Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வான் புலிகளின் கரும்புலித் தாக்குதல்

Featured Replies

வான் புலிகளின் கரும்புலித் தாக்குதல்

விதுரன்

கொழும்பு நகரில் வான்புலிகள் மீண்டு மொரு முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். வழமையாக நடத்தும் வான்தாக்குதலைப் போலல்லாது இம்முறை வான் புலிகள் கரும்புலித் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலை தாங்கள் முறியடித்து வான்புலிகளது இரு விமானங்களையும் வெற்றிகரமாக அழித்து விட்டதாக படைத்தரப்பு கூறினாலும், கரும்புலித் தாக்குதலை நடத்த வந்த வான்புலிகளின் விமானங்கள் அழியுமென்பது நிச்சயம். அதேநேரம், புலிகள் வான் கரும்புலித் தாக்குதலை ஆரம்பித்துவிட்டார்களென்ற சேதி அரசையும் படைத் தரப்பையும் பேரதிர்ச்சியடையச் செதுள்ளது.

வன்னியில் விடுதலைப் புலிகள் வசமிருக் கும் கடைசி நகரான புதுக்குடியிருப்பும் அடுத்த ஓரிரு நாட்களுக்குள் தங்கள் வசமாகி விடுமென படையினர் கூறிவரும் நிலையிலேயே அந்தப் பகுதியிலிருந்து வந்த புலிகளின் விமானங்கள் கரும்புலித் தாக்குதலை நடத்தியுள்ளன. புலிகள் மிகக் குறுகியதொரு பகுதிக்குள்ளேயே முடக்கப்பட்டிருப்பதாக படையினர் கூறுகின்றனர். புதுக்குடியிருப்பே புலிகள் வசமிருக்கும் கடைசி நகரெனவும் புதுக்குடியிருப்பும் போவிட்டால் புலிகளே இல்லையெனவும் படையினர் கூறிவந்த போதே அங்கிருந்து வந்த வான்புலிகள் கொழும்பு நகரில் கரும்புலித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

வன்னியில் தற்போது புதுக்குடியிருப்பை அண்டிய கடலோரப் பகுதிக்குள் சுமார் 75 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள்ளேயே புலிகள் இருப்பதாக படையினர் கூறுகின்றனர். புலிகள் நிலைகொண்டுள்ள பகுதியை படையினர் சகல முனைகளிலும் சுற்றி வளைத்துள்ளனர். மூன்று முனைகளில் எட்டுப் படையணிகள் நிறுத்தப்பட்டு தினமும் புலிகளின் அனைத்துப் பகுதிகளிலும் இடைவிடாது ஆட்லறி ஷெல், பல்குழல் ரொக்கட்டுகள், மோட்டார் குண்டுகள், பீரங்கித் தாக்குதலையும் அவ்வப்போது விமானத் தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். இதைவிட முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையினர் பாரிய பாதுகாப்பு வேலியை அமைத்தது போல் 25 இற்கும் மேற்பட்ட அதிவேக டோரா பீரங்கிப் படகுகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தினமும் வன்னியில் விழும் ஷெல் மற்றும் பீரங்கித் தாக்குதலில் சராசரியாக 40 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துவரும் நிலையில் பதுங்குக் குழிகளுக்கு வெளியே எவர் தலை நீட்டினாலும் தலை தப்புவதற்கான சாத்தியமே இல்லையென்றதொரு நிலையே அங்குள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் புலிக ளின் இரு விமானங்கள் எங்கிருந்து, எப்படி வந்தன என்ற கேள்வியை சாதாரண மக்களும் எழுப்புகின்றனர். புலிகள் வசமிருந்த அனைத்து (ஏழு) விமான ஓடுபாதைகளையும் தாங்கள் கைப்பற்றிவிட்டதால் வான் புலிகளின் செயற்பாடு முழுமையாக முடக்கப்பட்டுவிட்டதாக படையினர் கூறி ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் புலிகளின் விமானங்கள் வன்னிக்குள்ளிருந்து கொழும்பு நகருக்கு வந்தது நாட்டு மக்கள் அனைவரையும் திகைப்படையச் செதுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு புலிகளின் இவ்விரு விமானங்களும் கொழும்பு நகரை சமீபித்த பின்புதான் இரு விமானங்களும் கொழும்பை நோக்கி வருவதை படையினர் அறிந்துள்ளனர். அதுவரை, புலிகளின் விமானங்கள் கொழும்பு நோக்கி வருவதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

இலங்கை வரைபடத்தில் தற்போது புலிகள் வசமிருக்கும் பகுதி ஒரு சிறு துளி போன்றே காண்பிக்கப்படுகிறது. அந்தச் சிறிய பகுதியையும் கைப்பற்றிவிடுவதற்காக ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட படையினர் தொடர்ந்தும் பாரிய படை நடவடிக்கையில் ஈடுபட்டுமுள்ளனர். புலிகளின் பகுதியில் சிறு சத்தம் கேட்டாலும் அதனை உணர்ந்து சத்தம் வந்த அந்த இடத்தை நோக்கி அடுத்த நிமிடமே ஷெல்கள், பல்குழல் ரொக்கட்டுகள், பீரங்கித் தாக்குதலை நடத்தக்கூடிய வல்லமையுடன் படையினர் இருப்பதாக அரசு கூறுகிறது. புலிகள் வசமிருந்த அனைத்து விமான ஓடுபாதைகளையும் தாங்கள் கைப்பற்றிவிட்டதாலும் புலிகளை மிகச் சிறியதொரு நிலப்பிரதேசத்திற்குள் முடக்கிவிட்டதாலும் வான்புலிகளின் அனைத்து நடவடிக்கைகளும் முற்று முழுதாக செயலிழக்கச் செயப்பட்டு விட்டதாக படைத்தரப்பு கூறிவந்தது. அத்துடன் புதுக்குடியிருப்பு காட்டுப் பகுதியிலிருந்து ஒரு காகம் பறந்தால் கூட அதனைக் கண்டுபிடிக்கும் ஆற்றலுடன் படையினர் மூன்று முனைகளிலும் புலிகளைச் சுற்றிவளைத்துள்ளதாகவும் முல்லைத்தீவிலிருந்து சுமார் 12 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சாலையிலும் பாரிய கடற்படை முகாம் இருப்பதால் கடல்வழியாகவும் புலிகளின் அனைத்து நடவடிக்கைகளும் மிக உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் படைத்தரப்பு கூறிவந்தது.

இப்படியிருக்கையில் வான்புலிகளால் அங்கிருந்து புறப்பட்டு எப்படி கொழும்பு வரமுடிந்த என்ற கேள்வியை அனைவரும் எழுப்புகின்றனர். வவுனியாவிலும் மன்னாரிலும் இந்தியா வழங்கிய ராடர்கள் 24 மணிநேரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. முல்லைத்தீவு கடலிலும் தரித்து நிற்கும் கடற்படைக் கப்பல்களிலும் சக்திவாந்த ராடர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் புதுக்குடியிருப்புப் பகுதியிலிருந்து புலிகளின் விமானங்கள் புறப்பட்டால் அடுத்த கணமே அவற்றை கண்டுபிடித்துவிடக்கூடிய ஆற்றலுடன் வன்னியிலும் முல்லைத்தீவு கடற்பரப்பிலும் படையினர் தயார் நிலையிலுள்ளனர். அத்துடன் புலிகளின் விமா னங்கள் முல்லைத்தீவு கடல்வழியாக பயணத்தை மேற்கொள்ள முடியாது. கடல் கண்காணிப்பு தீவிரமாயிருப்பதுடன் திறந்த வெளியென்பதால் கடற்படை பீரங்கிப் படகுகள் அவற்றைத் தாக்கி அழித்துவிடக் கூடிய வாப்புமுள்ளது. தங்களது விமானங் கள் புறப்பட்ட இடத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.