Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிசின் பிரதான நகரங்களில் தொடர் கவனயீர்ப்பு போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிசின் பிரதான நகரங்களில் தொடர் கவனயீர்ப்பு போராட்டம்

[புதன்கிழமை, 08 ஏப்ரல் 2009, 03:25 பி.ப ஈழம்] [சுவிஸ் நிருபர்]

சுவிஸ் நாட்டின் பேர்ண் மற்றும் சூரிச் நகரங்களில் தமிழர்கள் நடத்திவரும் தன்னெழுச்சியான போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

பேர்ண் நகரில் அமைந்துள்ள நாடாளுமன்ற முன்றலிலும் சூரிச் தொடருந்து நிலையத்தின் அருகிலும் நேற்று முன்நாள் திங்கட்கிழமை ஒன்றுகூடிய தமிழர்கள் கவனயீர்பு போராட்டத்தினை நடத்தினர்.

இப்போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான சிறுவர், இளையோர், வயோதிபர்கள் என வயது வேறுபாடின்றி எழுச்சியுடன் கலந்துகொண்டனர்.

swiss_20090408001.jpg

swiss_20090408002.jpg

swiss_20090408003.jpg

அதேவேளையில் சூரிச் நகரில் சுவிஸ் நாட்டவர்கள், தென் ஆபிரிக்கர்கள், இந்தியர்கள், சீனா நாட்டு மக்களும் கலந்து கொண்டு ஈழத் தமிழருக்கு ஆதரவாக எழுச்சிகரமான முழக்கங்களை எழுப்பினர்.

அத்துடன், கொல்லப்பட்ட தமிழீழ மக்களுக்கு வணக்கம் செலுத்தும் வகையில் மெழுகுவர்த்திகளை ஏற்றி, கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் மக்களுக்கு தங்களின் அனுதாபத்தை ஒலிபெருக்கி மூலம் எடுத்து உரைத்தனர்.

சுவிசின் இரண்டு பிரதான நகரங்களிலும் கூடிய மக்கள், வன்னியில் சிறிலங்கா இனவெறி அரசின் கொலைக்கரங்களுக்குள் சிக்குண்டிருக்கும் ஈழத் தமிழர்களை உடனடியாக காத்திட சுவிஸ் அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் எனவும்

விடுதலைப் புலிகள் மீதும் பொதுமக்கள் மீதும் சிறிலங்கா அரசானது இரசாயன நாசகார எரிகுண்டுகளை ஏவி விடுவதை தடுப்பதற்கு சுவிஸ் அரசானது உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

swiss_20090408004.jpg

swiss_20090408005.jpg

swiss_20090408006.jpg

அத்துடன் வன்னியில் சிறிலங்கா கொலைகார இராணுவத்தோடு மறைந்திருக்கும் இந்திய இராணுவமும் ஈழத்தமிழ் மக்களை கொன்றொழித்து வருகிறது என்றும்

சிறிலங்கா அரசின் கொலைவெறி தாண்டவத்திற்கு இந்தியா பரிபூரண ஆதரவை வழங்கி வருகின்றது எனவும் முழக்கங்களை எழுப்பியதோடு அவற்றை நிறுத்தவும் கோரினர்.

காவல்துறையினரின் அனுமதி பெறப்படாமல் பல நூற்றுக்காணக்கன மக்கள் வந்ததைக் கண்ட காவல்துறையினர் அவர்களின் மனவேதனையை புரிந்து கொண்டதன் பிற்பாடு அங்கு நிற்பதற்கு அனுமதியளித்தனர்.

தொடர்ந்தும் நேற்று பேர்ண் நாடாளுமன்றத்தின் முன்பாகவும் ஜெனீவா ஜ.நா. முன்றலிலும் 14:00 மணிக்கு தொடங்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் பல நூற்றுக்காணக்கன மக்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டு தங்களின் முழக்கங்களை எழுப்பினர்.

சுவிஸ் நாட்டில் தொடங்கியுள்ள தமிழீழ மக்களின் கவனயீர்ப்பு போராட்டமானது தொடர்ந்தும் ஜெனீவா மற்றும் பேர்ண் நகரங்களில் 08, 09, 11 ஆம் நாட்களில் நடைபெறும் என்பதனையும் தெரிவித்திருக்கின்றனர்.

swiss_20090408007.jpg

swiss_20090408008.jpg

swiss_20090408009.jpg

_________________

மூலம்: புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Suiss%20070409%2005.jpg

Suiss%20070409%2012.jpg

Suiss%20070409%2007.jpg

Suiss%20070409%2010.jpg

Suiss%20070409%2009.jpg

________________

மூலம்: சங்கதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.