Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அத்வானியுடன் பேசியது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

""நடக்கப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பாரதீய ஜனதாகட்சி ஆட்சிக்கு வந்தால், இலங்கை போர் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு நிச்சயம் துணை போகாததுடன், ஈழத் தமிழினம் சுயகௌரவத்துடன் வாழும் சூழலும் விரைவாக உருவாக்கப்படும். அதேநேரம், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது பற்றிய நிலைப்பாடு வருவதற்கும் சாதகமான வாப்புகள் பிரகாசமாகவே இருக்கின்றன என்பதை பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவரும், பிரதம வேட்பாளருமான எல்.கே.அத்வானியுடன் டில்லியில் நான் நடத்திய பேச்சுவார்த்தையில் காணக்கூடியதாக இருந்தது' என்று இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.சிவாஜிலிங்கம் "தினக்குரலு'க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் நம்பிக்கை வெளியிட்டார்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஆதரவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் ஆர்வத்துடன் கலந்துகொள்ளும் சிவாஜிலிங்கம், தென்மாநிலத் தலைநகரங்களிலும் மற்றும் மும்பாயிலும் அவ்வப்போது நடக்கும் ஈழத்தமிழர் பாதுகாப்பு சம்பந்தமான கூட்டங்கள், கலந்துரையாடல்களிலும் பங்கு கொள்கின்றார். இரண்டு தினங்களுக்கு முன்னர் "தினக்குரலு'க்கு அளித்த நேர்காணல் இது :

கேள்வி : தனியாகவும், சென்னை வரும் இலங்கை தமிழ் எம்.பி.க்களுடன் இணைந்தும் ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி பல தலைவர்களுடன் பேச்சு நடத்தி வருகின்றீர்கள். இவற்றில் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் தலைவர் சந்திப்பு பற்றி விளக்க முடியுமா?

பதில் : பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் பிரதம வேட்பாளருமான எல்.கே.அத்வானியுடனான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாந்தது. அவரை நான் சந்தித்தபோது மிகவும் ஆர்வத்துடனும் கவலையுடனும் ஈழத்தமிழர் நிலை பற்றி விசாரித்தார். போர்ச்சூழல், அதன் பாதிப்புகள், அங்கு நடக்கும் கொடுமைகள் குறித்து ஆதாரங்களுடன் விளக்கினேன். சில விபரங்களையும் சமர்ப்பித்தேன். இலங்கையில் தமிழர் எதிர்நோக் கியிருக்கும் பல்வேறு பிரச்சினை களையும் அவர் தெரிந்திருந்தாலும், மேற்கொண்டு போர் நடவடிக்கை கொடுமைகள் குறித்து அறிய விரும்பினார். அவர் என்னிடம் தெரிவித்த விபரம், குறிப்பில் இருக்கிறது.

""இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர்க் கொடுமைகளையும், தமிழர் உயிரிழப்பையும் அவதானித்து வருகின்றோம்.'கைவிடப்பட்ட ஓர் இனமாக தமிழினம் அழிக்கப்படுவதை அனுமதிக்கமாட்டோம். நாங்கள் ஆட்சிக்கு வந்த மூன்று மாத காலத்தில் தமிழர் பிரச்சினையைத் தீர்த்துவைப்போம் என்று நான் உத்தரவாதம் கொடுக்கின்றேன். இந்திய அரசின் நிலைப்பாடு, அணுகுமுறை தவறானது மட்டுமல்ல; இலங்கையில் தமிழினம் மோசமான, சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறது என்பதையும் கணக்கிடத் தவறிவிட்டது. பிரச்சினைக்கு இதுதான் தீர்வு என்று சொல்லாவிட்டாலும், போர் நடவடிக்கைக்கு பா.ஜ.க.நிச்சயம் துணைபோகாது. பொதுவாகக் கூறுவதென்றால், ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு தோற்றுப்போவிட்டது எனலாம். இலங்கைத் தமிழ் மக்களுக்காக கவலைப்படும் தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிகின்றேன், மதிக்கின்றேன். இலங்கைத் தமிழர் நலனைக் காக்க வேண்டும் என்று காங்கிரஸ்? அரசு சிந்தித்துக் கூடப்பார்க்கவில்லை!' என்று எல்.கே. அத்வானி என்னிடம் கவலையுடன் தெரிவித்திருந்தார்.

கேள்வி : டில்லியில் வேறு எந்தத் தலைவர்களை சந்தித்தீர்கள்?

பதில் : முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அமைப்புகளின் தலைவர்கள்,புத்திஜீவிகள் என்று பலரையும் சந்தித்து அவர்களின் சந்தேகங்களை விளக்கினேன். டில்லி மட்டுமன்றி மும்பா சென்றிருந்த போது கூட பா.ஜ.க., சிவசேனை தலைவர்களை சந்தித்தேன். ஈழத் தமிழரின் இன்னல் பற்றியும் போர்க்கொடுமை குறித்தும் அஸாத் மைதானத்தில் மராட்டிய மொழியிலேயே அவர்கள் பேசியது சிறப்பாக இருந்தது. பெங்களூர், திருவனந்தபுரம், புதுச்சேரி ஆகிய இடங்களிலும் நடைபெற்ற ஈழத் தமிழருக்கான ஆதரவு கூட்டங்களிலும் நான் அதிகம் கலந்து கொண்டுள்ளேன்.

கேள்வி : இலங்கை பாராளுமன்ற கூட்டத் தொடரை தொடர்ந்து புறக்கணித்து வருகிறீர்கள். இதனால் உங்களது பாராளுமன்ற அங்கத்துவ பதவி பறிபோகாதா?

பதில் : எங்களைத் தெரிவு செதவர்கள் தமிழ் மக்கள். அவர்களுக்கு சேவையாற்ற வேண்டியது எமது கடமை. அங்கு போர் நிறுத்தம் இல்லாமல் அரசியல் நடத்த முடியாது. இச்சூழலில் எமது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் கொடுமையை உலக மக்கள் அறிய வேண்டும். முடிந்தவரை பல ஆசிய நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று எமது நிலையை தொடர்ந்து விளக்கிவருகின்றேன். எம்.பி.பதவி முக்கியமானதாகத் தெரியவில்லை.

கேள்வி : ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் : உலகில், மிகப்பெரிய இனப் படுகொலை இலங்கையில் நடந்து கொண் டிருக்கிறது. அதற்கு உதவி செது வேடிக்கை பார்க்கிறது இந்திய அரசு. தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக் கையையும் நிராகரித்து விட்டது இந்தியா. தமிழருக்கு உதவிகள் செயாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரவம் கொடுக்காத நிலைப்பாட்டையாவது இந்தியா எடுத்திருக்க வேண்டும். "போர் நிகழ்ச்சி நிரலுக்கு' இந்தியா இன்றும் ஆதரவளித்து வருகிறது. இது பெரிய கொடுமை இல்லையா? கேள்வி :இலங்கைக்கு, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மருத்துவக் குழுவை இந்தியா அனுப் பியிருக்கிறதே.

பதில் : இதுவும் ஒரு யுத்ததந்திரம் தான்! இலங்கை இராணுவ நடவடிக்கைகளுக்கு பல வடிவங்களில் இந்தியா உதவி வருகிறது என்பது தமிழக மக்களின் பகிரங்க குற்றச்சாட்டு. இந்நிலையில், இராணுவ மருத்துவ குழுவை இப்பொழுது இலங்கைக்கு அனுப்பியிருப்பதும், இலங்கை போர் நடவடிக்கையில் மறைமுக உதவிதான். இந்திய மருத்துவர்களும் இடம்பெறும் ஒரு சர்வதேச மருத்துவக் குழு அனுப்பப்பட்டிருந்தால் அது பலனுள்ளதாக இருந்திருக்கும். சர்வதேசக்குழு சென்று பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சிகிச்சை அளித்து அவர்கள் மூலம் போர் நடவடிக்கைகள், பாதிப்புகள் பற்றி அறிய நேர்ந்தால் இலங்கை அரசின் வேஷம் கலைந்துவிடும் என்பதால் இப்படி ஒரு ஏற்பாடு! அதுவும்; இலங்கை இராணுவ பாதுகாப்பில் முகாம் அமைத்து, இந்திய ராணுவம் சிகிச்சை அளிக்கிறது. சர்வதேச அளவில் மருத்துவக் குழு வரவிடாமல் செயும் இலங்கை அரசின் மற்றுமொரு யுத்த தந்திரத்துக்கு இந்தியா துணை போயிருக்கிறது!

கேள்வி : அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் உண்ணாவிரதம் குறித்து?

பதில் : காலம் கடந்த போராட்டம் என்றாலும் அவரது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இலங்கையில், தமிழீழப் போராட்டம் ஒரு தேசிய போராட்டமாக நடக்கிறது. உலகத் தமிழர்களுடன், முழுத்தமிழகமும் இன்று ஒன்றிணைந்து குரல் கொடுக்கிறது. இந்நிலையில்; நேற்றுவரை ஒரு மாறுபட்ட கொள்கையைக் கொண்டிருந்த ஜெயலலிதா; ஈழ மக்கள் போராட்டத்துக்கு அங்கீகாரம் அளித்து, தமிழருக்கென "தனிநாடு' உருவாகவேண்டும் என்ற உச்சத்துக்கே குரல் கொடுத்துவிட்டார். இவரது புதிய பாதை ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. அவரது புதிய முயற்சி, இலங்கை தமிழர் பிரச்சினையில் நிச்சயம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். ஈழத் தமிழர்கள் சார்பாக அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். இது வெறும் தேர்தல் அலையாக இல்லாமல், ஈழத் தமிழர் சம்பந்தமான அ.இ.தி.மு.க.வின் நிலைப்பாடாக நீடிக்க வேண்டும்.

கேள்வி : நீங்கள், பல உலக நாடுகளுக்கும் சென்று ஈழத் தமிழர் கொடுமை பற்றி குரல் கொடுத்துவருகிறீர்கள். சர்வதேசம், மௌனம் சாதிப்பதன் மர்மம் என்ன என்று கருதுகிறீர்கள்.

பதில் : ஈழத்தமிழர் இனப்படுகொலைபற்றி சர்வதேச அரங்கில் பேசப்பட்டாலும், நாட்டுத் தலைவர்கள் கோரிக்கை விடுத்தாலும் அழுத்தம் கொடுக்கப்படாததற்கு இந்தியாவின் நிலைப்பாடுதான் முழுக் காரணம். இலங்கை மீதான இந்தியாவின் செயற்பாடுகள் இலங்கைக்கு உதவியாக இருக்கிறதே தவிர, முட்டுக்கட்டையாக இல்லை. தலையிட உரிமை இருந்தும் பின்வாங்குகிறது. இலங்கை அரசின் போர் நிலைப்பாட்டைக் கட்டிக் காப்பதாக இந்திய நடவடிக்கைகள் இருக்கின்றன. இது பச்சைத் துரோகம்! மனித உரிமை மீறல்களை உலக நாடுகள் கண்டிக்கும் அதே நேரம் இந்தியா அமைதியாக இருக்கிறது. இந்தியாவின் நிலைப்பாடு என்று மாறுகிறதோ அன்றே, சர்வதேசத்தின் மௌனம் கலைவதுடன், இலங்கை மீதான தலையீடும் தொடங்கும். இந்த மாற்றம் விரைவாகவே வரவேண்டும் என்று எதிர்பார்ப்போம்.

- கே.ஜி.மகாதேவா

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.