Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டுகிறேன்

உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்

என்னை சிந்திக்க வேண்டுகிறேன்

கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்

மன்னிக்க வேண்டுகிறேன்......

தித்திக்கும் இதழ் உனக்கு, என்றென்றும் அது எனக்கு

நாம் பிரிவென்னும் ஒரு சொல்லை மறந்தால் என்ன ?

கண்ணோடு உண்டானது, நெஞ்சோடு ஒன்றானது

உன் மேனி, என் தோளில், நின்றாடும் இன்னாளில்

(மன்னிக்க)

எண்ணம் என்ற ஏடெடுத்து எழுடும் பாடலிலே தலைவி

இல்லறத்தில் நல்லறத்தைத் தேடும் வாழ்க்கையிலே துணைவி

அன்பு என்ற காவியத்தின் நல்ல ஆரம்பமே வருக

முன்னுரைத்த காதலையே உந்தன் முடிவுரையாய் தருக

முதுமை வந்த பொழுதும், இளமை கொள்ளும் இதயம்

நான் வழங்க நீ வழங்க, இன்பம் நாளுக்கு நாள் வளரும்

(மன்னிக்க)

முக்கனிக்கும் சர்க்கரைக்கும் சுவையை செவ்வாய்தான் தருமோ

மெய் மறக்க கண் மயக்கும் அழகில் தெய்வம் கூட வருமோ

நீ கொடுத்த நிழலிருக்க பெண்மை ஊஞ்சலாட வருமோ

ஒருவனுக்கு தருவதற்கு என்றே என்றும் இந்த மனமோ

மலர்கள் ஒன்று சேரும், மாலையாக மாறும்

நெஞ்சினிக்க, நினைவினிக்க, கண்கள் நூறு கதை கூறும்

(மன்னிக்க)

  • Replies 1.6k
  • Views 118.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் நுணாவிலான். :rolleyes:

தேன்சிந்தும் வானமுண்டு மேகத்தினால்

நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்

கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும் கண்ணே உன் கைசேரத் தணியும்

இரவென்ன பகலென்ன தழுவு இதழோரம் புதுராகம் எழுது

  • கருத்துக்கள உறவுகள்

உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்

எந்தன் உயிர்க் காதலியே இன்னிசை தேவதையே

(உன்னிடம்)

வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்

வண்ண விழிப் பார்வையெல்லாம் தெய்வீகம்

பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில் இன்பங்கள் உருவாகக் காண்போம்

குழலோசை குயிலோசையென்று மொழிபேசு அழகே நீ இன்று

(உன்னிடம்)

தேன்சிந்தும் வானமுண்டு மேகத்தினால்

நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்

கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும் கண்ணே உன் கைசேரத் தணியும்

இரவென்ன பகலென்ன தழுவு இதழோரம் புதுராகம் எழுது

(உன்னிடம்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் நுணாவிலான் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

காற்றில் இலைகள் பறந்த பிறகும்

கிளையின் தழும்புகள் அழிவதில்லை

காயம் நூறு கண்ட பிறகும்

உன்னை உள் மனம் மறப்பதில்லை

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை

காத்திருந்தால் பெண் கனிவதில்லை

ஓரு முகம் மறய

மறு முகம் தெரிய

கண்ணாடி இதயமில்லை

கடல் கை மூடி மறைவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் சரி வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எவ்விதம் முடியும்?

இதுதான் பாதை, இதுதான் பயணம், என்பது யாருக்கும் தெரியாது

பாதையெல்லாம் மாறிவரும், பயணம் முடிந்துவிடும்

மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்

தெய்வம் ஏதுமில்லை

நடந்ததையே நினைத்திருந்தால்

அமைதி என்றுமில்லை

  • கருத்துக்கள உறவுகள்

பூமியிலே .. பூமியிலே யாருமே

தனியாக பிறப்பதில்லை

வழித்துணையும் வருகையிலே

பயணங்கள் மறப்பதில்லை

கட்டாந்தரையில் நின்றவொரு

காலடை சுவடு தெரிகிறதே

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாற்றம் ஒரு மாற்றம்

இது இதயத்தில் இருக்கிற தடுமாற்றம்

நடை மாற்றம் உடை மாற்றம்

இந்த நெருப்புக்குள் எப்படி நீரோட்டம்

நடந்து போகும் பாதையில்

இரண்டு பக்கம் பூமரம்

மழையும் வெயிலும் கலந்த பின் வானவில்லாய் மாறிடும்

உலகமே புதிதாய் தோன்றும் ஒரு மாற்றம் ஒரு மாற்றம்

இது இதயத்தில் இருக்கிற தடுமாற்றம்

நடை மாற்றம் உடை மாற்றம்

நேற்று வரை ... நேற்று வரை வானத்தை நீ

நிமிர்ந்து பார்க்க நேரமில்லை

கண்கள் மூடி பார்த்தாலும் கனவுகள் கண்டதில்லை

முற்றுப்புள்ளி பக்கத்திலே முகவரி ஒன்று வருகிறதே

மூச்சு காற்று மொத்தத்திலே

அர்த்தம் இங்கு புரிகிறதே.. புரிகிறதே

ஓஓ..ஓஓ..ஓஓ...

ஒரு மாற்றம் ஒரு மாற்றம்

இது இதயத்தில் இருக்கிற தடுமாற்றம்

பூமியிலே .. பூமியிலே யாருமே

தனியாக பிறப்பதில்லை

வழித்துணையும் வருகையிலே

பயணங்கள் மறப்பதில்லை

கட்டாந்தரையில் நின்றவொரு

காலடை சுவடு தெரிகிறதே

வெட்ட வெளியில் திரிந்த பின்னே

வீட்டின் அருமை புரிகிறதே... புரிகிறதே

ஓஓ..ஓஓ..ஓஓ...

ஒரு மாற்றம் ஒரு மாற்றம்

இது இதயத்தில் இருக்கிற தடுமாற்றம்

நடை மாற்றம் உடை மாற்றம்

இந்த நெருப்புக்குள் எப்படி நீரோட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்

தீபத்தின் பெருமையன்றோ - அந்த

தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்

தீபமும் பாவமன்றோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கம்பன் ஏமாந்தான் - இளம்

கன்னியரை ஒரு மலர் என்றானே

கற்பனை செய்தானே

கம்பன் ஏமாந்தான்

அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது

பாய்வதினால் தானோ

அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது

கொதிப்பதனால் தானோ

தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்

தீபத்தின் பெருமையன்றோ - அந்த

தீபத்தினால் ஒரு திருக்குறள் எரிந்தால்

தீபமும் பாவமன்றோ

வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு

வரிசையை நான் கண்டேன் - அந்த

வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட

நானும் ஏமந்தேன்

ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்

அடுப்படி வரைதானே - ஒரு

ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்

அடங்குதல் முறைதானே

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பாடல் இன்னிசை. வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மனதில் நல்ல மனிதன் நீ என்றால்

மாடிவீடும் உள்ளே அழைக்குமே...

மானத்தோடு இருக்க நினைப்பதால்

மதித்திடாது வெளியில் துரத்துமே...

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்: பணம் மட்டும்... வாழ்கையா....

இந்த பாழாப்போன... மனுஷனுக்கு....

(இசை...)

ஆண்: பணம் மட்டும் வாழ்கையா

இந்த பாழாப்போன மனுஷனுக்கு

பணம் என்றால் கதவெல்லாம் தெறக்குது...

கனவிலே மிதக்குது... பறக்குது...

மனசுதான் தெருநாயா எங்கோ அலையுது... (பணம்...)

(இசை...)

ஆண்: மிருகம் வந்து மனுஷ மனசிலே

உள்ளே நுழைஞ்சு ஓட்டி ஆட்டுது

உருட்டும் பொரட்டும் கூடச் சேரவே

குருட்டு உலகில் குடும்பம் நடத்துது

விலை கொடுத்துப் பொருளை வாங்கி

வீட்டுக்குள்ளே பூட்டலாம்

வாழ்க்கைக்கென்ன விலை கொடுப்ப

நீயும் சொல்லு பாக்கலாம்

பாசமெல்லாம் மனுஷனுக்கு பணத்து மேல போகுது

பாழடைஞ்ச அரண்மனையா பாவிநெஞ்சு மாறுது

இழந்ததும் புரியலே வழி எதும் தெரியலியே (பணம்...)

(இசை...)

ஆண்: மனதில் நல்ல மனிதன் நீ என்றால்

மாடிவீடும் உள்ளே அழைக்குமே...

மானத்தோடு இருக்க நினைப்பதால்

மதித்திடாது வெளியில் துரத்துமே...

உலகம் ரொம்ப விரிஞ்சிருக்கு உனக்கு இடம் இல்லையா

உன் இடத்தை எவன் எடுப்பான் உறுதி உனக்கு இல்லையா

ஏர்முனையால் காயம்பட்டா எந்த நிலம் அழுகுது

உழுவதெல்லாம் விளைச்சலுக்கு உனக்கு நல்ல படிப்பிது

உழவுதான் நடந்தது விளைச்சல்தான் இருக்குது (பணம்...)

  • கருத்துக்கள உறவுகள்

விரல் தீண்டும் போது ஒரு மயக்கம்

மனம் தேவ லோகத்தில் மிதக்கும்

இது போகப் போக இன்னும் இனிக்கும்

தெளியாத போதை இருக்கும்

பூங்கோதை கண்ணன் மடியில்

அவன் மங்கை அன்பின் பிடியில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்குப் பிடித்த ரோஜாப் பூவே

எடுத்துச் செல்லலாமா

உனக்கு ஏக்கம் கண்ணா

இசையைக் கேட்கலாமா

நல்ல வேணு கானம் உந்தன் மொழியோ

இல்லை வீணை மீட்டுகின்ற இசையோ

எந்தன் காதல் மன்னன் என்ன கவியோ

என்னைப் பார்த்தால் கவிதை வருமோ

நல்ல வேணு கானம் உந்தன் மொழியோ

இல்லை வீணை மீட்டுகின்ற இசையோ

எந்தன் காதல் மன்னன் என்ன கவியோ

என்னைப் பார்த்தால் கவிதை வருமோ

இது தானா காதல் அமுதம்

சுசீலா: உந்தன் நெஞ்cஇல் மலரும் குமுதம்

இது தானா காதல் அமுதம்

சுசீலா: உந்தன் நெஞ்cஇல் மலரும் குமுதம்

விரல் தீண்டும் போது ஒரு மயக்கம்

மனம் தேவ லோகத்தில் மிதக்கும்

இது போகப் போக இன்னும் இனிக்கும்

தெளியாத போதை இருக்கும்

பூங்கோதை கண்ணன் மடியில்

அவன் மங்கை அன்பின் பிடியில்

ஒரு நூலில் ஆடுகின்ற இடையே

உன்னை வாங்க வேண்டும் என்ன விலையே

கையில் கொடுக்க வேண்டும் நீ உன்னையே

உடல் யாவும் உனது வசமே

நெடு நாளாய் உனது அடிமை

உந்தன் சொந்தம் தங்கப் பதுமை

நெடு நாளாய் உனது அடிமை

உந்தன் சொந்தம் தங்கப் பதுமை

  • கருத்துக்கள உறவுகள்

இன்னிசை, பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

காவல் செய்யும் கோட்டை காணாயோ

கண்களின் சீதனம் தானோ

கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே

காரணமாதனும் தேனோ

  • கருத்துக்கள உறவுகள்

அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா

சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா

ஆடுங்கள் பாடுங்கள் தாளங்கள் - இனி

ஆனந்தம் ஆனந்தன் வாருங்கள்

(அல்லித் தந்த)

சேவை செய்த காற்றே பேசாயோ

ஷேமங்கள் லாபங்கள் தானோ

பள்ளி சென்ற காலப் பாதைகளே

பாலங்கள் மாடங்கள் ஆஹா

புரண்டு ஓடும் நதிமகள்

இரண்டு கரையும் கவிதைகள்

கனித்த காலம் வளைத்த நினைவுகள்

இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்

(அள்ளித் தந்த)

காவல் செய்யும் கோட்டை காணாயோ

கண்களின் சீதனம் தானோ

கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே

காரணமாதனும் தேனோ

விரியும் பூக்கள் பாளங்கள்

விசிறியாடும் நாணல்கள்

மரத்தின் வேரும் மகிழ்ச்சிப் படுக்கையே

பழைய சோகம் இனியும் இல்லை

(அள்ளித் தந்த)

  • கருத்துக்கள உறவுகள்

மாலை தொடுத்து மலர் கொண்டு - நல்ல

மஞ்சள் குங்குமச் சிமிழ் கொண்டு

ஏழை எழுந்தேன் எனக்கென்று - அந்த

இறைவன் முடித்தான் உனக்கென்று

  • கருத்துக்கள உறவுகள்

சூடிக் கொடுத்தவள் நான் தோழி

சூட்டிக் கொண்டவளே நீ வாழி

(சூடி)

பாடிக் கொடுத்தவள் நான் தோழி

பாட்டை முடித்தவள் நீ வாழி

(சூடி)

நிலத்தைப் பார்த்தா பயிர் வைத்தேன் - அதன்

நிறத்தைப் பார்த்தா உயிர் வைத்தேன்

முகத்தைப் பார்த்தா மனம் வைத்தேன் - வரும்

முடிவைப் பார்த்தா கதை சொன்னேன்

முடிவைப் பார்த்தா கதை சொன்னேன்

(சூடி)

மாலை தொடுத்து மலர் கொண்டு - நல்ல

மஞ்சள் குங்குமச் சிமிழ் கொண்டு

ஏழை எழுந்தேன் எனக்கென்று - அந்த

இறைவன் முடித்தான் உனக்கென்று

இறைவன் முடித்தான் உனக்கென்று

(சூடி)

கடலும் வானும் உள்ளவரை -தென்றல்

காற்று நடந்து செல்லும் வரை

வளர்க உந்தன் பள்ளியறை - நீ

வாழ வைப்பாய் அந்த நல்லவரை - நீ

வாழ வைப்பாய் அந்த நல்லவரை

  • தொடங்கியவர்

கறுப்பி, நுணாவிலான்...

எப்படி உடனே எல்லா பாடல்களையும் கண்டுபிடிச்சு

முழுதாக எழுதிறீங்கள்?

:D

ஏதாவது குறுக்கு வழி வைச்சிருக்கிறீங்களா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி, நுணாவிலான்...

எப்படி உடனே எல்லா பாடல்களையும் கண்டுபிடிச்சு

முழுதாக எழுதிறீங்கள்?

:D

ஏதாவது குறுக்கு வழி வைச்சிருக்கிறீங்களா? :rolleyes:

அதற்கெல்லாம் ஒரு மந்திரம் இருக்கு வசி சுதா :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.