Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் முதல் முறையாக வன்னி மக்களுக்கு ஆதரவு தெரிவித்து அடையாள உண்ணாநோன்பு.

Featured Replies

உணர்வுள்ள சுதந்திர மாணவர் முன்னணி பல்கலைக்கழக மாணவ மணிகள் இணைந்து வன்னியில் துன்புறும் எமதுறவுகளுக்காக இன்று கொழும்பில் அடையாள உண்ணாநோன்பில் ஈடுபட்டிருந்தனர். இந் நிகழ்வுக்கு தமது கைச் செலவிலே யாருடைய உதவியும் இன்றி ஆடம்பர விளம்பரங்கள் இன்றி கொழும்பு இந்துக் கல்லூரிக்கும், இராமநாதன் மகளீர் கல்லூரிக்கும் இடைப்பட்ட டூப்ளிகேசன் வீதி யோரத்தில் மேடையமைத்து தமது உண்ணா நோன்பை ஆரம்பிப்பித்தனர்.

காலை 8:00 மணியளவில் இந் நிகழ்வு ஆரம்பமாகவிருந்தாலும் மேடைக்கருகே வீதிக்கு மறுபுறத்தில் உள்ள இராமநாதன் மகளீர் கல்லூரி அதிபர், சில மாணவர்கள் ஒன்றிணைந்து கல்லூரியின் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முயல்கின்றனர்; என பொலிஸாருக்கு அறிவிக்க அங்கு பிரசன்னமான காவல் துறை இந் நிகழ்வை தடுப்பதற்கு முயன்றனர்.

எனினும் ஒரு சிலரின் தலையீடுகளால் இந்த நிகழ்வு சிறிது நேரம் கழித்தே ஆரம்பமானது.

எந்த வித அரசியல் பின்புலமோ ஆதரவோ இன்றி கொழும்பின் தலைநகரிலே முதன் முதலாக தமது உறவுகளுக்காக குரல் கொடுக்க சுதந்திர மாணவர் முன்னனி இவ்வடையாள உண்ணாவிரத்தினை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சுதந்திர மாணவர் முன்னனி அமைப்பின் தலைவர் விஜயகாந்த், மற்றும் அமைப்பாளர்கள் பிரணவன், முஜீபூர் ஆகியோர் முன்னின்று இவ் அடையாள உண்ணாநோன்பை நடத்துக்கின்றனர்.

காலை 11:00 மணியளவில் வெளிநாட்டு ஊடக அமைப்பு இந்நிகழ்வைப் பதிவாக்கிச் சென்றது.

இவ் அடையாள உண்ணாநோன்பு மாலை 5:00 மணிக்கு முடிவடைந்த பின் பொதுமக்கள் கையோப்பமிட்ட மகஜரை ஐ.நா சபை செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகளிடமும் மற்றும் அமைச்சர் டக்ளசிடமும் கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ் அடையாள உண்ணாநோன்பின் சில காட்சிகள் கீழே:

http://img113.imageshack.us/my.php?image=dcp1314wl1.jpg

வெளிநாட்டு ஊடகத்தின் பதிவு

http://img114.imageshack.us/my.php?image=dcp1315nt1.jpg

அடையாள உண்ணாநோன்பில் பங்குபற்றிய ஒரு பகுதியினர்

http://img27.imageshack.us/my.php?image=dcp1316ml6.jpg

காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பதாதைகள்.

http://img244.imageshack.us/my.php?image=dcp1322bn4.jpg

முகப்புப்பதாதை

http://img244.imageshack.us/my.php?image=dcp1323er1.jpg

சுதந்திர மாணவர் முன்னனி அமைப்பளர் பிரணவன்

http://img7.imageshack.us/my.php?image=dcp1324jo5.jpg

முன்னனி அமைப்பின் தலைவர் விஜயகாந், முஜீபூருடன் மற்றைய அங்கத்தினர்

http://img12.imageshack.us/my.php?image=dcp1330us3.jpg

விளம்பரம்

http://img88.imageshack.us/my.php?image=dcp1328gh0.jpg

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுள்ள சுதந்திர மாணவர் முன்னணி பல்கலைக்கழக மாணவ மணிகள் இணைந்து வன்னியில் துன்புறும் எமதுறவுகளுக்காக இன்று கொழும்பில் அடையாள உண்ணாநோன்பில் ஈடுபட்டிருந்தனர். இந் நிகழ்வுக்கு தமது கைச் செலவிலே யாருடைய உதவியும் இன்றி ஆடம்பர விளம்பரங்கள் இன்றி கொழும்பு இந்துக் கல்லூரிக்கும், இராமநாதன் மகளீர் கல்லூரிக்கும் இடைப்பட்ட டூப்ளிகேசன் வீதி யோரத்தில் மேடையமைத்து தமது உண்ணா நோன்பை ஆரம்பிப்பித்தனர்.

காலை 8:00 மணியளவில் இந் நிகழ்வு ஆரம்பமாகவிருந்தாலும் மேடைக்கருகே வீதிக்கு மறுபுறத்தில் உள்ள இராமநாதன் மகளீர் கல்லூரி அதிபர், சில மாணவர்கள் ஒன்றிணைந்து கல்லூரியின் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முயல்கின்றனர்; என பொலிஸாருக்கு அறிவிக்க அங்கு பிரசன்னமான காவல் துறை இந் நிகழ்வை தடுப்பதற்கு முயன்றனர்.

எனினும் ஒரு சிலரின் தலையீடுகளால் இந்த நிகழ்வு சிறிது நேரம் கழித்தே ஆரம்பமானது.

எந்த வித அரசியல் பின்புலமோ ஆதரவோ இன்றி கொழும்பின் தலைநகரிலே முதன் முதலாக தமது உறவுகளுக்காக குரல் கொடுக்க சுதந்திர மாணவர் முன்னனி இவ்வடையாள உண்ணாவிரத்தினை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சுதந்திர மாணவர் முன்னனி அமைப்பின் தலைவர் விஜயகாந்த், மற்றும் அமைப்பாளர்கள் பிரணவன், முஜீபூர் ஆகியோர் முன்னின்று இவ் அடையாள உண்ணாநோன்பை நடத்துக்கின்றனர்.

காலை 11:00 மணியளவில் வெளிநாட்டு ஊடக அமைப்பு இந்நிகழ்வைப் பதிவாக்கிச் சென்றது.

இவ் அடையாள உண்ணாநோன்பு மாலை 5:00 மணிக்கு முடிவடைந்த பின் பொதுமக்கள் கையோப்பமிட்ட மகஜரை ஐ.நா சபை செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகளிடமும் மற்றும் அமைச்சர் டக்ளசிடமும் கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுதந்திர உணர்வென்பது, எவரும் சொல்லி வருவதல்ல என்பதையும், சுதந்திர உணர்வுகொண்டோரை எந்த சக்திகளாலும் அழித்துவிட முடியாதென்பதையும் தமிழினம் தனது அனைத்து வழிகள் மூலமும் சொல்லி வருகின்றபோதும், உலகம் புரிந்து கொள்வதாக இல்லை என்பதே வருத்தமானது. எமது நோயை நாமே நீக்க உழைப்பது எம் கடன் என்றெழுந்தவரே வாழ்த்துகிறோம்.தொடர்ந்து வெளிநாட்டுத் தூதுவர்களையும் சந்தியுங்கள். நீதியை கேட்பது சிங்களத்து ஆட்சியாளருக்குப் பிடிக்காத விடயமென்று அறிந்தும் துணிவுடைத்தாய் தமிழர் துயரகற்ற விளைந்தோரே நீவிர் வெல்க.

  • கருத்துக்கள உறவுகள்

ஆபத்தான இடத்தில் உண்ணாநோன்பு இருக்கும் கொழும்பு தமிழரின் உணர்வுக்கு தலை வணங்குகின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

முதல் படி... இலங்கையில் தொடங்கப்பட்டுள்ளது...! அரசின் அராஜகபோக்கின் காரணமாக இப்படியான போராட்டங்கள் இடம்பெறவில்லை....மக்களுக்கான போராட்டம்..! தலைவணங்குகிறேன்! மகஜர் தாடிமாமாக்கு வழங்குவதான் யோசிக்கவேண்டிய விடயம்!

  • தொடங்கியவர்

உண்ணா நோன்பை ஏற்பாடு செய்தவர்களிடம் விசாரித்த போது டக்கி ஐயா தான் இப்போது வடக்கிற்கு பொறுப்பாக உள்ள ஒரே அமைச்சர் என்ற முறையில் அவரிடம் மகஜர் கையளிக்கப்படுகின்றது என தெரிவித்தனர்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

கள்வரை , பொலிஸ்காரராக நியமித்தால் , ஊரில் களவு போகாதென்று சொல்வார்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.