Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிசில் உண்ணாவிரதம். உதவி தேவை!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் வணக்கும்

இந்த அரசியல் வாதியளுக்கு ஈமெயில் எழுதி போட்டு ஒன்டும் நடக்கிற மாதிரி தெரியேலை. இங்க இருக்கிற எங்கட அமைப்புகளும் ஒன்டும் பண்ணுற மாதிரி தெரியேலை.

எனவே நானே தன்னிச்சையாக ஏதாவது பண்ணலாம் என்டு முடிவுக்கு வந்திட்டேன்.

நான் ஒரு 3 நாள் உண்ணாவிரதம் இருப்பதாக முடிவு பண்ணியுள்ளேன். இதுவரை இருந்தவர்கள் ஏதோ ஒரு அறைக்கு இருந்துவிட்டு எழும்பி சென்றுள்ளது உலகத்திற்கு தெரிய வாய்ப்பில்லை. நான் பொது இடத்தில் இருக்கலாம் என்று யோசிக்கின்றேன்.

எனக்கு இதற்கு எங்கு அனுமதி பெறுவது என்று தெரியவில்லை. நான் எனது மாநிலத்தில் இணையத்தளத்தின் மின்னஞ்சலிற்கு ஈமெயில் எழுதி கேட்டுள்ளேன். வேறு இலகுவான முறையில் சுவிசில் அனுமதி பெறுவது எப்படி என்று யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து எனக்கு இங்கு அறியத்தரவும்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வசம்புவுக்கு இது பற்றிய தகவல்கள் தெரியக் கூடும். தனி மடல் அனுப்பிப் பாருங்கள் . நன்றிகள் தாய் மண்.

தாய் மண் உங்கள் உணர்வு பூர்வமான எண்ணம் புரிகின்றது. ஆனால் எனக்கு ஏற்கனவே ஏற்பட்ட அனுபவத்தை வைத்து சொல்கிறேன், என்னவோ தெரியவில்லை சுவிசில் உள்ள மக்கள் உண்ணாவிரதத்தை பெரிதாக விரும்புவதில்லை. அதற்குப் பதிலாக ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை வேண்டுமானால் சுழற்சி முறையில் நடாத்தலாம். அப்பொழுது எமது மக்கள் படும் துயரங்களை துண்டுப் பிரசுரங்களாக மக்களிடமும் சேர்ப்பிக்கலாம்.

தாய்மண் உங்களின் உணர்ச்சிகள் மிகவும் வரவேற்க்க தக்கது... உங்களை போன்று ஒருவர் உண்ணவிரதம் இருக்க விருப்பப் பட்டு நாம் அனுமதி பெற முயற்சித்த போதுதான் தெரிய வந்தது சுவிஸ்ல் உண்ண விரதம் இருக்க தடை என்று.....

நீங்கள் நினைப்பது போன்று தான் நானும் எண்ணுகிறேன்....நாம் சுவஸ்ல் ஏதவது செய்தல் வேண்டும்... உங்களிற்க்கு விருப்பம் இருப்பின் என்னை தனிமடலில் தொடர்பு கொள்ளவும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நேற்று அனுப்பிய மின்னஞ்சலிற்கு இந்து பதில் வந்துள்ளது.

எனது மாநில காவல்துறையினருடன் தொடர்பு கொள்ளவும் என்று பதில் வந்துள்ளது.

நாம் வேறு ஏதாவது செய்ய முடியுமா? எனக்கு தெரிந்து நிறைய இளைஞர்கள் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று உள்ளனர். நிச்சயமாக ஓர் பெரிதாக ஒன்றை செய்ய முடியும். சுவிசில் வசிக்கின்ற யாழ் கள உறவுகளை முதலில் ஒன்று சேர்ப்போமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொல்வது சரிதான் வசம்பு அண்ணா

ஆனால் இங்கு நடக்கின்ற கவனயீர்ப்பு போராட்டங்களை பார்த்தால் எமக்கே சிரிப்பாக உள்ளது சில வேளைகளில். இளையோர் அமைப்பு செய்கின்ற இப்படியான கவனயீர்ப்பு போராட்டங்களில் ஒரு மாநிலத்தில் வசிக்கின்ற 10வீதமான மக்கள் பங்குபற்றுவதே அரிது. அதிலும் ஏராளமானோர் சிறுவர்கள். அதை பார்க்கின்ற இந்நாட்டவர்களின் மனதில் எழுகின்ற கேள்வி எதுவேன்று நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதல்ல. இந்நிலையை இங்குள்ள அமைப்புக்களும் மாற்றுவதாக இல்லையே....

அனைவருக்கும் வணக்கும்

இந்த அரசியல் வாதியளுக்கு ஈமெயில் எழுதி போட்டு ஒன்டும் நடக்கிற மாதிரி தெரியேலை. இங்க இருக்கிற எங்கட அமைப்புகளும் ஒன்டும் பண்ணுற மாதிரி தெரியேலை.

எனவே நானே தன்னிச்சையாக ஏதாவது பண்ணலாம் என்டு முடிவுக்கு வந்திட்டேன்.

நான் ஒரு 3 நாள் உண்ணாவிரதம் இருப்பதாக முடிவு பண்ணியுள்ளேன். இதுவரை இருந்தவர்கள் ஏதோ ஒரு அறைக்கு இருந்துவிட்டு எழும்பி சென்றுள்ளது உலகத்திற்கு தெரிய வாய்ப்பில்லை. நான் பொது இடத்தில் இருக்கலாம் என்று யோசிக்கின்றேன்.

எனக்கு இதற்கு எங்கு அனுமதி பெறுவது என்று தெரியவில்லை. நான் எனது மாநிலத்தில் இணையத்தளத்தின் மின்னஞ்சலிற்கு ஈமெயில் எழுதி கேட்டுள்ளேன். வேறு இலகுவான முறையில் சுவிசில் அனுமதி பெறுவது எப்படி என்று யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து எனக்கு இங்கு அறியத்தரவும்.

நன்றி.

வசம்பு சொன்ன கருத்தை கேளுங்கள்

நீங்கள் சொல்வது சரிதான் வசம்பு அண்ணா

ஆனால் இங்கு நடக்கின்ற கவனயீர்ப்பு போராட்டங்களை பார்த்தால் எமக்கே சிரிப்பாக உள்ளது சில வேளைகளில். இளையோர் அமைப்பு செய்கின்ற இப்படியான கவனயீர்ப்பு போராட்டங்களில் ஒரு மாநிலத்தில் வசிக்கின்ற 10வீதமான மக்கள் பங்குபற்றுவதே அரிது. அதிலும் ஏராளமானோர் சிறுவர்கள். அதை பார்க்கின்ற இந்நாட்டவர்களின் மனதில் எழுகின்ற கேள்வி எதுவேன்று நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதல்ல. இந்நிலையை இங்குள்ள அமைப்புக்களும் மாற்றுவதாக இல்லையே....

உண்மைதான். நான் புகைப்படங்களில் பார்த்த போது அந்த உணர்வே எனக்கும் வந்தது.

தவிரவும்

இலங்கையில் நடைபெறும் மனித அவலங்களை தமிழர்கள் எதிர்க்கிறார்கள் என்று காட்டவேண்டுமே தவிர

அந்த கவனயீர்ப்பு போராட்டங்களை புலிகள் செய்வதாகக் காட்டக் கூடாது.

ஆனால் சுவிஸில் புலி கொடியை பலர் ஏந்தி நிற்கிறார்கள்.

அது தற்போதைய நிலையில் தவிர்க்கப்பட வேண்டும்.

காரணம் அந்த கவனயீர்ப்புகள்

புலிகளால் , புலிகளை காப்பதற்காக நடைபெறுவதாக

உலகத்தின் கண்களுக்கு கொண்டு செல்லப்பட்டுவிடும்.

நமது எண்ணம் நல்லதாக இருந்தாலும் சிறு தவறுகளால்

எந்த ஒரு நன்மையையும் தராமல் ஆக்கிவிடும்.

எனவே தமிழர்களது உயிருக்கும் உடமைக்கும் வேண்டி போராட்டங்களை நடத்தும் போது

ராஜதந்திர ரீதியாக சில கட்டுப்பாடுகளும் சாணக்கியமும் நமக்குத் தேவை.

தாய் மண்

_ _ _ யாழ்க் களம் மூலம் இணைந்த உறவுகள் வேண்டுமானால் குழுக்களாக இணைந்து எமது மண்ணின் மக்களிற்காக சில வேலைத் திட்டடங்களைச் செய்யலாம். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்கள் அல்லாது வேறு விதமாக முன்னெடுப்புக்களைச் செய்தால் என்ன ??

உதாரணமாக சுவிசிலுள்ள யாழ்க்கள உறவுகள், வேண்டுமானால் அவர்களது நண்பர்களையும் சேர்த்து அந்தந்த மாநிலங்களிலுள்ள பிரதான பத்திரிகைக் காரியாலயங்களுடன் தொடர்பு கொண்டு எமக்கான ஒரு நேரத்தைப் பெற்று, அவர்களுடனான சந்திப்பொன்றை மேற்கொள்ள வேண்டும். அச்சந்திப்பின் போது எமது மக்களின் அவலங்கள் பற்றிய ஆதாரங்களை (காணொளி, காட்சிப்படங்கள் போன்றவற்றை) அவர்களிடம் காட்டி இவற்றை அவர்களது பத்திரிகைகளில் வரச் செய்ய வேண்டும். அத்தோடு அப்பத்திரிகையின் வாசகர்களை இவ்விடயம் சம்பந்தமாக சுவிஸ் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவர்களின் கருத்துக்களை பத்திரிகையின் இணையத் தளத்தில் தெரிவிக்குமாறு கேட்டு அவர்களின் கருத்துக்களை சேகரித்து, அதனை சுவிஸ் அரசிற்கு பத்திரிகை அலுவலகம் மூலமாகவே அனுப்பி வைக்கும் படி கேட்கலாம்.

இதற்கு வேண்டுமானால் முதலில் பத்திரிகைகளுடன் நெருங்கிய தொடர்புள்ள நம்மவர்கள் அல்லது கரிதாஸ் போன்ற அமைப்புக்களின் உதவியை நாடலாம். இதன் மூலம் பலரின் கவனத்தை எமது பக்கம் திருப்பலாமென்று நம்புகின்றேன். இது பற்றி மற்றவர்களும் தமது கருத்துக்களையும் தெரிவித்தால் ஆக்கபூர்வமாக இருக்கும்.

Edited by வலைஞன்
மூலக்கருத்து நீக்கப்பட்டுள்ளதால் - மேற்கோளும் நீக்கப்பட்டுள்ளது

நண்பர்களே ஏதாவது செய்வோம்... கதைத்துக்கொண்டு இருக்கிற நேரம் இல்லை இது....தாய்மண் என்னை அழைத்தீர் ஆனால் கதைக்கவல்லை.....

ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்பாக உண்ணாவிரதம் மேற்கொள்ளும் உறவுகள் தங்கள் கோரிக்கை மனுக்களை இன்று மாலை 4.00 மணிக்கு உள்ளே கொண்டுசென்று கையளிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஆதரவாக வந்திருப்போர் எண்ணிக்கை போதாமலுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அங்கு செல்லக்கூடிய யாழ் கள உறவுகள் தயவுசெய்து உங்களுடைய பங்களிப்பையும் செய்யுங்கள். குறுகிய காலமே உள்ளதால், விரைவாக, முடிந்தவரை உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் இந்தத் தகவலைத் தெரியப்படுத்துங்கள்... குறைந்தது 4000 பேராவது அங்கு வரவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

http://www.isaiminnel.com/index.php?option...2&Itemid=45

Edited by வில்லன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.