Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயுள்ளத்தோடு ஒரு வேண்டுகோள்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைத்து நாடுகளையும் சேர்ந்த பூமனது படைத்தவர்களே,

நான் எழுதியுள்ள இந்த எழுத்தைக்கொண்டே நான் தமிழ் மொழியை சார்ந்தவன் என்று அறிந்திருப்பீர்கள். ஆம். நான் இனத்தால் தமிழன். தேவமொழி சமஸ்கிருதம் என்றார்கள் சிலர். ஆனால் ஒரு தேவனுக்கே (முருகப்பெருமான்) பிடித்த மொழி தமிழ்!

தமிழ்மொழி தாய். தாயாக தமிழ் மொழி இருப்பதனால்தான் தமிழன் வந்தாரையும் வாழவைக்கும் நாடாக தமிழகத்தை உருவாக்கியுள்ளான்.தாயுள்ளம் கொண்ட தமிழர்களை உலகத்தோரே தயவு செய்து தவறாக எண்ணிவிடாதீர்கள். தாயுள்ளத்தோடு தான் நானும் உங்களிடத்திலே கேட்டுக்கொள்கிறேன்.

ஏனென்றால் தமிழைப் பகைத்தவன் தாயை பகைத்தவன். தாயை பகைத்தவனுக்கு தரணியிலே வாழ ஏது இடம். இன்று இலங்கையில் ஈழத்திலே தமிழன் நிலை என்ன என்பதை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஈழத்திலே ஆதிமுதல் ஆட்சி செய்து வந்தவர்கள் தமிழர்கள். அதை இடையினிலே வந்த சிங்களர்கள் பிடுங்கி கொள்ள திட்டமிடுகிறார்கள்.

நாட்டுமக்களை காக்கத்தான் நாடாளுமன்றமென்றால் உலக மக்களை காக்கவேண்டியது ஐக்கிய நாடுகள் சபை. நாட்டு மக்களையே கொன்று குவிக்கிறது இலங்கை. உலக மக்கள் சபையோ ஒன்றும் பேசாமல் இருக்கிறது. கைகால்களோடு உள்ளவர்களே இவ்வுலகில் கடினமாக இருக்கிறபோது கை கால்களோடு பிறந்தவர்களையெல்லாம் வான்குண்டுமழைமூலம் ஊணமுறச்செதிருக்கிறார்களே.. இவர்கள் எதிர்காலம் தான் என்ன. பெற்றோர்களே குழந்தைகளை தண்டிக்க உரிமை இல்லாதபோது இத்தனை பிள்ளைகளை தண்டிக்கிற உரிமையை இவர்களுக்கு யார் குடுத்தது?

இந்தியாவிலே ஊணமுற்றவர்கள் ஒருவர் கூட இல்லாமல் செய்ய போலியோ சொட்டுமருந்து கொடுக்கிறார்கள். ஆனால் இலங்கையிடம் வெடிமருந்து ராடார் கொடுத்து நம் அப்பாவித்தமிழ் மக்களை ஊணமுரச் செய்கிறார்கள். மிருகங்களை வேட்டையாட தடை வித்தித்துவிட்டு நம் அரசு ஈழதினிலே தம் இனத்தவரை வேட்டையாட மிருகங்களுக்கு உதவுகிறது. தமிழன் செய்த பாவம் தான் என்ன. பிரிட்டிஸ் அரசாங்கம் இலங்கைக்கு சுதந்திரம் கொடுகின்ற காலத்திலே தமிழனையும் சிங்களனையும் தனித்தனியே ஆட்சி செய்ய சொன்னார்கள். ஆனால் தமிழன் நாங்களும் அவர்களை அணைத்து கொண்டு வாழவே ஆசைப்படுகிறோம் என்றார்கள். அதுதான் தமிழன் செய்த பாவமா? ப்ரிடிஷ் அரசாங்கமே அடிமைப்படுத்தி வைக்கிற அளவுக்கு தைரியம் படைத்த உங்களால் இந்த ராஜபக்சே வை அடக்கி வைக்கிற தைரியம் இல்லாமல் போய்விட்டதா? புத்தனுக்கு ஞானம் பிறக்க போதி மரத்தடியே அமர்ந்தான். ஆனால் ராஜபக்சே வுக்கு அதற்கு வாய்ப்பில்லை. எங்கே சென்று அமரப்போகிறாரோ?

ஈராக் அதிபர் சதாம் ஹூசைனுக்கு தூக்குத்தண்டனை விதித்தது அன்றைய அமெரிக்க அரசாங்கம். இன்று குழந்தை குட்டிகள் முதல் ஒரு இனத்தவரையே அழித்துக்கொண்டிருக்கும் ரஜபக்சேவிற்கு இன்றைய அமெரிக்க அரசாங்கம் என்ன தண்டனை கொடுக்கப்போகிறது?

ஈழத்திலே போர் நிறுத்தம் ஏற்பட்டு, தமிழனுக்கு தனி ஈழம் அமைத்து ஒருவருக்கொருவர் எந்தப்பிரச்சினையும் இல்லாமல் சேர்ந்து வாழ்வதற்கு உலக மக்களே ஒன்று கூடி குரல் கொடுங்கள்... உலக மக்கள் சபையே இவ்வின அழிப்பை தடுக்க நீங்கள் காலம் தாழ்த்தாமல் முடிவு எடுங்கள்..

அன்புடன்..

பி.என்.பூபதி,

வசந்தம் நுகர்வோர் பாதுகாப்பு நல மையம்,

மாவட்ட பொருளாளர், கோவை.

செல்பேசி எண்: 9940901050

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.