Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி-தமிழர்களை வெளியேற்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எதிர்க்கிறது..

Featured Replies

வன்னி-தமிழர்களை வெளியேற்ற ரெட்கிராஸ் எதிர்ப்பு

டெல்லி: வன்னிப் பகுதியிலிருந்து தமிழர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எதிர்ப்பதாக இலங்கைக்கான செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் பால் காஸ்டெல்லா கூறியுள்ளார்.

இதுகுறித்து என்டிடிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டி..

நான் 2008ம் ஆண்டு கொழும்பு சென்று தலைமைப் பொறுப்பை ஏற்றேன். மனிதாபிமான நெருக்கடியை சரி செய்வதே எனது முக்கிய வேலையாக இருந்தது. போர்ப் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களைக் காப்பாற்றுவது மிகப் பெரிய வேலையாக இருந்தது. 2வது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி அப்பாவி மக்களின் மருத்துவம் மற்றும் சுகாதாரத் தேவைகள் பாதிக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. அங்கு போதிய அளவில் சுகாதார வசதிகள், உணவு போன்றவை கிடைக்காத நிலை உள்ளது.

தற்போது அங்குள்ள நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தாக்குதலில் சிக்கி ஏராளமான அப்பாவிகள் காயமடைந்து வருகின்றனர். பெருமளவில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இரு தரப்பும் அப்பாவி மக்களின் நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் போரிட்டு வருகின்றன.

தற்போது வனப்பகுதியில் சிக்கியுள்ள மக்கள் பெரும் உயிரிழப்பை சந்திக்கும் அபாயத்தில் உள்ளனர்.

அரசு அமைத்துள்ள தற்காலிக அகதிகள் முகாம்களில் ஏராளமான பேர் தங்கியுள்ளனர். அவர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் வசதிகள் செய்து தரப்படுகின்றன. நிலைமை போகப் போக மேம்படும் என நம்புகிறோம்.

இதுவரை புலிகளின் பகுதிகளிலிருந்து 35 ஆயிரம் பேர் வரை அரசுத் தரப்பு பகுதிகளுக்கு வந்திருப்பதாக கருதுகிறோம்.

தமிழ் மக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றும் முடிவை இலங்கை அரசு எடுத்திருப்பதாக அறிகிறோம். ஆனால் அதை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எதிர்க்கிறது. அப்படிப்பட்ட முயற்சிகளில் நாங்கள் ஈடுபட மாட்டோம்.

போர் நடந்து வரும் பகுதிகளுக்கு செல்ல எங்களுக்கு அனுமதி கிடைக்கிறது. இருப்பினும் அப்பகுதிகளில் மருத்துவ வசதி மிகவும் மோசமாக உள்ளது. முறையான மருத்துவமனைகள் இல்லை. காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதிகள் இல்லை, மரு்நதுகள் இல்லை. இதனாலும் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன.

விடுதலைப் புலிகள் இடைவிடாமல் அரசுப் படையினரோடு மோதி வருவதால் நிலைமை மேலும் மோசமடையும் என கருதுகிறோம் என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2009/03...n-in-lanka.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையாக செஞ்சிலுவை சங்க தலைவருக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம்.

கட்டாயமாக வெளியேற்றி சிங்களவனிடம் சீரழிந்து போவதை விட அந்த மக்களே தம் பாதுகாப்பை பார்த்துக்கொள்வர்.

ஆனால் செஞ்சிலுவைச்சங்கம் அவர்களுக்கு தேவையான அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்வதோடு

வன்னி மக்களின் உண்மையான நிலவரத்தை உலகத்திற்கு எடுத்துக்கூறி இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கும்

செயற்பாடுகளையும் செய்தால் நல்லது அதற்காக புலம்பெயர்ந்து வாழும் நாம் தொடந்து சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு

தகவல்களை வழங்குவதொடு தொடர்போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் எம் உறவுகளைக் காப்பாற்றலாம்.

சரியான விதத்தில் நோக்குகிறார். தாம் பிறந்து வாழ்ந்த மண்ணைவிட்டு பலவந்தமாக அவர்களை வெளியேற்றினாலும் அடுத்து நடப்பது என்ன? தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட்டு விடுமா? உலக நாடுகளோ இலங்கையரசோ சிந்திக்கும் வழிகளை தீர்வுடைய வழிகளாகச் சிந்தித்தால் நல்லது.

மக்களை சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றி வவனியா திற்ந்த வெளிச் சிறையில் அடைத்து வைப்பதின் உள்நோக்கம்.... வன்னியில் படையினர் ஏதும் பாரிய தோல்வியை சந்தித்தால்... சிங்கள காடையரை வைத்து தமிழ்மக்களை அளிப்பதே...

இதனை எதிர்க்கும் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு எனது நன்றிகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.