Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளே மக்கள்... மக்களே புலிகள்!

Featured Replies

என் அபிமான விகடனுக்கு,

எனது பெயர் ................... யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவள். தற்போது கனடாவில், ..............ல் வசித்து வருகிறேன். விகடன் எனக்குக் கிட்டத்தட்ட 20 வருடத் தோழன்.

எப்போது விகடனை எடுத்தாலும், ஒரே மூச்சில் வாசித்து முடிப்பது என் வழக்கம். ஆனால், இப்போது என்னால் அப்படி வாசிக்க முடிவதில்லை. ஈழப் போரைப் பற்றிய, எங்கள் வேதனைகள் பற்றிய கட்டுரைகளைப் படிக்கும்போதெல்லாம் துக்கத் தில் மூச்சுமுட்டுகிறது. ஈழப் பிரச்னைகளை உலகுக்கு எடுத்தியம் புவதில், விகடனின் பங்கு காத்திரமானது.

கடந்த 4.03.2009 இதழில் வெளியான 'யுத்தம் யாரை விட்டது?' என்ற தலைப்பிலான த.அகிலனின் 'மரணத்தின் வாசனை' பற்றிய அறிமுகம் எனது தூக்கத்தை அடியோடு தொலைத்துவிட்டது. அது பற்றிய எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளவே இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன்.

இதைப் பிரசுரித்தாலும் விட்டாலும் எனது பெயர், முகவரியை மட்டும் எக்காரணம்கொண்டும் வெளியில் விடாதீர்கள். இது யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் வாழும் பெற்றோரையும், என் அண்ணனின் குடும்பத்தையும் அவலத்துக்கு உள்ளாக்கும் என்று அஞ்சுகிறேன்.

அகிலனுக்குப் புலம்பெயர் மண்ணிலிருந்து ஒரு கடிதம்...

இழப்புகள் தந்த வலியினால் வார்த்தைகள் வறண்டுபோய் மூடி வைத்துவிட்ட பேனாவை மறுபடியும் எடுக்கின்றேன், 'உனது 'மரணத்தின் வாசனை' நூலைப் பற்றி விகடனில் வெளிவந்த கட்டுரைக்காக. என்னை மன்னித்துக்கொள்... உனது நூலை முழுமையாகப் படிக்கக் கிடைக்காமலே, இதை எழுத நேர்ந்ததற்கு. எனினும், அதன் உணர்வுபூர்வமான வலிகளை விகடன் எடுத்துக் காட்டியிருந்தது.

ஈழத்தில் தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவருக்குமே இழப்புக் குப் பஞ்சம் இல்லை. இதில் உனது இழப்பு சிறிது, எனது இழப்பு பெரிது என்று அடிபட்டுக்கொள்ள முடியாது. இதில் புலம் பெயர்ந்த மக்களும் அடக்கம். உனது வேதனை வரிகளை விமர்சிக்க முடியாது. ஆனாலும்கூட ஒருசில நெருடல்கள் என் மனதைத் துண்டுகளாக உடைத்துத் தூங்கவிடாமல் பண்ணியது.

ஐந்து வேளையும் இணையதளத்தில் செத்தவர்களின் பெயர்ப் பட்டியல் பார்ப்பது நீ மட்டுமல்ல... வன்னி மண்ணில் இருக்கும் தங்கள் பெற்றோரை, சகோதர-சகோதரிகளை, உறவுகளை எண்ணி உணவு இறங்காமல் நடைப் பிணமானவர்கள் இங்கும் இருக்கிறார்கள்.

உன் அம்மம்மாவை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு உன் பதின் பருவத்துக் கடைசி வயதுகளில், 'பொடியள் மறுபடி பிடித்த ஆனையிறவில்' உன் வீடு பார்க்க நீ போன தருணத்தில், ராணுவக் காலனிகள் சூழ்ந்த யாழ் பல்கலைக்கழக விடுதிக்குள் நான் விம்மலையும் வேதனைகளையும் தொண்டைக்குழிக்குள் தேக்கிவைத்துக்கொண்டு சுருண்டு படுத்திருந்தேன். தன் பதின் கடைசி வயதுகளில் போராளியாகிய என் தம்பி, அதே ஆனையிறவுச் சமரில் படுகாயமடைந்து மரணப் படுக்கையில் கிடப்பதாக, என் அம்மா முல்லைத் தீவிலிருந்து செய்தி அனுப்பியிருந்தார். அதே ஆனையிறவுத் தளத்தின் வெற்றி விழாவில் மக்கள் கலந்து மகிழும்போது, நீ சொன்ன கிரிக்கெட் ஸ்கோரின்படி 400 வீடுகளில் பிள்ளைகளை இழந்திருக்கிறார்கள் (என் தம்பி பிழைத்துக்கொண்டான்).

எங்கள் மக்களின் துயரங்களை வெளியில் கொண்டுவரும் உன் படைப்பு உன்னதமானதுதான். அப்பாவிப் பொதுமக்களை யும், பச்சிளம் பாலகர்களையும் படுகொலை செய்யும் போர் எனும் அரக்கனின் பிடியில், எங்கள் மக்கள் மரணத்தின் முன் மண்டியிட்டுக்கிடக்கிறார்கள

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி!

சிவத்த எழுத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் சிந்திக்கவேண்டியவை.

Edited by Valvai Mainthan

இணைப்புக்கு நன்றி!

சிவத்த எழுத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் சிந்திக்கவேண்டியவை.

போதையோ?

சிகப்பு நிறம் எப்படி இருய்க்கும் என்று எம் உறவுகளின் இரத்தம் பார்க்கவில்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.