற்;கும் பணியாத அரசியல் வாதிகள் உடனடியாக விழித்துக் கொள்வார்கள்.

எமக்காக குரல் கொடுக்கும் உறவுகளுக்கு மிக்க நன்றி

  • தொடங்கியவர்

செங்கல்பட்டு: ஈழத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்தும்,இந்திய அரசு இலங்கைக்கு இராணுவ உதவிகள் செய்வதை நிறுத்தக்கோரியும் செங்கற்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் மூன்றாவது நாளாக இன்றும் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

செங்கற்பட்டு மருத்துவக்கல்லூரிக்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். மொத்தம் பதினான்கு மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த மாணவர்கள் தண்ணீர்கூட அருந்தாமல் இருப்பதால் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதையடுத்து இவர்களை செங்கற்பட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களை இன்று நடிகர் சத்யராஜ், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, சந்தனக்காடு தொடர் இயக்குநர் வ.கெளதமன் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

மாணவர்களின் உண்ணாநிலையை முடித்துக்கொண்டு வேறு வகையில் போராடும்படி அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்தக் கோரிக்கையை மாணவர்கள் நிராரித்தனர்.

இந்திய அரசு ஆயுதம் கொடுப்பதை நிறுத்தி இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டுவரும்வரை போராட்டம் நடக்கும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து சென்னை மருத்துவக்கல்லூரி,கோவை சட்டக்கல்லூரி மாணவர்களும் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

இயக்குநர் வ.கௌதமன் ஈழப்பிரச்சனை பற்றியும் இந்திய அரசு செய்துவரும் வஞ்சனைகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

அவர் பேசுகையில், செஞ்சோலை என்ற அமைப்பு ஈழத்தில் உள்ளது. இதில் போரில் பாதிப்புற்ற குடும்பத்தைச் சேர்ந்த,பெற்றோரை இழந்த அனாதைக் குழந்தைகள் இருந்தனர். இவர்கள்மேல் குண்டு வீச,அந்த பிஞ்சு மழலைகள் இருந்த இடத்தை அடையாளம் காட்டியது இந்திய அரசாங்கத்தின் ரேடார் கருவிகள் ஆகும்.

பிஞ்சுக் குழந்தைகளைக் கொல்ல இந்தியா உதவினாலும் தமிழர்கள் இன்றுவரை இந்தியா என் தாய்நாடு இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தவர்கள் என்கின்றனர்.

அடுக்கடுக்காக உதவிகளை இந்தியஅரசு இலங்கைக்குச் செய்தாலும் இந்தியப் பிரதமர் இதய அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதும் பூரணகுணமடைய தமிழர்கள்தான் பிரார்த்தனை செய்கின்றனர்.

இரக்கம் கொண்ட இந்த இனத்தை அழிக்க இந்திய அரசு இராணுவ உதவிகள் செய்யக்கூடாது. இரண்டு இலட்சத்துப் பத்தாயிரம் தமிழ் உயிர்களை இலங்கை இராணுவம் இதுவரை கொன்றுள்ளது.

அந்த இராணுவத்துக்கு இந்திய அரசு துணைபோவது தமிழர்களுக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. பாகிஸ்தானில் ஒரு சிங் தூக்குத் தண்டனைக்கு நின்ற பொழுது இந்திய நாடே துடித்தது.

ஈழத்தில் தமிழர்கள் மழையிலும் கொத்துக்குண்டுக்கு இடையிலும் காடுகளில் வாழ வேண்டியுள்ளது. காடுகளில் பாம்புக்குப் பலியாவதும் மருந்தின்றி சாவதும் அதனை உலக நாடுகள் வேடிக்கை பார்ப்பதும் கண்டனத்துக்குரியது.

உலகமே எதிர்த்தாலும் புலிகள் தமிழீழம் அமைப்பது உறுதி. ஏனென்றால் கொரில்லாப் போரில் ஈடுபட்ட எந்த போராளிகளும் இதுவரை தோற்றதில்லை. மக்களுக்கான இராணுவம் கூலிகள். மக்களே இராணுவம் புலிகள் என்றார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த சத்தியராஜ், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் மாணவர்களின் உடல்நிலை கண்டு வருத்தம் தெரிவித்தனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களோடு சிறிது நேரம் அமர்ந்திருந்தனர்.

http://thatstamil.oneindia.in/news/2009/01...unto-death.html

24-fast200.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.