Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் ஆட்சியில் ஆஸ்கார் – கலைஞர் கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்னை: 24 பிப்ரவரி 2009

ஏ.ஆர். ரகுமான் நேற்று ஆஸ்கார் விருது வாங்கியது அறிந்ததே. அவர் இரண்டு ஆஸ்கார் வாங்கியதும் அறிந்ததே. ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக அவர் ஆஸ்கார் வாங்கினார் என்பதும் அறிந்ததே. இரண்டு ஆஸ்கார் வாங்கிய முதல் இந்தியர் என்பதும் அறிந்ததே. அவர் ஒரு தமிழர் என்பதும் அறிந்ததே. அதற்கு நமது முதல்வர் கலைஞர் பொருணாநிதி அவர்கள் இப்படி ஒரு கடிதம் எழுதுவார் என்பது மட்டும் அறியாததே. மருத்துவமனையில் டாக்டர்கள் சொல்லக் கேட்காமல் அதிகாலை ஐந்து மணிக்கு அவரச அவரசமாக உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதம் பின்வருமாறு:

“சில ஆண்டுகளுக்கு முன்… அம்மையாரின் அராஜக ஆட்சி நடந்து கொண்டிருந்த காலமது. கடற்கரையில் அமர்ந்தவாறு அம்மையாரின் அராஜக அரசியலை எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் எங்கிருந்தோ ஒரு மகிழ்வுந்தில் இருந்து வந்த ஒரு பாடல் என்னையும், பேராசியரையும் ஊக்கமளித்து, உற்சாகமூட்டியது. தம்பி இரசினிகாந்து நடித்த திரைப்படம் ஒன்றில் இடம்பெற்ற அந்தப் பாடலை இப்போது நினைத்தாலும் உடம்பெல்லாம் புல்லரிக்கும். மருத்துவமனையில் மருத்துவர்கள் உடல் புல்லரிப்பது உங்களுக்கு நல்லதல்ல என்று சொல்லிவிட்டதால் அந்தப் பாடலை நினைக்க மாட்டேன் என்று எள்ளி நகையாடுகிறது ஒரு கூட்டம். அந்தக் கூட்டத்திற்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். என் தமிழனின் பாடலை நினைத்து புல்லரித்தாலும், பாடலைப் பாடி பல் வலித்தாலும் என் தமிழனுக்காக அதை பொறுத்துக் கொள்வேன் என்பதை இந்த நாடறியும்.

அந்தக் கடற்கரை நிகழ்வில் அந்தப் பாடல் எந்தப் படமென்று பேராசிரியரிடம் விசாரித்தேன். அவர் ரத்தக் கண்ணீருக்குப் பிறகு தமிழ்ப்படங்கள் பார்க்கவில்லையாதலால் வேறு வழியின்றி மதுரை தந்த சொத்து, மக்களின் முத்து பழகிரியிடம் அந்தப் பாடலின் இசையமைப்பாளர் யாரென்று விசாரிக்கக் கூறினேன். ஏழு ஆட்டோக்களில் ஆட்களை சென்னை அனுப்பி, மூன்று பஸ்களைக் கொளுத்தி, அந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் என்று கண்டறிந்து சொன்னார். அப்போதே பழகிரியிடம் சொன்னேன். ‘இந்தத் தம்பி தமிழகத்துக்கு ஒரு நாள் ஆஸ்கார் வாங்கித்தருவானடா’ என்று. அதை அவர் மறந்திருந்தாலும் நான் மறக்கவில்லை என்பதை நீ மறந்துவிடக்கூடாது உடன்பிறப்பே.

இதோ.. இன்றைக்கு தமிழகம் முழுவதும் பாலாறும், தேனாறும் ஓடிக் கொண்டிருக்கும் இந்த பொன்னான ஆட்சியிலே, மருத்துவமனையில் அமர்ந்தவாறும், படுத்தவாறும் தமிழக மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் இந்த கடினமான தருணத்திலும், கடிதம் எழுதாதீர்கள் என்று மருத்துவர்கள் கட்டளையிட்ட போதும் அதையெல்லாம் புறந்தள்ளி ரகுமானுக்கு ஆஸ்கார் கிடைக்காவிட்டால் தமிழகத்தில் என்ன நடக்கும் என்பதையும், என் உடன்பிறப்புகள் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட ஒருபோதும் தயங்கமாட்டார்கள் என்பதையும் விளக்கி ஒராக் பொபாமாவுக்கு ஒரு விளக்கக் கடிதம் அனுப்பினேன். அதைப் படித்த பொபாமா உடனே என்னை தொடர்பு கொண்டு ஆவன செய்வதாக அறிவித்ததை சில தீய சக்திகள் இருட்டடிப்புச் செய்ததை நீ அறியமாட்டாய்.

உடன்பிறப்பே.. ரகுமான் ஆஸ்கார்க் வாங்க அவர் பாடிய பாட்டை விடவும், நான் பட்டபாடு என்னவென்பதை யாரறியாவிடினும் நீ அறியமாட்டாய் என்பதை நான் அறிவேன். ஆகவேதான் இந்த அவசரக் கடிதத்தை உனக்கு எழுத நேர்ந்தது. உடனே இளைஞர் பாசறை சார்பாகவும், கழக உடன்பிறப்புகள் சார்பாகவும் ஏ.ஆர்.ரகுமானுக்கு பல்வேறு விழா எடுத்து ‘ஏண்டா ஆஸ்கார் வாங்கினோம்’ என்று அவரை நினைக்கவைக்க.. இன்றே உறுதியெடு. இல்லையேல் உயிரைவிடு’

-இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆஸ்கார் வாங்கியது என்னால்.. முதல்வர் பதவி விலகட்டும் – பயலலிதா அறிக்கை

கொ.தி.மு.க. பொதுச்செயலாளர் பெ.பயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

’ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும், தனது குடும்ப சொத்தை மேலும் பெருக்கவும் அவர் செய்யும் நாடகங்களில் ஒன்றாக ரகுமானுக்கு ஆஸ்கார் கிடைக்க தான்தான் காரணம் என்று குள்ளநரித்தனமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் பொருணாநிதி.

அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், சட்டசபையிலும் எனது கொ.தி.மு.க உறுப்பினர்கள் இல்லாத நிலையிலும் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் எனது உத்தரவின் பேரில் பங்கேற்று பாதியில் திரும்பி வந்த கழக உறுப்பினர்கள் சொன்ன தகவலின் படி, அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் காற்றில் பறக்க விட்டு. ஏ.ஆர்.ரகுமானுக்கு என்ன செய்யலாம் என்று முடிவெடுத்ததை விடுத்து ஏதேதோ பிதற்றியிருக்கிறார் பொருணாநிதி.

காவல்துறை முதல்வரின் ஏவல்துறையானதும், சட்ட வல்லுனர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் என்று பலரும் இந்த மைனாரிட்டி அரசின் முதல்வராக உள்ள பொருணாநிதியின் ஆட்சியில் வன்முறை வெறியாட்டம் போடுவதையும், ஆஸ்கார் நேரடி ஒளிபரப்பின் நடுநடுவே சேனல் மாற்றி மாற்றி மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது.

ரத்தத்தின் ரத்தங்களே… ஏ.ஆர்.ரகுமான் 1992ல்தான் தனது முதல் படத்துக்கு இசையமைத்தார் என்பதையும், அப்போதைய நிரந்தர முதல்வர் உங்கள் அன்புச் சகோதரி, பொனமனச் செல்வி, புரட்சித் தலைவியாகிய நான்தான் என்பதையும் நீங்கள் மறந்துவிட்டாலும் மக்களுக்கு எடுத்துச் சொல்வது உங்கள் கடமை என்பதை மறந்துவிடக்கூடாது. அங்ஙனம் மறந்துவிட்டால் இந்த குள்ளநரிக் கூட்டமும், அவர் தூண்டிவிடுகிற காவல்துறையும் மக்களிடம் தவறான தகவலைச் சொல்லி ஏமாற்றும் என்பதை பலமுறை இந்தத் தமிழகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

அப்போது இயக்குனர் பாலச்சந்தர் என்னிடம் எட்டுமுறை அப்பாய்ண்மெண்ட் வாங்கி, ஒம்பதாவது முறை என்னைச் சந்தித்து தானொரு படம் தயாரிக்க விரும்புவதாகவும், அதற்கு மணிரத்னத்தை இயக்குனராக்க விரும்புவதாகவும் அறிவித்தார். பலத்த யோசனைக்குப் பிறகு அதை ஒத்துக் கொண்டேன் நான். தமிழக அரசு அவரது திரைப்படத்திற்கு ஆவன செய்யும் என்றும் உறுதி அளித்தேன். மணிரத்னமும் ஒன்பது முறை என்னைச் சந்திக்க முயற்சித்து, ஒன்பதாவது முறையே என்னைச் சந்தித்து அந்தப் படத்திற்கு ரோஜா என்று பெயரிட விரும்புவதாகக் கூறினார். உடனே செல்வமணியைத் தொடர்பு கொண்டு அவரை சமாதானப் படுத்தி, அந்தப் பெயர் வைக்க அனுமதி அளித்தேன். கூட்டணி தர்மத்தை மீறக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக நேரு குடும்பத்திலிருந்தும் அனுமதி வாங்கிக் கொடுத்தவள் உங்கள் சகோதரி, பொன்மனச் செல்வி, புரட்சித் தலைவி என்பதை இங்கே நினைவூட்டுகிறேன்.

அந்தச் சந்திப்பின்போதுதான் புதிய இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தப் போவதாக மணிரத்னம் அவர்கள் என்னை அனுமதி கேட்டார். தமிழக நலனுக்காக அதை அனுமதிக்கும் வேளையில், அறிக்கை அரசியல் நடத்திக் கொண்டிருந்த பொருணாநிதி சட்டத்தை மதிக்காமல் அதற்கு எவ்வளவு இடையூறு செய்தார் என்பதை செலக்டீவ் அம்னீஷியா வந்தவர் போல தனக்குச் சாதகமாக மறந்துவிட்டார்.

கட்டுப்பாடின்றி காட்டுதர்பார் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் சட்டப்பேரவையைக் கலைத்து விட்டு மீண்டும் தேர்தலைச் சந்திக்க இந்த மைனாரிட்டி தி.மு.க அரசு தயாரா என்பதைக் கேட்கும் இந்த வேளையிலே ஏ.ஆர்.ரகுமானின் வெற்றிக்கு அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்துச் சொல்ல நானும் என் கழகக் கண்மணிகளும் மறக்கவில்லை என்பதை தமிழக மக்கள் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.’ –

இவ்வாறு அந்த அறிக்கையிலே கூறப்பட்டுள்ளது.

பரிசல்காரன் வலைப்பூவில் இருந்து எடுத்தது

நன்றி http://www.parisalkaaran.com/2009/02/blog-post_24.html

Edited by pepsi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.