Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாத்தளன் மருத்துவமனைப் பகுதியில் படையினரின் எறிகணைத்தாக்குதலில் நேற்றும் 68 பொதுமக்கள் பலி; 126 பேர் காயம்

Featured Replies

சிறிலங்கா அரசு மேற்கொண்டுள்ள தமிழினப் படுகொலையில் இன்று வியாழக்கிழமை கொல்லப்பட்டவர்களின் காட்சிகள் இவை.மனோ ரீதியாக பாதிக்கப்பட்ட எவரும் இந்தப் பக்கத்தை திறந்து பார்ப்பதை தவிர்க்கவும்.

சிறிலங்காவின் இனப்படுகொலைக்கு சாட்சிகளான இந்தக் காட்சிகளை நாங்கள் தணிக்கையின்றி இங்கு வெளியிட்டிருக்கின்றோம். .

படங்களை இங்கே இணைக்க முடியவில்லை (புரொக்சியால்).......

இங்கே படத்தை பாருங்கள்....

http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

கவனம்:சிறுவர்கள் மற்றும் இளகிய மனம் படைத்தவர்கள் பார்க்கும் போது மனமுடையலாம்

வன்னிப்பகுதியில் பாதுகாப்பு வலயப்பகுதிகள் மீது நேற்று புதன்கிழமை சிறிலங்கா படையினர் மேற்கொண்ட ஆட்லறி மற்றும் பல்குழல் பீரங்கித் தாக்குதல்களில் 21 சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண் அடங்கலாக 68 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 126 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் நேற்றுக் காலை 5.30 மணி தொடக்கம் முற்பகல் 6.45 மணிவரை பொக்கணைப் பகுதியை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட ஆட்லறி எறிகணைத் தாக்குதல்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 11 பேர் காயமடைந்தனர்.

இதே பகுதியில் மாலையில் படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் ஒரு குழந்தை, ஐ.சி.ஆர். சி. பணியாளர், அடங்கலாக 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 69 பேர் காயமடைந்தனர்.

மாத்தளன் பகுதியில் காலையில் மேற்கொண்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர் காயமடைந்தனர். மாலையில் இதே பகுதியில் 19 பேர் கொல்லப்பட்டும் 37 பேர் காயமடைந்துமுள்ளனர்.

பாதுகாப்பு வலயப் பிரதேசத்திற்கு வெளியே உள்ள இரணைப்பாலைப் பகுதியில் காலையில் நடாத்தப்பட்ட தாக்குல்களில் 4 சிறுவர்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டும் மாலையில் 10 பேர் கொல்லப்பட்டும் 51 பேர் காயப்பட்டுமுள்ளனர்.

மே.மாக்கிறட் (வயது 40)

ந.அன்னம்மா (வயது 53)

ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சி.கயலவன் (வயது 23)

சி.தயாநிதி (வயது 34)

நா.தினேஸ் (வயது 14)

கோ.சர்மிளா (வயது 25)

லோ.புவனேஸ்வரி (வயது 57)

கு.பாக்கியம் (வயது 45)

வ.சசிகாந்தன் (வயது 25)

த.கென்சியா (வயது 04)

செ.சுமதி (வயது 28)

ம.குணம் (வயது 50)

கோ.கோபாலதரன் (வயது 27)

லோ.நடனசபேசன் (வயது 27)

மா.டெல்லிமாக்கிறட் (வயது 40)

ம.விஜித்குமார் (வயது 84)

வீ.ஞானவேலு (வயது 47) ஆகியோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

05_001.jpg

05_002.jpg

05_003.jpg

5309mattalan_4.jpg

5309mattalan_5.jpg

5309mattalan_6.jpg

5309mattalan_7.jpg

5309mattalan_8.jpg

5309mattalan_9.jpg

5309mattalan_10.jpg

நன்றி தமிழ்வின்

Edited by தேசம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.