Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப்புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா படையினர் 500 மீற்றர் பின்நகர்வு: லக்பிம தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா படையினரின் 7ம் சிங்க ரெஜிமன்ட் மற்றும் 20 ம் கஜபாகு ரெஜிமன்ட் மீது சுமார் 300 பேர் கொண்ட விடுதலைப்புலிகளின் அணியினர் கடந்த புதன்கிழமை பானு மற்றும் லோரன்ஸ் ஆகியோர் வழிநடாத்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இத் தாக்குதலையடுத்து சிறிலங்கா படையினரின் 7ம் சிங்க ரெஜிமண்ட் தமது நிலைகளில் இருந்து 500 மீற்றர் தூரம் பின்வாங்கியிருந்ததாகவும், இச்சமயத்தில் 58 ம் படையணியின் படையதிகாரி பிரிகேடியர் சிவாந்திர சில்வா விடுமுறையில் இருந்ததாகவும், இதனையடுத்து உடனடியாக மறுநாள் அவர் களமுனைக்கு திரும்பியதாகவும், மேலும் மேலதிக படையினர் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கு அப்பகுதிக்கு நகர்த்தப்பட்டதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 20ம் கஜபாகு படையினர் மீதும் நான்கு அலைகளாக விடுதலைப்புலிகள் புயலென தாக்கியதாகவும் இவர்கள் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களையும் இலக்கு வைத்து தாக்கியதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/view.php?2a36QVb4b...3g2hF2ccdZj0o0e

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தாக்குதலால் படையினர் பின்நகர்வு - சிங்கள ஊடகம் தெரிவிப்பு

திகதி: 29.03.2009 // தமிழீழம் // [எல்லாளன்]

படையினர் படலைக்கு படலை (door to door) முன்னேறிக் கொண்டிருப்பதாக சிறிலங்கா இராணுவ தரப்பு தகவல்களை வெளியிட்டு வரும் நிலையில் அந்நாட்டு ஊடகம் ஒன்று படையினர் பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் தாக்குதலில் சிறீலங்கா படையினர் 500 மீற்றர் பின்நகர்ந்துள்ளதாக சிறிலங்காவின் லக்பிம ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா படையினரின் 7ம் சிங்க ரெஜிமன்ட் மற்றும் 20 ம் கஜபாகு ரெஜிமன்ட் மீது சுமார் 300 பேர் கொண்ட விடுதலைப் புலிகளின் அணியினர் கடந்த புதன்கிழமை பானு மற்றும் லோரன்ஸ் ஆகியோரின் வழிநடாத்தலில் தாக்குதலை நடாத்தியுள்ளனர்.

இத் தாக்குதலையடுத்து சிறீலங்கா படையினரின் 7ம் சிங்க ரெஜிமண்ட் தமது நிலைகளில் இருந்து 500 மீற்றர் தூரம் பின்வாங்கியிருந்ததாகவும் இச்சமயத்தில் 58 ம் படையணியின் படையதிகாரி பிரிகேடியர் சிவாந்திர சில்வா விடுமுறையில் இருந்ததாகவும் இதனையடுத்து மறுநாள் அவர் களமுனைக்கு திரும்பியதாகவும் மேலும் மேலதிக படையினர் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கு அப்பகுதிக்கு நகர்த்தப்பட்டதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 20ம் கஜபாகு படையினர் மீதும் நான்கு அலைகளாக விடுதலைப்புலிகள் புயலென தாக்கியதாகவும் இவர்கள் தாங்கிகள் மற்றும் கவச வாகனங்களையும் இலக்கு வைத்து தாக்கியதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுஇவ்வாறிருக்க, வன்னிப் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் குறிச்சூட்டுத் தாக்குதலில் சிக்கி 7 ஆவது விஜயபா றெஜிமென்ட் படையணி பலத்த இழப்புக்களைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாலை பகுதியால் நகர்வில் ஈடுபட்டு வரும் 55 ஆவது படையணியின் 7 ஆவது விஜயபா றெஜிமென்ட் படையணி விடுதலைப் புலிகளின் 10 அடி உயரமான மணல் அணை ஒன்றை கைப்பற்றும் முயற்சியில் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது.

இந்த மணல் அணையில் உள்ள விடுதலைப் புலிகளின் நிலை இடங்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் நோக்கத்துடள் பீரங்கிப் படையணியைச் சேர்ந்த லெப். சந்திரஜித் தலைமையில் 4 பேர் கொண்ட இராணுவ அணி ஒன்று நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. விடுதலைப் புலிகளின் நிலை இடங்களை அவர்கள் நோக்கி ஊர்ந்து சென்ற போது விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதல் அணியினர் அவர்களை அடையாளம் கண்டு தாக்குதலை நடத்தினர்.

இதில் லெப். இந்திரஜித் உட்பட இருவர் கொல்லப்பட்டதுடன், ஏனைய இருவரும் காயமடைந்திருந்தனர். இவர்களை காப்பாற்றும் முயற்சியில் 7 ஆவது விஜயபா படையணியைச் சேர்ந்த லெப். தாரங்க துசார தலைமையிலான குழுவினர் அங்கு சென்ற போது விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அவர்களும் சிக்கி கொண்டனர். தாரங்கவின் தொலைத் தொடர்பினை கையாளும் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன், தாரங்கவும் அதிக நீரிழப்பினால் பாதிக்கப்பட்டார்.

இவர்கள் அனைவரும் வான்குண்டுத் தாக்குதலில் ஏற்பட்ட குழி ஒன்றுக்குள் பதுங்கி கொண்டனர். அதன் பின்னர், அவர்களை காப்பாற்ற கப்டன் அசங்க அன்றூ மற்றும் கப்படன் பிரசன்ன ஆகியோரின் தலைமையில் இரு பிளட்டூன் படையினர் அனுப்பப்பட்டனர். ஆனால் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அந்த அணியும் சிக்கி கொண்டதனால் கப்டன் அன்றூ உட்பட இரு படையினர் கொல்லப்பட்டனர்.

இம் மோதல்களில் 7 படையினர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் படுகாயமடைந்திருந்தனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலனவர்கள் விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சங்கதி

  • கருத்துக்கள உறவுகள்

இத் தாக்குதலையடுத்து சிறீலங்கா படையினரின் 7ம் சிங்க ரெஜிமண்ட் தமது நிலைகளில் இருந்து 500 மீற்றர் தூரம் பின்வாங்கியிருந்ததாகவும் இச்சமயத்தில் 58 ம் படையணியின் படையதிகாரி பிரிகேடியர் சிவாந்திர சில்வா விடுமுறையில் இருந்ததாகவும் இதனையடுத்து மறுநாள் அவர் களமுனைக்கு திரும்பியதாகவும் மேலும் மேலதிக படையினர் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கு அப்பகுதிக்கு நகர்த்தப்பட்டதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதோ இந்த சில்வா விடுமுறையில போகாட்டில் பின்வாங்கியிருக்காயினம் எண்ட மாதிரித்தான்..! கைப்புள்ளையை ஆர்னோல்ட் ரேஞ்சுக்கு பில்டப் பண்ணுகினம்..! :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.