Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசிய ஆதரவாளரும் இயக்குணருமான சீமான் மீது பிணையில் வரமுடியாதபடி போலிஸ் வழக்கு பதிவு

Featured Replies

புதுச்சேரி: இயக்குநர் சீமான் மீது புதுச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இலங்கைத் தமிழர்களை இனப்படுகொலையிலிருந்து காக்க வேண்டும்இ போரை நிறுத்த வேண்டும் என்று கோரி புதுச்சேரியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இவர்களை கடந்த 12ம் தேதி இயக்குநர் சீமான் சந்தித்தார். மாணவர்களிடையே அவர் பேசுகையில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

இதையடுத்து சீமான் மீது புதுச்சேரி போலீஸார்இ சட்ட விரோத நடவடிக்கை தடை சட்டம் 13(1)(பி)இ பிரச்சினையை உருவாக்கும் விதமாக பேசுதல் (1பி)இ இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுதல் (124) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

3 பிரிவுகளுமே ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். விரைவில் சீமானைக் கைது செய்யவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

http://thatstamil.oneindia.in/news/2009/02...an.html#cmntTop

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மறுபடியும் சீமான் கைது ?

ஈழத் தமிழர் பிரச்சனைக்கு ஆதரவாக பேசிவரும் திரைப்பட இயக்குனர் சீமான், தன் பேச்சுக்களில் இந்திய இறையாண்மையை விமர்சிக்கும் வகையில் பேசியதாக ஏலவே இரு தடவைகள் தமிழக காவற்துறையால் கைது செய்யப்பட்டு சிறைவைக்ககப்பட்டவர். வழக்குத் தாக்கல் பதிவு செய்யப்பட்டபின் , ஜாமீனில் வெளிவந்திருக்கும் சீமானை மறுபடியும் கைது செய்ய முயற்சிகள் நடப்பதாகத் தெரிய வருகிறது. இம்முறை இயக்குனர் சீமான் கைது செய்யப்படும் போது, ஜாமீனில் வெளியே வர முடியாதபடி வழக்குப் பதிவு செய்யப்படலாமெனவும் பேசப்படுகிறது.

சீமானை இம்முறை கைது செய்ய முனைவது புதுவை காவற்துறை. இலங்கையில் போரை நிறுத்தக்கோரியும், இலங்கை தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் புதுவையில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். இநத உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை கடந்த 12 ந் திகதி சந்தித்த இயக்குனர் சீமான் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அவரது பேச்சினை புதுவை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர்.

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட அந்த பேச்சின் அடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்ட விரோத நடவடிக்கை தடை சட்டம் 13(1)(பி), பிரச்சினையை உருவாக்கும் விதமாக பேசுதல் 1பி, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுதல் 124 ஆகிய 3பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவுகள் அனைத்தும் ஜாமீனில் வெளிவர முடியாதவை என செய்திகள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால், சீமானை கைது செய்வதில் புதுச்சேரி அரசு உறுதியாக இருக்கமென்றும், இதற்காகத் தமிழக போலீசாரின் உதவியை புதுவை போலீசார்நாடுவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசை கண்டித்தும் சென்னையில் எம்ஜிஆர் நகரில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சீமான் பேசுவார் என அறிக்கப்பட்டிருக்கிறது. இக் கூட்டத்தில் பேசுவதற்கு முன்னதாகவே சீமான் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகளுக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.