Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாத்தளன் மருத்துவமனை சுற்றயல் உட்பட பல பகுதிகளில் நேற்றும் எறிகணைத் தாக்குதல்: 37 தமிழர்கள் படுகொலை

Featured Replies

வன்னியில் உள்ள மாத்தளன் மருத்துவமனை சுற்றயல் பகுதி உட்பட பல பகுதிகளிலும் சிறிலங்கா படையினர் நேற்றும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதில் 37 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 78 பேர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் மருத்துவமனை சுற்றயல் பகுதி, முள்ளிவாயக்கால், அம்பலவன்பொக்கணை, புதுக்குடியிருப்பு மற்றும் இரணைப்பாலைப் பகுதிகளில் நேற்று புதன்கிழமை முற்பகல் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 37 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 78 பேர் காயமடைந்துள்ளனர்.

மே.மாக்கிறட் (வயது 40)

ந.அன்னம்மா (வயது 53)

ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சி.கயலவன் (வயது 23)

சி.தயாநிதி (வயது 34)

நா.தினேஸ் (வயது 14)

கோ.சர்மிளா (வயது 25)

லோ.புவனேஸ்வரி (வயது 57)

கு.பாக்கியம் (வயது 45)

வ.சசிகாந்தன் (வயது 25)

த.கென்சியா (வயது 04)

செ.சுமதி (வயது 28)

ம.குணம் (வயது 50)

கோ.கோபாலதரன் (வயது 27)

லோ.நடனசபேசன் (வயது 27)

மா.டெல்லிமாக்கிறட் (வயது 40)

ம.விஜித்குமார் (வயது 84)

வீ.ஞானவேலு (வயது 47)

ஆகியோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தளன் பகுதியில் நேற்று முன்நாள் இரவு 7:45 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

இதில் 5 தமிழர்கள் காயமடைந்துள்ளனர்.

ஞா.சங்கப்பதுமை (வயது 44)

வி.சரஸ்வதி (வயது 35)

சு.மதனகுமார் (வயது 23)

த.தவராசா (வயது 32)

ரா.இராஜேஸ்வரி (வயது 38)

ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

பாதுகாப்பு வலய பகுதி என சிறிலங்கா அரசு அறிவித்த மாத்தளன் பகுதியில் படையினர் தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதலை நடத்தி தமிழர்களை படுகொலை செய்து வருகின்றனர்.

இதேவேளை, அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் மற்றும் புதுக்குடியிருப்பு மக்கள் குடியிருப்புக்கள் மீது தொடர்ச்சியாக சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

புதினம்

வன்னியில் உள்ள மாத்தளன் மருத்துவமனை சுற்றயல் பகுதி உட்பட பல பகுதிகளிலும் சிறிலங்கா படையினர் நேற்றும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதில் 37 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 78 பேர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

எத்தனை தமிழர்களின் உயிரை தின்றால் சிங்கள அரக்கனின் பசியடங்குமோ தெரியவில்லை.

இறந்த, காயமடைந்தவர்களது விபரங்களை பார்க்கும்போது பெரும்பாலும் போராடக்கூடிய வயதுள்ளவர்கள். இவ்வாறு அநியாயமாக உயிரை விடாமல் போராட்டத்தில் இணைந்தால் என்ன ?

Edited by Senthamilalan

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தமிழர்களின் உயிரை தின்றால் சிங்கள அரக்கனின் பசியடங்குமோ தெரியவில்லை.

இறந்த, காயமடைந்தவர்களது விபரங்களை பார்க்கும்போது பெரும்பாலும் போராடக்கூடிய வயதுள்ளவர்கள். இவ்வாறு அநியாயமாக உயிரை விடாமல் போராட்டத்தில் இணைந்தால் என்ன ?

விடுதலை கேட்டதற்காக நிரந்தரமா விடுதலை தர முடிவு செய்திட்டான் சிங்களவன். சன நாயக முகமூடி போர்த்திய கழுகுகளும் குள்ள நரிகளும் தமக்குத் தீனி தானே என்றுவிட்டு சிங்கத்தின் தமிழர் வேட்டைக்கு குடை பிடிக்குதுகள்.

நாம் ஒரு பலமான சக்தியோடு கூட்டுச் சேர்ந்து திருப்பி அடிக்காதவரை எமக்கு அழிவுதான் முடிவு.

1987 இலும் இதே தான் நடந்தது. 2009 இலும் அதே தான் நடக்குது..! நாங்க என்னதான் கத்திக் கூவினாலும் வல்லாதிக்க சக்திகளின் நிகழ்ச்சி நிரல் எமக்காக மாற்றம் பெறப்போவதில்லை..! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.