Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் போர் நிறுத்தமும், வணங்கா மண்ணும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். அங்கே மக்கள் யுத்தத்தினால் மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். தாய்மார்கள் சீரழிக்கப்படுகிறார்கள் என்றெல்லாம் காங்கிரஸ் தலைமைப்பீடமும், முக்கிய உறுப்பினர்களும், திடீர் ஞானோதயம் பெற்றவர் போல் குரல் கொடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு முழுவதுமே திரண்டெழுந்து இந்த அநிதிக்கு எதிராக ஆர்பரித்த போதெல்லாம், கண்டு கொள்ளாதிருந்த காங்கிரஸ் தலைமைக்கு என்ன இந்தத் திடீர் பாசம் என எண்ணத் தோன்றுவது இயல்பு.

ஈழத் தமிழ் மக்கள் மீதான பரிவை இரண்டு தசாப்த காலமாக, நீறுபூத்த நெருப்பெனத் தங்கள் இதயங்களுக்குள் மறைத்து வைத்திருந்த தாய் தமிழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் தா.பாண்டியன் விடுத்த அழைப்பில் விழித்துக் கொண்டது. ஆர்பரித்தெழந்த மக்கள் உணர்வுகளை கண்டு அதிர்ந்து போன அரசியற் கட்சிகளெல்லாம் தாமும் ஆதரவுதான் என்பதில் அக்றைகொண்டன. இப்படியாகுமா என எண்ணியிருந்த சிலருக்கு இது பெரும் இடியாகவே இருந்தது. குறிப்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காறருக்கு இதுவரை காலமும் தாம் கட்டிவைத்த கட்டுக் குலைந்து போனதாகவே தோன்றியது. ஆனாலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தாமும் உள்ளதாகவே காட்டிக் கொண்டனர். தமிழக முதல்வர் முடிந்தவரைக்கும் அறிக்கைப் போராட்டங்களை நடத்திக் காங்கிரசின் கைப்பிள்ளையாக நடந்து கொண்டார்.

இந்த நேரத்தில்தான் முத்துக்குமரன், ஈழத்தமிழர்களுக்காய் தியாக வேள்வி வளர்த்தான். அரசியல்பாணி ஆர்ப்பாட்டங்களில் ஓடிக்கொண்டிருந்த கட்சிகளும். கட்சிப் பிரமுகர்களும் ஒரு கணம் ஆடிப்போயினர். அடுத்தடுத்து நடந்த சம்பவங்களில் மக்கள் தங்கள் உள உணர்வின் வெளிப்பாட்டில் வேஷங்கட்டிக் கோஷம் போட்டவர்களுக்கு எதிர்பினைக் காட்டினார்கள். ஆனாலும் அரசியலில் பழந்தின்று கொட்டைபோட்ட அரசியற்தலைவர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் அசந்து விடுவார்களா? தேர்தல் வரட்டும் தேற்றிவிடலாம் என கூட்டிக் கழித்துக் கணக்குப் போட்டனர்.

ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு என்பது தமிழக மக்களின் மனஉணர்வாக இருந்தாலும், தேர்தல் என்று வரும் போது மக்கள் தேடிக் கொள்ளும் பிரச்சனைகள் வேறாகத்தான் இருக்கும் என்பதே அரசில்வாதிகளதும், அரசியற்துறை ஆய்வாளர்களதும் கணிப்பாக இருந்தது. ஆனால் அந்த நிலையில் சற்ற மாற்றம் தெரிவது போலவும், அந்த மாற்றத்திற்கு அரசியலில் நிலை கொள்ளாதிருந்த சிலர் பேச்சுக்கள் காரணமாக இருப்தையும் கண்டு கொண்டதும், சீமான் ,கொளத்தூர் மணி, உட்டபட்ட சில பேச்சாளர்களை தேர்தல் முடியும் வரை வெளியே வராதவாறு சிறையில் தள்ளியது தமிழக அரசு. அதன் பிறகு அடங்கிப் போகும் ஈழ உணர்வு என்று எண்ணியதுபோலும். ஆனால் தமிழக மக்களின் மனங்களில் முத்துக்குமரன் முதலான தியாகிகளினால் மூட்டப்பட்ட தீ கனன்று கொண்டேயிருக்கிறது. சீமான் போன்றொர் சிறைப்பிடிக்கப்பட வேண்டுமென அதுவரையில் ஆர்பரித்த அதிமுக தலைவி கூட ஈழத்தமிழர்களுக்காக எழுந்திருக்கும் ஆதரவு கண்டு, அடையாள உண்ணாவிரதமிருந்தார்.

இந்நிலையில்தான் என்று மில்லாதவாறு தமிழக அரசியற்களத்தில் ஈழப்பிரச்சனை முக்கிய வகிபாகம் வகிக்கத் தொடங்கியிருப்பது வெளிப்படத் தொடங்கியது. தேர்தற்பிரச்சாரக் களேபரங்கள் தொடங்க முன்னமே, அரசியல் மாற்றம் விரும்பும் அமைப்புக்களும், ஈழ ஆதரவாளர்களும், இனைந்து கொண்டு , மேடை போட்டு முழங்காமல், வீடு வீடாய் வித்தியாசமான பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். ஈழத்தில் சிங்கள அரசு செய்து வரும் கொடுமைகளை சீடீக்களாகத் தயாரித்து விநியோகிக்கத் தொடங்கிய போது, வித்தியாசமான இப்பிரச்சாரத்தின் விளைவு பெரிதாக இருக்குமோ என அரசியற்கட்சிகள் சார்ந்தோர் சற்று அதிரத் தொடங்கினர். குறிப்பாகக் காங்கிரசுக்கும் , திமுகவுக்கும் எதிரான பல வீடியோ சீடீக்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது. அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் இச்சீடிக்களின் பரப்புரை கிராமக்களின் மனதில் பெரிதும் தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடுமென எதிர் பார்க்கப்படுகிறது.

ஈழத்திற் குறிப்பிட்ட சில நாட்களுக்குள் யுத்தம் முடிவுக்கு வந்துவிடுமெனவும், விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு விடுவார்களெனவும், எண்ணிக் கணக்கிட்டிருந்த மத்தியில் ஆட்சியிலிருக்கும் காங்கிரசக்கு, அது எண்ணியவாறு முடிவுக்கு வராதது எதிர்பாரதவொன்றே. தமிழகத்தேர்தற் களத்தில் ஈழப்பிரச்சனை என்றுமில்லாதவாறு இடம்பிடித்திருக்கும் சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சி மத்தியில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள தமிழகத்தில் தன் வெற்றியை உறுத்திப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. தமிழக காங்கிரசும், திமுகவும், மத்தியிலுள்ள காங்கிரஸ் தலைமைக்கு தமிழக நிலையை தெரியப்படுத்தியிருக்க வேண்டும். இதனால் மாற்றங்கண்டுள்ள தமிழக மக்களின் மனதில் காங்கிரசும், திமுகவும், இடம்பிடித்துக்கொள்ள இலங்கையில் போர் நிறுத்தம் என்ற துருப்புச் சீட்டைப் பாவிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்காக அவர்கள் இலங்கை அரசை வற்புறுத்தவும் கூடும். சர்வதேச சமூகமும் போர்நிறுத்த மொன்றுக்கு இலங்கை அரசை வற்புறுத்திருக்கும் சூழலில், இது இருபக்க நன்மை தரும் என்ற கணக்கில் , இப்போ போர் நிறுத்தம் வேண்டுமென்கிறது. ஆனால் போர் நிறுத்தம் ஒன்று மட்டும் ஈழத்தமிழரின் பிர்ச்சனைக்குத் தீர்வாகி விடாது என்பதும், தேர்தல் முடிந்தபின் திரும்பவும் போர் முன்னனெடுப்புக்களைச் செய்யலாமென்பதும் காங்கிரசின் கணக்காக இருக்கக் கூடும். ஆதலால் காங்கிரஸ் தலைமை தற்போது கோரும் போர்நிறுத்தம் என்பது , தமிழகத்தில் காங்கிரசுக்கான ஒரு தேர்தல் பிரச்சார உத்தியென்பதைத் தவிர வேறில்லை.

புதுவகைத்தேர்தற்பிரச்சாரம் .

திமுக, காங்கிரசுக்கெதிரான வீடியோ சீடிக்கள் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்படுவதும்,ஆத மக்கள் மத்தியில் செலுத்தும் செல்வாக்கையும் பார்த்து ஏனைய கட்சிகளும் அம்முயற்சியில் தற்போது இறங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. 'புதிய கண்ணகி', 'புதிய பராசக்தி', 'இனி என்ன செய்யப் போகின்றோம்', 'யாருக்கு வாக்களிக்கப் போகின்றோம்' என்னும் தலைப்புக்களில் ஏற்கனவே உலாவும் சீடிக்களில் காங்கிரசும் , திமுகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறது. இப்போ ' வணங்கா மண்' எனும் பெயரி இன்னுமொரு சீடி வெளிவந்திருப்பதாக அறிகின்றோம். எமக்கு மின்னஞ்சல் வழி கிடைக்கப்பெற்ற அந்த வீடியோவைப் பார்த்த போது, வேடிக்கையாகவும் விபரீதமாவும் தெரிந்தது. புரட்சித் தலைவர் எம்ஜீஆர் நடித்த மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் வரும் பாடற் காட்சிகளுடன் 'வணங்கா மண் ' மனிதாபிமானக் கப்பலில் தொடங்கி விடுதலைப்புலிகளின் கொடி, தலைவர், என பல்வேறு காட்சிகள் வருகின்றன. விடுதலைப்புலிகளைப் போராளிகள் என ஏற்றுக் கொள்ளாத புரட்சித்தலைவி, விடுதலைப்புலிகளின் கொடிக்கு சல்யூட் அடிப்பது போலவும், வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் வேடிக்கையாகவும் இருக்கின்றன. ஆனால் அதற்குள் விபரீதமும் மறைந்திருப்பதாகவே தென்படுகிறது.

அந்த வீடியோவைப் பார்க்க

http://4tamilmedia.com/index.php?option=co...s&Itemid=47

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.