Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவையும், பிரித்தானியாவையும் சாதகமாகக் கையாண்ட இலங்கை

Featured Replies

இலங்கையில் தொடரும் இனப்பிரச்சினையை சாதகமாகப் பயன்படுத்த வெளிநாடுகள் எடுக்கும் முயற்சிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தமக்குச் சாதகமாகக் கையாண்டிருப்பதாக அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இலங்கையின் இனப்பிரச்சினையைத் தமது சொந்த அரசியலுக்குச் சாதகமாகப் பயன்படுத்த இந்தியாவும், பிரித்தானியாவும் எடுத்த முயற்சிகளை இலங்கை அரசாங்கம் தமக்குச் சாதகமாகக் கையாண்டிருப்பதாக அரசியல் ஆய்வாளரான உப்புல் ஜோசப் பெர்னான்டோ குறிப்பிடுகிறார்.

பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவுண், இலங்கையின் மனிதநேய நிலைமைகளைக் கண்காணித்து, இறுதி சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர் டெஸ் பிரவுணை இலங்கைக்கான விசேட பிரதிநிதியாக நியமித்தார். ஆனால், கோர்டன் பிரவுணின் இந்த நியமனத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இலங்கைக்கு எதிராக மெக்சிக்கோ கொண்டுவரவிருந்த தீர்மானத்தை பிரித்தானியாவும், ரஷ்யாவும் நிராகரித்திருந்தன. இலங்கை அரசாங்கப் படைகள் பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே மோதல்களை முன்னெடுத்திருப்பதாக பாதுகாப்புச் சபையிடம் சுட்டிக்காட்டிய பிரித்தானியா, சூடானில் முன்னெடுக்கப்படும் மோதல்களையும், இலங்கையில் முன்னெடுக்கப்படும் மோதல்களையும் ஒன்றாக நோக்க முடியாதெனக் கூறியது. இது இலங்கையின் இறைமையைப் பாதிக்கும் செயலெனவும் சுட்டிக்காட்டியிருந்தது.

ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடைபெற்று ஒரு வாரகாலத்துக்குள் பிரித்தானியாப் பிரதமர், இலங்கைக்கான விசேட பிரதிநிதியை நியமித்தார். எனினும், பிரித்தானியப் பிரதமரின் இந்த நியமனம் இலங்கையின் இறைமையை மீறும் ஒன்றெனக் கூறி கொழும்பு நிராகரித்தது.

ஆண்டாண்டு காலமாகப் பதவிக்கு வந்த பிரித்தானியப் பிரதமர்கள் பல்வேறு நாடுகளுக்கு விசேட பிரதிநிதிகளை நியமித்தபோதும், ஒரு நாடு பிரித்தானியாவின் நியமனத்தை நிராகரித்தது இதுவே முதல்தடவையெனப் பிரித்தானிய ஊடகங்கள் கூறுகின்றன. இலங்கையின் இந்தச் செயற்பாடானது கோர்டன் பிரவுணுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் குறிப்பிடும் பிரித்தானிய ஊடகங்கள், 24 மணித்தியாலங்கள் மாத்திரம் பதவியிலிருந்த விசேட பிரதிநிதி எனக் கிண்டல் செய்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையில் பேச்சுவார்த்தைக்கு எதிராகவும், மோதலுக்கு ஆதரவாகவும் பேசிய பிரித்தானியா, தனது நாட்டிலுள்ள புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காகத் தம்மை சமாதான விரும்பிகளாகக் காண்பிக்க முயற்சிப்பதாக உபுல் யோசவ் பெர்னான்டோ குறிப்பிடுகிறார்.

பிரித்தானியாவைப் போன்றதொரு நிலையே அயல் நாடான இந்தியாவுக்கும் ஏற்பட்டதாகக் குறிப்பிடும் அவர், தமிழகக் கட்சிகளின் வற்புறுத்தலுக்காக இனப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வொன்றை முன்வைக்க வேண்டுமென இலங்கை அரசாங்கத்திடம் இந்திய காங்கிரஸ் அரசு கோரிக்கை விடுத்ததாகவும் சுட்டிக்காட்டினார். ஆனாலும், மோதல்கள் முடிவடைந்த பின்னரே அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என இலங்கை அரசாங்கம், இந்தியாவிடம் திட்டவட்டமாகக் கூறியதால் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் சூழ்நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டதாக அவர் குறிப்பிடுகிறார்.

விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்கு இந்திய காங்கிரஸ் அரசாங்கத்தையும், பிரித்தானிய அரசாங்கத்தையும் பயன்படுத்திக் கொண்ட இலங்கை, அரசியல் தீர்வை முன்வைப்பதே தமது நிலைப்பாடு என்பதையும் தெளிவுபடுத்தியிருப்பதாக உபுல் ஜோசப் பெர்னான்டோ கூறுகிறார்.

வெளிநாடுகள் போருக்கு உதவிசெய்தால் போதும், அதற்கும் அப்பால் செல்வது அநாவசியம் என்பதை இலங்கை மறைமுகமாகத் தெரிவித்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.