Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கு இராணுவ வெற்றிகல் மாத்திரம் போதாது அரசியல் தீர்வு அவசியம் என்கிறார் யசூசி அகாசி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி நாளேடு - இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில், ஜப்பான் மேற்கொண்ட முயற்சிகள் பயன்தரவில்லை. இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த இராணுவ வெற்றிகள் மாத்திரம் போதுமானவையல்ல. எனவே, அரசியல் தீர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என ஜப்பான் விசேட தூதுவர் யசூசி அகாஷி தெரிவித்தார்.

இனப்பிரச்சினைக்கு யுத்தத்தின் மூலம் தீர்வு காண்பது கடினமாகும். தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்கும் விதத்தில் பாராளும ன்ற முறைக்குள் அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும். வன்னியில் இடம்பெயரும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

கடந்த 21 ஆம் திகதி இலங்கை வந்த ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

இப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றபோதே அகாஷி இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதியை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என்பது தொடர்பில் வலியுறுத்தினேன்.

சர்வகட்சி குழு ஊடாக தீர்வை தயாரிப்பதுடன் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக முன்னெடுத்து தமிழ் மக்களுக்கு பலன்களை பெற்றுக் கொடுத்து நிலையான சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும். வன்னியில் இடம்பெயரும் சிவிலியன்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய தொண்டு நிறுவனங்களுக்கு இடமளிக்க வேண்டும்.

வவுனியா விஜயம்

வவுனியாவுக்கு விஜயம் செய்து அரசாங்க அதிபருடன் பேச்சு நடத்தினேன். வன்னியிலிருந்து பலர் நோயாளிகளாகவும் காயப்பட்டும் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உட்பட தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றன. இலங்கை அரசாங்கமும் நிவாரணங்களை சிறந்த முறையில் வழங்குகிறது. மக்களுக்கான சேவைகளை மேற்கொள்ளும் தொண்டு நிறுவனங்களின் பணிகளுக்கு விடுதலைப் புலிகள் அல்ல எத்தரப்பினராவது தடை விதிப்பதை கடுமையாக கண்டிக்கின்றோம்.

கிழக்கு விஜயம்

கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனையும் அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். அங்கு படிப்படியாக அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகிறது. கமத் தொழில், மீன் பிடித்துறை, அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ஜப்பான் உதவி வழங்கும் கிழக்கில் நல்ல முறையில் மாகாண சபை ஆட்சி முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிந்தது. மேலும் அங்கு சட்டமும் ஒழுங்கும் பாதுகாக்கப்பட வேண்டியது கட்டாயமானதாகும். அரசியல் தீர்வு

பிரச்சினைக்கு யுத்தத்தால் தீர்வு காண்பது கடினமானதகும். அதேவேளை சமாதானத்தை ஏற்படுத்துவதென்பது மிக மிகக் கடினமானதாகும். எனவே தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்கும் விதத்தில் பாராளுமன்ற முறைமைக்குள் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.

டோக்கியோ பிரகடனம்

டோக்கியோ பிரகடனம் வரலாற்று முக்கியத்துவம் மிக்கதாகும். ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டமையை வரவேற்கின்றோம்.

பின்னர் இப்பிரகடனத்தை முன்னெடுப்பதற்கு முடியாது புலிகள் சந்தர்ப்பத்தை கைவிட்டனர். இதனால்அன்று ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவி வகித்த காலத்தில் கிடைக்கவிருந்த 4.5 மில்லியன் டொலர் அபிவிருத்திக்கான கடன் தொகையும் இரத்தானது.

இந்தியா பயணம்

இலங்கையில் அனைத்து தரப்பினருடனும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் தற்போது உருவாகியுள்ள நிலைமைகள் தொடர்பாக இந்தியத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து விளக்கவுள்ளேன். ஐந்து நாள் இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்ட அகாஷி நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு பயணமானார்.

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி நாளேடு - இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில், ஜப்பான் மேற்கொண்ட முயற்சிகள் பயன்தரவில்லை. இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த இராணுவ வெற்றிகள் மாத்திரம் போதுமானவையல்ல. எனவே, அரசியல் தீர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என ஜப்பான் விசேட தூதுவர் யசூசி அகாஷி தெரிவித்தார்.

பிரச்சினைக்கு யுத்தத்தால் தீர்வு காண்பது கடினமானதகும். அதேவேளை சமாதானத்தை ஏற்படுத்துவதென்பது மிக மிகக் கடினமானதாகும். எனவே தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்கும் விதத்தில் பாராளுமன்ற முறைமைக்குள் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.

டோக்கியோ பிரகடனம்

டோக்கியோ பிரகடனம் வரலாற்று முக்கியத்துவம் மிக்கதாகும். ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டமையை வரவேற்கின்றோம்.

பின்னர் இப்பிரகடனத்தை முன்னெடுப்பதற்கு முடியாது புலிகள் சந்தர்ப்பத்தை கைவிட்டனர். இதனால்அன்று ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவி வகித்த காலத்தில் கிடைக்கவிருந்த 4.5 மில்லியன் டொலர் அபிவிருத்திக்கான கடன் தொகையும் இரத்தானது.

இந்தியா பயணம்

இலங்கையில் அனைத்து தரப்பினருடனும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் தற்போது உருவாகியுள்ள நிலைமைகள் தொடர்பாக இந்தியத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து விளக்கவுள்ளேன். ஐந்து நாள் இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்ட அகாஷி நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு பயணமானார்.

எல்லாம் சரி. எப்பிடிப் பங்கு போடலாம் என்பதது பற்றிப் பேசவா? நீங்கள் சம்பூரைக் கவனியுங்கோ நாங்கள் புல்மோட்டையைக் கவனிக்கிறம் எண்டு சொல்லவா? தமிழரின் உடலங்களில் ஓடும் ஊணங்களை விற்றா அபிவிருத்தி? யாருக்கு , எதற்காக?

உலகே உன்னால் முடியுமாயின் நீங்கள் ஒன்றும் எமக்குச் செய்ய வேண்டாம். முதலில் சிங்கள இனப்படுகொலைக்கு உதவி செய்வதை நிறுத்துங்கள். அகாசியின் கருத்தில் தமிழினத்தின் துயரம் பற்றி தெளிவாக உரைக்காது, தமிழர் தலைமை மீது சேறுபூசும் நயவஞ்சகத்தன்மையையும் காணமுடிகிறது. தமிழினப் படுகொலைகளைத் தடுக்க உதவா விடினும், உபத்திரவம் செய்யாதீர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கலா குடுக்கிறது இங்கால ஓதுகிறது.வந்திட்டாங்க எல்லாரும் ரவுசரையும் கோட்டையும் போட்டுக்கொண்டு விடுப்பு புடுங்க :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.